செவ்வாய், 12 மே, 2020

கேள்வி :.மனைவியின் தொல்லை தாங்க முடியவில்லை என்று கணவர்கள் புலம்புவது ஏன்? அப்படி என்ன, ஏன் தொல்லை கொடுக்கிறார்கள் மனைவிகள்?

என் பதில் :..


நம்ம கதையையே இங்க சொல்லலாம். இரவில் படுக்கும் முன் என் மனைவி "நாளைக்கு காலைல ஞாபகப்படுத்துங்க" என்றார். நான் "என்ன ஞாபகப்படுத்தணும்?" பதில் வந்தது "அதை காலைல சொல்றேன்".

 காலையில் ஞாபகப்படுத்தினால் "என்ன விஷயம்?" என்றார். நான் "ஒன்றுமில்லை" என்றேன். "ஏதாவது லூசுத்தனமா உளற வேண்டியது" பதில் வந்தது. மறுநாள் வெளியே வந்து இருந்தேன். ஃபோன் வந்தது.


"எங்க இருக்கீங்க?" ஃபோன் எடுத்தவுடனே "ஹலோ" கூட இல்லை "எங்க இருக்கீங்க?" இது எல்லா மனைவிகளும் செய்வது.


"சொல்லுமா.. என்ன வேணும்?"


மறுபடியும் "எங்க இருக்கீங்க?"


கடுப்பாகி "சொல்லு…என்ன வாங்கணும்?"


"எங்க இருக்கீங்க னு சொன்னாதானே என்ன வாங்கணும்னு சொல்ல முடியும்".


"மார்க்கெட் ல இருக்கேன்"


"அங்க ஒன்னும் வேலையில்லை. மளிகைக் கடைக்கு வந்துட்டு ஃபோன் பண்ணுங்க".


"மளிகைக் கடைக்கு வந்துட்டேன்".


"வெளியே தானே (social distance) நிக்கிறீங்க? கடைக்கு உள்ளே போனதும் கால் பண்ணுங்க"


"கடைக்குள்ள வந்துட்டேன்"


"நான் சொல்றதெல்லாம் வாங்கனும்" 10 அயிட்டம் சொன்ன மாதிரி இருந்தது. பொருட்கள் எடுத்தபின் கணக்கு பண்ணி பார்த்தேன். 8 தான் இருந்தது. மீண்டும் ஃபோன் செய்து கேட்டால் ஒரே புலம்பல்.

"ஒரு பத்து சாமான் ஞாபகமாக வாங்க முடியல உங்களையெல்லாம் என்ன பண்றது?" பிரச்சினை என்ன என்றால் அவங்களுக்கு மறந்து விட்டது. அதை சமாளிக்க என் மீது பழியை தூக்கி போடுவது.


இப்போது உஷாராக கிளம்பும் போதே பேப்பரில் எழுதி வைத்து கொண்டு கிளம்புவேன். பேப்பரில் இருப்பது மட்டும் வாங்கி கொண்டு வருகிறேன். இதுபோல காய்கறிகள் வாங்குவது அது தனியாக ஒரு பதிவு எழுத வேண்டும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக