பாளையக்காரர்கள் ஜமீனாக இருந்த காலத்தில், ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கு சம உரிமை கொடுத்தனர் என்பதை விளக்கும், கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.
நெகமம் அடுத்த சின்ன நெகமம் கிராமத்தில் அமைந்துள்ளது, ஸ்ரீசெல்வ சென்ராயப் பெருமாள் கோவில். இக்கோவில் தெற்குப்புறமுள்ள சுவரில் இருந்த கல்வெட்டை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்த நிலையில், புதிதாக கோவிலின் வடக்கு மற்றும் மேற்குப்புற சுவரில் இருக்கும் கல்வெட்டை, கோவையை சேர்ந்த கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் ஆய்வாளர் ரமேஷ் கண்டறிந்துள்ளார்.அவர் கூறியதாவது:கோவில் அர்த்த மண்டபத்தில், சுண்ணாம்பு பூசப்பட்டிருந்த சுவற்றில் கல்வெட்டு காணப்பட்டது. சுண்ணாம்பு பகுதியை சுத்தம் செய்து பார்த்தபோது, எழுத்துக்கள் தெளிவாக தெரிந்தன. அதில், 'உசர்வாரி வருடம் ஆவணி மாதம் 21ம் தேதி பெரிய நெகமத்தில் இருக்கும், காணியாளருடைய சேரக்குல வம்சத்தில் குமாரசாமி பிள்ளையின் புத்திரர்களில் பூமி நாத பிள்ளை என்கிறவர், நெகமம் பாளையக்காரராகிய முத்து வல்ல கெண்டம தேவய நாயக்கருடைய எசமானி வெள்ளையம்மாள் உத்தரவு பிரகாரம்.சின்ன நெகமம் ஸ்ரீசென்ராயப் பெருமாளுக்கு அஷ்த்தகிரி கருங்கல், கற்பகிரி மகா மண்டபம், துளசி மண்டபம், தீர்த்த கிணறு, கல்கருட கம்பம், பொங்கு மடப்பள்ளி, துாங்கு மஞ்சத்தொட்டி, நகரை சுத்தி மதில் எழுப்பியதில் அடங்கலான வேலைகளையும், மேற்படி எசமானி வெள்ளையம்மாள் உத்தரவு பிரகாரம் வேலைகள் முடித்து வைத்த கொடை உபயம்,' என கல்வெட்டு செய்தியாக உள்ளது. கல்வெட்டையும், அதில் உள்ள எழுத்துக்களை ஆய்வு செய்ததில், கல்வெட்டு காலம் கி.பி., 1840ம் ஆண்டு என தெரிகிறது.
மேலும், ஆவணி மாதம் என குறிக்கப்பட்டுள்ளதால், ஆகஸ்ட் மாதத்தில் கல்வெட்டு எழுதப்பட்டுள்ளது.ஏற்கனவே இருந்த கோவில் சிதிலமடைந்த காரணத்தால், கோவில் புனரமைக்கும் பணி, 1840ல் நடந்துள்ளதை இக்கல்வெட்டுகள் மூலம் தெரியவருகிறது. ஆங்கிலேயர் ஆட்சியில், பாளையக்காரர்கள் ஜமீன்தார் முறையில் வாழ்ந்துள்ளனர். அப்போது, ஆண்களுக்கு நிகராக பெண்களும் தனது அதிகாரத்தை செலுத்தியுள்ளனர் என்பதற்கு சாட்சியாக, இக்கல்வெட்டு குறிப்பு விளக்குகிறது
நன்றி : தினமலர் ..செந்தில்ராம் ....ஜூலை 28....2019....
நெகமம் அடுத்த சின்ன நெகமம் கிராமத்தில் அமைந்துள்ளது, ஸ்ரீசெல்வ சென்ராயப் பெருமாள் கோவில். இக்கோவில் தெற்குப்புறமுள்ள சுவரில் இருந்த கல்வெட்டை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்த நிலையில், புதிதாக கோவிலின் வடக்கு மற்றும் மேற்குப்புற சுவரில் இருக்கும் கல்வெட்டை, கோவையை சேர்ந்த கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் ஆய்வாளர் ரமேஷ் கண்டறிந்துள்ளார்.அவர் கூறியதாவது:கோவில் அர்த்த மண்டபத்தில், சுண்ணாம்பு பூசப்பட்டிருந்த சுவற்றில் கல்வெட்டு காணப்பட்டது. சுண்ணாம்பு பகுதியை சுத்தம் செய்து பார்த்தபோது, எழுத்துக்கள் தெளிவாக தெரிந்தன. அதில், 'உசர்வாரி வருடம் ஆவணி மாதம் 21ம் தேதி பெரிய நெகமத்தில் இருக்கும், காணியாளருடைய சேரக்குல வம்சத்தில் குமாரசாமி பிள்ளையின் புத்திரர்களில் பூமி நாத பிள்ளை என்கிறவர், நெகமம் பாளையக்காரராகிய முத்து வல்ல கெண்டம தேவய நாயக்கருடைய எசமானி வெள்ளையம்மாள் உத்தரவு பிரகாரம்.சின்ன நெகமம் ஸ்ரீசென்ராயப் பெருமாளுக்கு அஷ்த்தகிரி கருங்கல், கற்பகிரி மகா மண்டபம், துளசி மண்டபம், தீர்த்த கிணறு, கல்கருட கம்பம், பொங்கு மடப்பள்ளி, துாங்கு மஞ்சத்தொட்டி, நகரை சுத்தி மதில் எழுப்பியதில் அடங்கலான வேலைகளையும், மேற்படி எசமானி வெள்ளையம்மாள் உத்தரவு பிரகாரம் வேலைகள் முடித்து வைத்த கொடை உபயம்,' என கல்வெட்டு செய்தியாக உள்ளது. கல்வெட்டையும், அதில் உள்ள எழுத்துக்களை ஆய்வு செய்ததில், கல்வெட்டு காலம் கி.பி., 1840ம் ஆண்டு என தெரிகிறது.
மேலும், ஆவணி மாதம் என குறிக்கப்பட்டுள்ளதால், ஆகஸ்ட் மாதத்தில் கல்வெட்டு எழுதப்பட்டுள்ளது.ஏற்கனவே இருந்த கோவில் சிதிலமடைந்த காரணத்தால், கோவில் புனரமைக்கும் பணி, 1840ல் நடந்துள்ளதை இக்கல்வெட்டுகள் மூலம் தெரியவருகிறது. ஆங்கிலேயர் ஆட்சியில், பாளையக்காரர்கள் ஜமீன்தார் முறையில் வாழ்ந்துள்ளனர். அப்போது, ஆண்களுக்கு நிகராக பெண்களும் தனது அதிகாரத்தை செலுத்தியுள்ளனர் என்பதற்கு சாட்சியாக, இக்கல்வெட்டு குறிப்பு விளக்குகிறது
நன்றி : தினமலர் ..செந்தில்ராம் ....ஜூலை 28....2019....


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக