கேள்வி : ஒரு மகளுக்கும் தந்தைக்குமான உறவு எவ்வளவு ஆழமானது மற்றும் அழகானது என கவித்துவமாக கூற முடியுமா?
என் பதில் :...கோவையில் பணியில் இருந்தபொழுது என் வாடிக்கையாளர் வருவது கொஞ்சம் தாமதம் ஆனதால் ..சாய்பாபகாலணி பஸ் நிறுத்தம் அருகே நின்றுகொண்டிருந்தேன் ....நானும் ஏதோச்சையாக அவர்களை கவனித்துக்கொண்டிருந்தேன் ...
. வித்தியாசமாக தெரிய அவர்களை ஊன்றி கவனித்தேன்.. .
அந்த பெண் நிறை மாத கர்பிணியாக இருப்பதால் ஜடை தைத்து போட்டோ ஸ்டூடியோவுக்கு சென்று போட்டோ எடுத்து, தன் கணவன் வீட்டுக்கு செல்ல பஸ ஏறுவதற்காக காத்திருக்க, பக்கத்தில் அறுபது வயது மதிக்க தக்க அந்த பெண்ணின் ஏழை தந்தை.
"எல்லாம் சரியா பைல மறக்காம எடுத்து வச்சிருக்கியமா"? என்று கேட்டு கொண்டிருக்க, அவர் முயன்றும் அடக்க முடியாமல் கண்ணீர் வழிய, ..
அந்த பெண் "எல்லாம் சரியா இருக்கும் பா, நீங்க உடம்ப பாத்துக்குங்க "
அந்த பெரியவர் தான் கண்ணாடியை , கழற்றி, கண்ணை மீண்டும் துடைத்து, வீட்டுக்கு போய் போன் பண்ணுமா? என்று சொல்லிக்கொண்டு தான் பையில் தேடி, மிச்சம் மீதி காசினை மகள் கையில் திணிக்க..
அவசர அவசரமா, "வீட்லதான் கொடுத்தீங்களேப்பா, அது இருக்கு "என்று மறைந்த தான் தாயின் உருவில் தன் அப்பாவை பார்க்க
இந்த முக்கியமான நேரத்தில் தன்னுடைய மனைவி இல்லையே என்று நினைத்து தந்தை கலங்க
தான் போய் விட்டால் தன் தந்தை ஒற்றை ஆளாய் என்ன படுபடுவாரோ என்று அந்த பெண் கண்ணீர் விட..
பஸ், பஸ் நிலையத்தில் நுழைந்தது, வயதான தந்தை, தான் முதுமையை பொருட்படுத்தாமல், அந்த பஸ்சில் முண்டியடித்து ஏறி, தன் பெண்ணுக்கு உட்காருவதற்கு சீட் பிடிக்க..
பஸ் நகர ஆரம்பித்தது "ஜாக்கிரதையா பாத்துகோமா ' என்று சொல்லிக்கொண்டே தந்தை பஸ் பின்னே ஒட.
தன் தந்தை ,பின்னே ஓடி வருவதை தலையை திருப்பி அடக்க முடியாத காண்ணீருடன், பெண் தன் கையை ஆட்டி விடை கொடுக்க..
இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த, என் கண்களில் கண்ணீர் துளிர்த்ததை தடுக்க முடியவில்லை !
தந்தை ..மகள் ...பாசம் ..தாய் இல்லாமல் முதன்முறையாக பார்த்தது ..
நன்றி ...
என் பதில் :...கோவையில் பணியில் இருந்தபொழுது என் வாடிக்கையாளர் வருவது கொஞ்சம் தாமதம் ஆனதால் ..சாய்பாபகாலணி பஸ் நிறுத்தம் அருகே நின்றுகொண்டிருந்தேன் ....நானும் ஏதோச்சையாக அவர்களை கவனித்துக்கொண்டிருந்தேன் ...
. வித்தியாசமாக தெரிய அவர்களை ஊன்றி கவனித்தேன்.. .
அந்த பெண் நிறை மாத கர்பிணியாக இருப்பதால் ஜடை தைத்து போட்டோ ஸ்டூடியோவுக்கு சென்று போட்டோ எடுத்து, தன் கணவன் வீட்டுக்கு செல்ல பஸ ஏறுவதற்காக காத்திருக்க, பக்கத்தில் அறுபது வயது மதிக்க தக்க அந்த பெண்ணின் ஏழை தந்தை.
"எல்லாம் சரியா பைல மறக்காம எடுத்து வச்சிருக்கியமா"? என்று கேட்டு கொண்டிருக்க, அவர் முயன்றும் அடக்க முடியாமல் கண்ணீர் வழிய, ..
அந்த பெண் "எல்லாம் சரியா இருக்கும் பா, நீங்க உடம்ப பாத்துக்குங்க "
அந்த பெரியவர் தான் கண்ணாடியை , கழற்றி, கண்ணை மீண்டும் துடைத்து, வீட்டுக்கு போய் போன் பண்ணுமா? என்று சொல்லிக்கொண்டு தான் பையில் தேடி, மிச்சம் மீதி காசினை மகள் கையில் திணிக்க..
அவசர அவசரமா, "வீட்லதான் கொடுத்தீங்களேப்பா, அது இருக்கு "என்று மறைந்த தான் தாயின் உருவில் தன் அப்பாவை பார்க்க
இந்த முக்கியமான நேரத்தில் தன்னுடைய மனைவி இல்லையே என்று நினைத்து தந்தை கலங்க
தான் போய் விட்டால் தன் தந்தை ஒற்றை ஆளாய் என்ன படுபடுவாரோ என்று அந்த பெண் கண்ணீர் விட..
பஸ், பஸ் நிலையத்தில் நுழைந்தது, வயதான தந்தை, தான் முதுமையை பொருட்படுத்தாமல், அந்த பஸ்சில் முண்டியடித்து ஏறி, தன் பெண்ணுக்கு உட்காருவதற்கு சீட் பிடிக்க..
பஸ் நகர ஆரம்பித்தது "ஜாக்கிரதையா பாத்துகோமா ' என்று சொல்லிக்கொண்டே தந்தை பஸ் பின்னே ஒட.
தன் தந்தை ,பின்னே ஓடி வருவதை தலையை திருப்பி அடக்க முடியாத காண்ணீருடன், பெண் தன் கையை ஆட்டி விடை கொடுக்க..
இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த, என் கண்களில் கண்ணீர் துளிர்த்ததை தடுக்க முடியவில்லை !
தந்தை ..மகள் ...பாசம் ..தாய் இல்லாமல் முதன்முறையாக பார்த்தது ..
நன்றி ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக