ஞாயிறு, 23 ஜனவரி, 2022

 கேள்வி :  பயிர்க் காப்பீடு என்றால் என்ன? பயிர்க் காப்பீடு எங்கு எப்படிச் செய்வது?



என் பதில் : 


பயிர்க் காப்பீடு


நெல், கடலை போன்ற ஆண்டு பயிர்களை (Annual Crops) திடீர் மழை, வெள்ளம் அல்லது வறட்சியினால் சாகுபடி செய்ய முடியாமல் போகலாம். அப்படி பருவநிலை மாற்றம் அல்லது இயற்கை சீற்றத்தால் மகசூல் இழக்க நேரிடும்போது அல்லது முதலீட்டில் நஷ்டம் ஏற்படும் போது அதை ஈடுகட்ட அரசு உதவியுடன் வழங்கப்படுவது தான் பயிர்க் காப்பீடு தொகை.


தனி ஒரு விவசாயியின் இழப்புக்குப் பயிர்க் காப்பீடு வழங்கப்படுவதில்லை. ஒரு பகுதியில் பருவநிலை மாற்றம் அல்லது இயற்கை சீற்றத்தால் இழப்பு ஏற்பட்டு, அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயி பயிர்க் காப்பீடு திட்டத்தில் இணைந்திருந்தால் மட்டுமே அவருக்குக் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.

 

பயிர்க் காப்பீட்டிற்கென திட்டங்கள் பல உள்ளன. எந்தெந்த திட்டங்கள் எந்தெந்த பயிர்களுக்குக் காப்பீடு வழங்குகிறது என்பன போன்ற திட்டம் சார்ந்த விபரங்களை அந்தந்த பகுதியைச் சேர்ந்த விவசாயத் துறை அலுவலகத்தில் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். அங்குக் கொடுக்கப்படும் காப்பீடு திட்டத்திற்கான படிவத்தைப் பூர்த்தி செய்து இதற்கென்று அங்கீகரிக்கப்பட்ட கூட்டுறவு வங்கி அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ஒப்படைக்க வேண்டும். கூடவே அதற்கான பிரீமியம் தொகையையும் கட்ட வேண்டும். காப்பீடு திட்டத்தில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களையும் ஒப்படைக்க வேண்டும். 


பிரீமியம் தொகையானது, நிலத்தின் பரப்பளவு மற்றும் அங்கு விதைக்கப்பட்டிருக்கும் பயிர் வகையைக் கொண்டு நிர்ணயம் செய்யப்படுகிறது. காப்பீட்டுத் திட்டத்தைப் பொருத்து பிரீமியம் தொகையும் மாறுபடும். மத்திய மாநில அரசுகள் பிரீமியம் தொகைக்கு மானியமும் வழங்கும். காப்பீட்டுத் திட்டத்தில் இணைய விரும்புபவர்கள் அந்தத் திட்டத்தில் எப்போது இணைய வேண்டும் என்ற விபரங்களை அறிந்துகொண்டு, கொடுக்கப்பட்ட தேதிக்குள் தவறாமல் விண்ணப்பிக்க வேண்டும்.

 

பயிர்க் காப்பீடு குறித்த மேலும் தகவல்களுக்கு அதற்குரிய தமிழக அரசின் இணையதளத்தை அணுகலாம்.


பாதிப்பு ஏற்பட்ட பகுதிக்கு வேளான் துறை, வருவாய்த் துறை மற்றும் புள்ளியியல் துறை அதிகாரிகள் சென்று அறுவடை செய்து மகசூல் இழப்பைக் கணக்கெடுப்பார்கள். இழப்பைப் பொருத்து காப்பீட்டுத் தொகை வழங்கப்படும். மகசூலே இல்லாத நிலைக்குப் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அதற்குத் தகுந்த அளவு காப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.


 நடவு செய்து இயற்கை பேரிடர்களால் பயிர் செய்ய முடியாமல் போனாலோ அல்லது அறுவடை செய்த தானியங்கள், பயறு போன்றவற்றை உலர்த்த வைத்திருக்கும் பொழுது மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டாலோ அதற்கும் தக்க காப்பீட்டுத் தொகை வழங்கப்படும். இவை காப்பீடு திட்டங்களைப் பொருத்து மாறுபடும்.

 

ஒரு விவசாயி பயிர்க் காப்பீடு திட்டத்தில் இணைந்திருந்து, அவர் இருக்கும் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் மட்டுமே அவருக்குக் காப்பீடு தொகை கிடைக்கும். மொத்த பகுதியில் பாதிப்பு ஏற்படாமல், ஒரு தனி விவசாயிக்கு மட்டும் மகசூலில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அவர் காப்பீடு திட்டத்தில் இணைந்திருந்தாலும் காப்பீட்டுத் தொகையைப் பெற முடியாது. பாதிப்பு ஏற்பட்ட பகுதியில் விவசாயி இருந்து, காப்பீடு திட்டத்தில் இணையாமல் இருந்தாலும் காப்பீட்டுத் தொகை கிடைக்காது.”



உடுமலைப்பேட்டை -பில்லவநாயக்கன் சாலையூர் சொந்தம் குடும்ப விழா







 உடுமலைப்பேட்டை -பில்லவநாயக்கன் சாலையூர் சொந்தம் குடும்ப விழா 


இன்று காலை சதாசிவம் -கவிதா அவர்களின் புதல்வி SK  தனிஷ்கா பூப்பு நன்னீராட்டு விழா ..கரட்டுமடத்தில் மிக எளிமையாக குடும்ப சொந்தங்கள் சூழ நடைபெற்றது ..


இன்று விழாவிற்கு சென்றவுடன் முதலில் நம்ம கம்பள வரலாறு கார்த்தி SR யை தேடினேன் 

மாப்பிளை வந்தவுடன் ..அடுத்து எட்டயபுரம் ஜமீன் உசிலம்பட்டி அருமை தம்பி

கார்த்தி ஸ்மார்ட் தம்பியை தொலைபேசி வலைபோட்டு  வரவழைத்தேன் .ரெண்டு பேரும் சிங்கிளாக இருந்த பொழுது வீரம் ..குடும்ப பொறுப்புகள் வந்தவுடன் அவர்களின் நடை ..உடை ..பாவனை எல்லாம் மாறிவிட்டது ...குணம் மட்டும் மாறாமல் பேசிப்பின்பு மனா நிறைவாக இருந்தது ..


அருமை மாமா சாமிகுணம் அவர்களை சந்தித்து கடந்தவாரம் தின்னப்பட்டி குலதெய்வ கோவில் வரலாறை பதிவிட்டு இருந்தார் .மேற்படிப்பு படித்து அரசு பணியில் இருப்பவர்கள் யாரும் .படித்து ,வேலைவாய்ப்பு பெற்றவுடன் ..வளர்ந்தவுடன்  தங்களின் வளர்ந்த வரலாறுகளை மறந்துவிடும் தற்காலங்களில் மறந்து விடுகின்றனர் ..எந்த உயர்ந்த நிலைக்கு சென்றாலும் ..சாமிகுணம் மாமா அவர்கள் பாரம்பரியம் .பண்பாடு மாறாமல் குலதெய்வகோவிலின் வரலாறை மறக்காமல் பதிவிட்டதற்கு அதற்கு அவருக்கு நன்றி தெரிவித்தேன் .


காலைநேர உணவு அருமையான சேமியா,பொங்கல் ,கோதுமை ரவை தயிருடன் உடலுக்கு ஏற்ற சத்தான உணவை முடித்துவிட்டு வந்து அமர்ந்த போது ..அருமை தம்பி பொள்ளாச்சி -கொல்லப்பட்டி  தனியார் வங்கியில் பணிபுரியும் அருள் மற்றும் என் கொழுந்திய சாந்தி செந்தில்குமார் -ம் சந்தித்து பேசியது மிகுந்த மகிழ்ச்சி . அருள் தம்பியிடம் தற்பொழுது இருக்கும் சிறு -பெரு கனரக வாகனங்கள் வியாபாரம் நிலவரம் எப்படி உள்ளது கேட்டு அறிந்துகொண்டேன் .


முக்கியமாக வரலாறு புகைப்படம் எடுக்கவில்லைஎன்றால் எப்படி ..மகளுக்கு ஆசிர்வாதத்தை வழங்கிவிட்டு புகைப்படம் எடுத்து கொண்டது மிக்க மகிழ்ச்சி .


உடுமலைப்பேட்டையை தலைமையிடமாக பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் தம்பி எரிசனம்பட்டி முருகவேல் (நாமக்கல் ) தம்பியை சந்தித்து தற்பொழுது நாமக்கல் அருகில் கோழித்தீவனம் ஆராய்ச்சி மையம் பணி அங்கு நடைபெற்று வருவது ,அதற்கான பணிகளில் நடைபெற்று கொண்டுவருவது தகவலை அறிந்துகொண்டேன் .தற்பொழுது நடைபெற்ற கீர்த்திவீரர் எத்தலப்பர்  கடந்த எட்டு ஆண்டுகள் அதற்கான பணிகள் தற்பொழுது முடிய எப்படி நடந்தது என்று விலாவாரியாக நடந்ததை கூறும்பொழுது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது .காலங்கள் மாறினானாலும் வரலாறுகள் மாறுவதில்லை என்பதை தெரிந்துகொண்டேன் .


தமிழ்நாட்டு ஹாக்கி ஜூனியர் பிரிவில் விளையாடும் சுபாஷ் தம்பியுடன் தற்பொழுது கடைசியாக கலந்துகொண்ட ஹாக்கி விளையாட்டு போட்டியை கேட்டு அறிந்துகொண்டேன் .தம்பி உடுமலையில் முதலாம் ஆண்டு கல்லூரியில் படித்து கொண்டு தமிழ்நாட்டுக்காக விளையாடி கொண்டுள்ளார் .


நாடாகும் நிகழ்வுகளை சுற்றி பார்த்துக்கொண்டு இருந்தேன் ..பில்லவநாயக்கன் சாலையூரில் என் அப்பாவுடன் செல்லும் போது குடும்ப விழாக்கள் நடைபெறும் போது குறைந்தளவு சொந்தங்களே வருவார்கள்  எனக்கு சிறு வயது நினைவு ..தற்பொழுது ஒரு தலைமுறை வளர்ந்தவுடன் மேடையில் குழு புகைப்படம் எடுக்கும் பொழுது மிக பிரமிப்புஆக  இருந்தது குடும்ப உறவுகள் சிறு கிளைகளாக இருந்த என்று ஆலமரம் போன்று தங்களின் விழுதுகளை பரப்பி இருந்தது எனக்கு மனநிறைவு .

இன்று பொதுவேலைமுடக்கம் இருந்தாலும் குறைந்த அளவு சொந்தங்கள் மனா நிறைவாக வந்து பேசி குடும்ப உறவைகளை வளர்த்துக்கொண்டது தற்பொழுது இருக்கும் கடினமான வேலை பளு ,மன இறுக்கம் சற்று குறைந்து சொந்தங்களுடன் விடைபெற்று வந்தது அருமை.


நன்றி என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் 

9944066681.












புதன், 19 ஜனவரி, 2022

 

கேள்வி :  பங்குச் சந்தையில் ,பரஸ்பர நிதியில் ,முதலீடு செய்வது உங்கள் வாழ்க்கையை எப்படி மாற்றியது?



என் பதில் :



7 வருடமாக முதலீடு செய்கிறேன். முன்பு என் சேமிப்பு்நிலம் வீடு இவற்றில் இருந்த போது என் தேவைக்கு பணம் வேண்டியிருக்கும் போது வங்கியில்/தனியாரிடம் கடன் வாங்கி சமாளிப்பேன். 



இப்போது அந்நிலை இல்லை. மற்றும் என் பணம் பன் மடங்கு வளர்ந்ததால் என் ஓய்வு காலம் பற்றிய கவலை இல்லை.


நன்றி ..


சிவக்குமார்  V .K 

Sivakumar.V.K
Home Loan Consultant
(Home Loans,Home Loans To NRIs,Car Loans,Construction,Property Buy and Sell) 
Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com

CAR LOANS,MUTUAL FUND,FIXED DEPOSIT,HOME LOANS,INSURENCE


ஞாயிறு, 16 ஜனவரி, 2022

பைண்டிங் பிரஸ் அனுபவம் (1972 பள்ளி விடுமுறை)


கும்பகோணம் நினைவுகளில் முக்கியமான இடத்தைப் பெறுவது பள்ளிவிடுமுறையின்போது நான் பார்த்த பைண்டிங் பிரஸ் வேலை. அந்த அனுபவத்தைக் காண 50 ஆண்டுகள் பின்னோக்கிச் செல்வோம்.


1972. கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதி நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று விடுமுறையில் இருந்தபோது என் தாத்தா (திரு ரெத்தினசாமி) என்னை பெரிய கடை வீதியின் அருகில் உள்ள பாபுநாயக்கன் தெருவில் உள்ள, அவருடைய நண்பரின் கடையான கணேஷ் பைண்டிங் பிரஸுக்கு வேலைக்கு அனுப்பிவைத்தார். விடுமுறையை வீணாக்காமல் இருப்பதற்காகவும், நண்பர்களுடன் வெளியே சுற்றாமலிருக்கவும் இவ்வாறு செய்தார். காலை 10.00 மணி முதல் இரவு சுமார் 8.00 மணி வரை வேலை. மதிய சாப்பாட்டிற்கு வீட்டிற்கு வந்துவிடுவேன்.  


அங்கு தாள் வெட்டும் பொறி (கட்டிங் மெஷின்), கோடிடும் பொறி (ரூலிங் மெஷின்) உள்ளிட்டவை இருந்தன. அலுவலகங்களுக்கான கணக்குப்பதிவேடுகள் (அக்கவுண்ட் லெட்ஜர்ஸ்), கல்வி நிறுவனங்களுக்கான மாணவர்கள் பயன்படுத்தக்கூடிய நோட்டுகள் (பெரும்பாலும் சிறிய அளவிலான ஒரு குயர் நோட்டுகள்) போன்றவை தயாரிக்கப்பட்டு, நூற்கட்டு செய்யப்படும்.


தாத்தா சொல்லி நான் பிரஸில் வேலைக்குச் சேர்ந்தேன்.  அவர்களுக்கு தாத்தாமீது அளவு கடந்த மரியாதை. அதனடிப்படையில் எனக்கு வேலை இலகுவாக இருக்கும் என நான் நினைத்தேன். சேர்ந்து சில நாட்கள் எளிதான பணிகளே இருந்தன. 


பின்னர் ஒரு நாள் "தாத்தாவின் பெயரைக் காப்பாற்ற வேண்டும். கவனமாக வேலை பார்க்கவேண்டும்" என்று கூறி சிறு சிறு வேலைகளைக் கொடுக்க ஆரம்பித்தனர். ஆனால் அவை எனக்கு பெரிய வேலைகளாகத் தெரிந்தன.  வேலை பார்க்கும் இடத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள உதவுதல், தேநீர் வாங்குதல், பேப்பர் கடைக்குச் சென்று பேப்பரை வாங்கி வரல் போன்ற வேலைகள்.  தேநீர்க்கடையில் ஐந்து அல்லது ஆறு 'கிளாஸ்' தேநீரை  இரும்புக்கம்பியாலான 'ஸ்டான்ட்'டில் தருவார்கள். பிடியைப் பிடித்து அதனைத்  தூக்கிக்கொண்டு வரும்போது என்னவோ போல் இருக்கும். அனைவருக்கும் அதனைக் கொடுத்துவிட்டு, நானும் குடிப்பேன். அவர்கள் குடிக்கும்வரை நின்று, கிளாஸ்களை கடையில் திருப்பிக்கொடுப்பேன். என்னுடைய தினசரி வேலைகளில் ஒன்று. 


அடுத்த வேலை தாள் வெட்டல். தாள் வாங்க கரிக்காரத்தெருவில் (ஆஞ்சநேயர் கோயில் அருகில்) இருந்த ஒரு பேப்பர் கடைக்குச் செல்வேன்.பெரும்பாலும் ஒரு தடவைக்கு ஒரு ரீம் என்ற அளவில் வாங்கி அங்கிருந்து தலையில் பேப்பரைத் தூக்கிவைத்துக் கொண்டு வரவேண்டும். அவ்வாறு வரும்போது (எங்கள் ஆத்தாவின் தம்பி திரு பெரியசாமி அவர்களின்) ஷண்முக விலாஸ் மளிகைக்கடை, ஷண்முக விலாஸ் காப்பித்தூள் கடைகளைக் கடந்துவரும் சூழல் ஏற்படும். அக்கடைகளைக் கடக்கும்போது யாரும் பார்க்காமல் இருக்கவேண்டும் என்பதற்காக வேகமாக விடுவிடுவென நடப்பேன். இவ்வகையான வேலைகளைச் செய்யும்போது நான் ஒரு வேலைக்காரனைப் போல உணர்ந்தேன். அவ்வப்போது அவமான உணர்வு மேலிடும்.


நாளடைவில் தாள் வெட்ட உதவுதல், வெட்டும்போது வருகின்ற ஜல்லி எனப்படுகின்ற உதிரித்தாள்களை ஒதுக்கி ஓரிடத்தில் கொட்டுதல், ரூலீங் மிஷினில் மை போடல், தாள் சரியாக வெளியே வருகிறதா எனப் பார்த்தல், தவறாகவோ முழுமையான பதிவின்றியோ வரும் தாளைத் தனியாக எடுத்துவிடல், ரூல் போட்ட தாளை மடித்தல், (நம்பர் மெஷினை வைத்து) எண்ணிடல், தைத்தல், பதிவேட்டின் அட்டைக்கு வண்ணத்தாள் ஒட்டுதல்,  மூலைக் காலிகோ அல்லது முழு காலிகோ அட்டைகளுக்கு உரிய அளவில் பசை தடவித் தரல், நூற்கட்டு வேலைகள், நோட்டின் முதுகிலும் பிற பக்கங்களிலும் வண்ணத்தில் தோய்த்த நூலைக்கொண்டு டிசைன் போடுதல் என பட்டியல் நீளும்.    


அடுத்து, பைண்டிங் தொடர்பான வேலைகளில்  உதவுதல் என்ற நிலையில் அமைந்தது.   கட்டிங் மிஷினில் பெரிய அளவு தாளினை அடுக்கிவைத்து, தேவையான அளவிற்கு வெட்டுவர். ஒருவர் கீழே நின்று தாளை அளவு பார்த்து வைத்து, கைப்பிடியைச் சுற்றுவார். மற்றொருவர் தாளின் அழுத்தம் உறுதியாக இருக்க மேலே நின்றுகொண்டு ஒருவர் உருண்டையாக இருக்கின்ற அழுத்தம் தருகின்ற பகுதி மூலமாக மேலே நின்று அழுத்துவார். அதனைச் சுற்றச்சுற்ற தாள் இறுக ஆரம்பிக்கும்.  பின்னர் வலதுபுறத்தில் இருக்கின்ற கைப்பிடியோடு கூடிய உருண்டை வடிவப் பகுதியைச் சுற்றினால் பிளேடு கீழே இறங்கி தாளை வெட்டும். அவ்வாறு சுற்றும்போது மிகவும் வேகமாகவும் கவனமாகவும் சுற்றவேண்டும். அப்போதுதான் பிளேடு இறங்கி  தாளை வெட்டிவிட்டு திரும்பி ஏற வசதியாக இருக்கும்.  மேலே நின்று சுற்றும் வேலையையும், சில சமயங்களில் கீழே நின்று சுற்றும் வேலையையும் நான் செய்துள்ளேன்.  பிளேடு நம் பக்கம் வந்து காலை வெட்டிவிடுமோ என்று ஏறி நிற்க பயந்தேன். கவனக்குறைவால் திட்டு வாங்கியுள்ளேன். கீழிருந்து கைப்பிடியைச் சுற்றும்போதும், மேலிருந்து அழுத்தும்போதும் சில சமயங்களில் நெஞ்சு வலிக்கும். பின்னர் பழகிப்போனது.  


ரூலிங் மிஷின் சற்றே வித்தியாசமானது. அது சற்றொப்ப தறிபோடுவதைப் போலக் காணப்படும். இப்போது இது அருகிவிட்டது. சிறிய வடிவிலான பெட்டி போன்ற அமைப்பில் வண்ண மையை ஊற்றுவர். அதனை அடுத்துள்ள வளைவு போன்ற அமைப்பின் மூலமாக மை வெளிவந்து தாளில் கோடாக விழும். ஒரே சமயத்தில் பல வண்ணங்களில் கோடிட முடியும். அவ்வாறு செய்யும்போது ஒரு முறை வட்ட வடிவ, மை வரும் இடத்தில் கையைவிட்டு விரலில் ரத்தம் வந்துவிட்டது. பின்னர் என்னை எச்சரித்து கவனமாக இருக்கும்படி கூறினர். அதனையும் கற்றுக்கொண்டேன். பள்ளி மாணவர்களுக்கான ஒரு குயர் கணக்கு நோட்டு, வியாச (கட்டுரை) நோட்டு, இரண்டு கோடு மற்றும் நான்கு கோடு காப்பி நோட்டு அனைத்தும் அங்கு கோடிடப்பட்டு நூற்கட்டு (பைண்டிங்)  செய்யப்படுவதைப் பார்த்துள்ளேன்.  


அங்கு வேலை பார்த்த காலத்தில்தான் முதன்முதலாக தாளை வீணாக்கக்கூடாது என்பதை உணர்ந்தேன். தாளைத் தட்டி அடுக்குதல், எண்ணுதல், குறிப்பிட்ட எண்ணிக்கையில் பக்கங்களை ஒன்று சேர்த்தல்,  மடித்தல், தலைப்பு மாற்றி அடுக்குதல், மேலட்டை மற்றும் காலிகோவிற்காக (பசை தடவி) ஊறப்போடுதல் உள்ளிட்ட பல வேலைகளைக் கற்றுக்கொண்டேன். டீ வாங்கப்போவது, தாளைத் தலையில் தூக்கிகொண்டுவருவது, ஜல்லிகளை (வெட்டப்பட்ட தாள்களின் துண்டுகள்) விளக்குமாற்றால் கூட்டி ஒதுக்குவது போன்ற வேலைகளைச் செய்தேன். ஆரம்பத்தில் இவ்வேலைகளைச் செய்ய கௌரவம் பார்த்த நான் நாளடைவில் பார்க்கும் வேலையில்  கௌரவக்குறைவு இல்லை, நேர்மையும் ஈடுபாடும் முக்கியம் என்பதை உணர்ந்தேன். 


கிட்டத்தட்ட ஒரு மாதம் அங்கு பணியாற்றினேன். எவ்வித ஊதியமும் பெறவில்லை. ஆனால் பல வேலைகளைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பினைப் பெற்றேன். 


திம்மி 1க்கு 8 அளவினைவிட சற்றுச் சிறிய அளவில் (கிட்டத்தட்ட சுருக்கெழுத்து நோட்டைப் போன்ற) ஒரு சிறிய நோட்டை நானே நூற்கட்டு செய்யும் அனுபவத்தைப் பெற்றேன். அதனைத் தயாரிக்க எனக்கு மூன்று நாள்களாயின. ஒவ்வொரு நாளும் மதியத்தில் அனைவரும் சாப்பிடச் சென்றபின் நானே யாருடைய துணையுமின்றி தாளை எடுத்து கட்டிங் மிஷினில் வெட்டி, அட்டையையும் உரிய அளவு வெட்டி வடிவமாக்கி பின்னர் தைத்து, முதுகுப்பகுதியில் காலிகோ ஒட்டி முன் அட்டையிலும், பின் அட்டையிலும் வண்ணத்தாளையும் ஒட்டி உருவாக்கினேன். என் பெருமையைக் கூறுவதாக நினைத்து ஒருவரிடம் அதனைக் காண்பிக்க, அவர் அதனை எடுத்து அனைவரிடமும் காட்டிவிட்டார். பின்னர் நான் "யாரும் இல்லாதபோது இவ்வாறாக தனியாகச் செய்யக்கூடாது" என்று எச்சரித்தனர். அதே சமயம் அவ்வாறாக நான் செய்ததை எண்ணி என்னைப் பாராட்டினர்.


அறிஞர் அண்ணா அரசினர் பள்ளியில் சேர்வதற்காக அனைவரிடமும் நன்றிகூறிக் கிளம்பியபோது அனைவரும் என் பணியைப் பாராட்டினர். நன்றாகப் படிக்கவேண்டும் என்று வாழ்த்தி அனுப்பினர். இவ்வகையில் என்னுடைய எட்டாம் வகுப்பின் விடுமுறை நாட்கள் கழிந்தன.


இப்போது பைண்டிங் பிரஸ், தாள் வாங்கச் சென்ற கடை, சண்முக விலாஸ் கடை, தேநீர்க்கடை எதுவுமே இல்லை....ஆனால் நினைவுகள் மட்டும் தொடர்கின்றன.


முனைவர் ஜம்புலிங்கம் ..


புகைப்படம் நன்றி: ஜான் செபஸ்டியன்...

வியாழன், 13 ஜனவரி, 2022



அம்மாவின் காலை நேர கோலங்கள் ...


பொங்கலோ பொங்கல்!!!!


மார்கழி பூ பறிப்பதிலும், கோல மாவு பொடிப்பதிலும் , விரைவாக சென்றது. பொங்கல் கொண்டாடும் , அழகையும், ஆர்வத்தையும் , கிராமங்களில் தான் , . முழுமையாகக் காண முடிந்தது!( இப்போது எப்படி இருக்கிறது என்று தெரியவில்லை. முழு நாளும் டிவி முன்னால்  தானா?)


 

வீட்டில், அம்மா இதற்கான , வெண்கலப் பானையை பரணிலிருந்து எடுப்பார்கள்.  பொங்கல் முடிந்ததும், அது மேலே போய் விடும். அம்மா எப்போதும் 2 வகைப் பொங்கல் செய்வார்கள். சர்க்கரைப் பொங்கல் மற்றும் வெண் பொங்கல். பெரும்பாலான  வீடுகளில் , சர்க்கரைப் பொங்கல்  மட்டுமே செய்வர். அம்மாவிற்கு வெண்பொங்கல் பிடிக்கும். அதனால் செய்வார்கள் போலும். இரண்டு பொங்கலுமே , ருசியில் போட்டி போடும். நெய்யும், முந்திரியும் தாரளமாக இருக்கும். 3 வேளையும் , சாப்பிட்டு, பானை காலி ஆகும்! தமிழ் பாரம்பரியம் .....பொங்கலுக்கு முன் நம் வீட்டு பரணியில் இருந்து இறங்கும் பித்தளை பாத்திரங்கள் .....நம் தலைமுறை அம்மாக்கள் இருக்கும் வரை..எத்தனை கோடி சொத்து இருந்தாலும் ...பித்தளை பாத்திரங்களுக்கு ஈடாககாது ...பொங்கலை வரவேற்போம் ..


இந்த ஊரில் தான் , முதன் முறையாக , வீட்டு வாசலில், கோலம் போட்டு, அடுப்பு வைத்து, புதுப் பானையில்,கோலமிட்டு,(சுண்ணாம்பும், காவியும் தான் )


சூரியன் வெளிவரும் , சரியான சமயத்தில், பொங்கலில் பால், பொங்க வைத்ததைக் கண்டேன்.( சென்னையில்,  மண்  பானைகளில்,  கலர் கலராக பெயிண்ட் பண்ணி , விற்கிறார்கள். ) குண்டு குண்டாய் சிவப்பு கரும்புகள் , தோட்டங்களில் இருந்து, கட்டு கட்டாய் , வந்திறங்கும். ஒரு முழு கரும்பை, முழு மூச்சாய் , சாப்பிடுவோம்! பற்களினால் கடித்து, தோலை நீக்கி, பின் கரும்பை சுவைப்போம்!! அதுதானே,  பழக்கம்?


ஒரு வீட்டில், (வேறு ஒரு ஊரில்) கரும்பின் தோலைக் கத்தியால் சீவி, பின் துண்டு துண்டாக வெட்டி, தட்டில் போட்டு சாப்பிட்டதைப் பார்த்து சிரிப்பு தான் வந்தது. 


 4,5 பேராக , வாசலில் உட்கார்ந்து கொண்டு,  கதை பேசிய படியே , கரும்பைக் கடித்தால்,  சுவை  பல மடங்காக இருக்குமே? அந்த அனுபவத்தை இழந்தவர்க்கு என் அனுதாபங்கள்!!!!!



காணும் பொங்கல், அங்கு இன்னும் கலகலப்பாய் இருக்கும். புதுத் துணி உடுத்திக் கொண்டு, வித விதமான சித்திரான்னங்களை , வீட்டில் செய்து , தூக்கு சட்டியில்  எடுத்துக் கொண்டு, கோலத்தில் வைத்த ,பூவை வரட்டியாக செய்து சேமித்து  வைத்து இருந்ததையெல்லாம் , ஒரு மூட்டை கட்டிக் கொண்டு, ஊரின் எல்லையில், உடுமலைப்பேட்டை அமராவதிக் கரையில் உள்ள கோவிலுக்குக் கூட்டி சென்றனர். ஊரே காலி!  




திருவிழா தான் ! ஆற்றுப் படுகையிலேயே , சிலர் கூட்டான் சோறு ஆக்கிக் கொண்டு இருந்தார்கள்!  எல்லா வித பயறுகளையும், காய்கறிகளையும்  போட்டு, ஒரு கலவையான சோறு! அன்றைய ஸ்பெஷலாம் !!! கண்டதுமில்லை, கேட்டதுமில்லை அது நாள் வரை ! பலூனிலிருந்து, ஜவ்வு மிட்டாய், தின் பண்டங்கள் , வளையல், ரிப்பன் கடை எல்லாம் , முளைத்திருந்தன! செமையான வியாபாரம்! எல்லோரிடமும் காசு விளையாடிக்கொண்டு இருந்தது. பின், சாமி கும்பிட்டார்கள், குலவை  போட்டார்கள்! 

அனைவர்க்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் ..

புதன், 12 ஜனவரி, 2022

 “மார்கழிதான் ஓடிப்போச்சு”🌈🌧️🌱🌳🥰🙏


போகி என்றதும் நம் நினைவுக்கு வரும் பாடல் இதுவாகத்தான் இருக்கும்.


மகிழ்ச்சி, துக்கம், கேளிக்கை, கொண்டாட்டம்  என்று எல்லாம் கலந்த படைப்பு.


இந்த பாடல் முழுக்க முழுக்க தாளவாத்திய பாடல். போகியின்போது தெருவில் சிறுவர்கள் மெல்லிய ஈர்கிள் குச்சியால் அடிக்கும் மேள சத்தத்தை ஸநேர் ட்ரம்ஸ் என்று சொல்லப்படும் தாள கருவியில் எப்படி கொண்டு வர முடிந்தது என்று வியப்பிலாழ்த்தும் இசை.


முதலில் ஒற்றையாக ஒலித்து போக போக கூட்டு தாளமாக மாற 20 முதல் 29 நொடிகள் வரை குழல் நாட்டியமாடும். அதை தொடர்ந்து ‘ரிம் ஷாட்’ போல ஒரு ‘ஸ்டிக் ப்ளே’ வரும்.


குழலின் ஒலி பாடலின் கடைசியிலும் எட்டி பார்க்கும்.🥰🥰🥰🥰🥰🌈🌈🎙️🎙️🎙️


https://youtu.be/R0n1wDYxIxg

திங்கள், 10 ஜனவரி, 2022

 கேள்வி : 800 சதுர அடிகளில் ஒரு அழகிய வீட்டிற்கான திட்டத்தை யாரேனும் கூற முடியுமா? மனையின் நீளம் 52 அடி, அகலம் 17 அடி.


என் பதில் :


800 சதுர அடி இடம் என்பது வீடு கட்ட போதுமான அளவு இடமே. ஆனால் அந்த இடம் எப்படிப்பட்ட சாலை வசதிகளுடன் இருக்கிறது என்பதைப் பொருத்து வசதியான அழகான வீட்டைக் கட்ட இயலும்.


உதாரணமாக கீழ்க்கண்ட வகையில் கட்டலாம்.


கிழக்கு மேற்காக சாலை மனையின் வலது புறமாக இருந்தால் கிழக்கு நோக்கிய வாயில் அல்லது தெற்கு நோக்கிய வாயில் வைத்து கட்டலாம்.


வடக்கு தெற்காக சாலை மனையின் கிழக்குப்பக்கமாக இருந்தால் கிழக்கு நோக்கிய வாயிலுடன் அழகிய வசதியான வீட்டைக் கட்டலாம்.


கிழக்கு மேற்கான சாலை மனையின் இடதுபுறம் இருந்தால் வடக்கு நோக்கிய வாயிலுடன் அழகான வீட்டைக் கட்டலாம்.


தெற்கு வடக்கான சாலை மனையின் மேற்கு புறமாக இருந்தால் வடக்கு அல்லது மேற்கு நோக்கிய வாயிலுடன் அழகிய வீட்டினைக் கட்டலாம்.


வீடு அழகாக கட்டுவது எந்த திசையில் இருந்தாலும் கட்டலாம். அது நமக்கு இடையூறு இல்லாத வண்ணம் வசதியாகக் கட்ட மேற்கண்டவற்றைக் கணக்கில் கொண்டே வீட்டிற்கான திட்டம் கூற இயலும்


Sivakumar.V.K

Home Loan Consultant

(Home Loans,Home Loans To NRIs,Car Loans,Construction,Property Buy and Sell) 

Coimbatore,Pollachi, Udamalpet

Mobile --09944066681 Call or sms

siva19732001@gmail.com


சனி, 8 ஜனவரி, 2022

கேள்வி :  மணலுக்கு பதில் எம்சாண்ட் உபயோகித்தால் கட்டிடம் உறுதியாக இருக்குமா ? விஞ்ஞானப்பூர்வ பதில் என்ன?


என் பதில் :


Msand அதாவது கற்களை உடைத்து அதில் இருந்து எடுக்கும் பொருளை நாம் Manufacture Sand (Msand)என்கிறோம்.


மேலை நாடுகளில் இவை பயன்பாட்டில் உள்ளன. நமது நாட்டில் இன்று கட்டபடும் கட்டிடங்கள் அனைத்தும் இவை கொண்டு தான் கட்டப்படுகின்றன. ஆகவே நீங்கள் தாராளமாக Msand பயன்படுத்தலாம்.


கான்கிரீட் என்பது மண், ஜல்லி, சிமெண்ட், நீர், ஆகியவை சேர்ந்த ஒரு கலவை ஆகும்.


இதில் சிமெண்ட் ஒரு பசை போல செயல்பட்டு மண் மற்றும் ஜல்லி கற்களை பிடித்து கொள்கிறது.

நீர் புகாத முறையில் இவை அனைத்தும் சேர்ந்து ஒரு வேதி வினையை நிகழ்த்துகிறது.


இந்த வேதி வினை நிகழும் பொழுது அதிக படியான வெப்பத்தை வெளியிடுகின்றன.

இவற்றின் வெப்பத்தை தனிக்கவே கான்கிரீட் இட்டு சில மணி நேரம் கழித்து நீராற்றபடுகின்றன.

கான்கிரீட் தன்னுடைய முழு வலுவை அடைய 28 நாட்கள் ஆகும்.


இதில் மணல் என்பது ஜல்லி கற்களுடன் ஒட்டி பிடிக்க பயன்படுத்தும் பொருள் தான்.

ஆகவே நீங்கள் தாராளமாக Msand பயன்படுத்தலாம். ஆனால் இவற்றை வாங்கும் முன் அதன் தரத்தை உறுதி செய்து கொள்ளவும். சந்தையில் தரமற்ற Msand வலம்வருகின்றன.


மேலும் நீங்கள் பயன்படுத்தும் சிமெண்ட், மண், ஜல்லி,நீர், இவைகள் மட்டுமே உங்களுடைய கான்கிரீட்டை வலுப்பெற செய்யாது.


மாறாக நீங்கள் எந்த தரத்தில் concere தயாரிக்கிறார்கள் என்பது தான் கான்கிரீடை வலுப்படுத்தும். M20,M25,M30 என பல வகை உள்ளன வீடுகளுக்கு M20 போதுமானது.


நீங்கள் Msand பயன்படுத்த வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்தால் அதனுடன் Dr.Fixit LW+ என்ற வேதியல் பொருளை 1 சிமெண்ட் மூடைக்கு 200 ml என்ற விகித்தில் கான்கிரீட் கலைவயில் சேர்த்து கொள்ளுங்கள்.

இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் .


சிவக்குமார்  V. K 

Sivakumar.V.K

Home Loan Consultant

(Home Loans,Home Loans To NRIs,Car Loans,Construction,Property Buy and Sell) 

Coimbatore,Pollachi, Udamalpet

Mobile --09944066681 Call or sms

siva19732001@gmail.com

புதன், 5 ஜனவரி, 2022

கேள்வி : லிங்க்ட் இன் என்றால் என்ன? பயன்படுத்துவது எப்படி? பயன்கள் என்ன?


என் பதில் : 


முதலில் அந்தக் காலத்தில் நடைமுறையில் இருந்த சில ருசிகரமான விஷயங்களைப் பார்க்கலாம்:


நீங்கள் புது ஊருக்குப் போகிறீர்கள். வீட்டு வேலை செய்ய ஒருவர் வேண்டும். என்ன செய்வீர்கள்? அக்கம் பக்கத்தில் விசாரிப்பீர்கள். பின்னர் பரிந்துரைகளை ஏற்று, ஒருவரை வேலைக்கு சேர்ப்பீர்கள். இந்த முறையைத்தான் மளிகைக் கடை, பால் / பேப்பர் போடும் பையன், தண்ணீர் கேன் என்று அனைத்துக்கும் பின்பற்றுவீர்கள்.


கோவில், மற்றும் பொது இடங்களில் கீழ்க்கண்ட உரையாடல்களைக் கேட்டிருக்கலாம்:


பெண்மணி 1: நேத்திக்கி எங்க வீட்டில பட்சணம் செஞ்சோம். காமாட்சி அம்மா  செஞ்ச ஐட்டங்களெல்லாம் அவ்வளவு சூப்பர். உங்க வீட்டில ட்ரை பண்ணிப் பார்க்கலாம்.


பெண்மணி 2: போன வாரம் எங்க வீட்டில இறப்பு நிகழ்வுக்கு  சமைக்க வந்திருந்த அகல்யா காரியம் அவ்வளவு நேர்த்தியாக்கும்.


ஆண் 1: போன வாரம் வண்டி சர்வீஸுக்கு பாலன் கிட்ட விட்டேன். சொதப்பிட்டான். அவன் பண்ணின கோளாறுகளை சரி செய்ய தனியா செலவு செய்ய வேண்டியிருந்தது.


ஆண் 2: சார், என் கம்பெனியை கூடிய சீக்கிரம் மூடப் போகிறார்கள் என்று கேள்விப்பட்டேன். உங்களுக்கு நிறைய பேரைத் தெரியுமே. எனக்கு எங்காவது ஒரு வேலை வாங்கித் தாங்களேன்.


ஆண் 3: என் காரை விக்காலம்னு இருக்கேன்.


ஆண் 4: நம்ம ஆரிய  பவன் நெய் தோசை கட்டாயம் சாப்பிட்டே ஆக வேண்டும்.


லிங்க்ட்இன் கிட்டத்தட்ட இந்த மாதிரி ஒரு பெரிய தகவல் பரிமாற்று முறை என்று வைத்துக் கொள்ளலாம்.


மேலே குறிப்பிட்ட உதாரணங்கள் ஒரு “வாய்வழி லிங்க்ட்இன்” என்று சும்மனாக்காச்சியும் வைத்துக் கொள்ளலாம்.


லிங்க்ட்இன் இணையத்தில் உலகின் மிகப்பெரிய தொழில்முறை நெட்வொர்க் ஆகும். சரியான வேலை அல்லது இன்டர்ன்ஷிப் கண்டுபிடிக்க, தொழில்முறை உறவுகளை இணைக்கவும் மற்றும் வலுப்படுத்தவும், உங்கள் வாழ்க்கையில் வெற்றிபெறத் தேவையான திறன்களைக் கற்றுக்கொள்ளவும் நீங்கள் லிங்க்ட்இன் ஐப் பயன்படுத்தலாம். டெஸ்க்டாப், லிங்க்ட்இன் மொபைல் ஆப், மொபைல் இணைய அனுபவம் அல்லது லிங்க்ட்இன் லைட் ஆண்ட்ராய்டு மொபைல் செயலியில் இருந்து நீங்கள் லிங்க்ட்இன் ஐ அணுகலாம்.


அனுபவம், திறன்கள் மற்றும் கல்வி மூலம் உங்கள் தனிப்பட்ட தொழில்முறை “கதை”யை காண்பிப்பதன் மூலம் ஒரு முழுமையான லிங்க்ட்இன் சுயவிவரம் வாய்ப்புகளுடன் இணைக்க உதவும்.


ஆஃப்லைன் நிகழ்வுகளை ஒழுங்கமைக்கவும், குழுக்களில் சேரவும், கட்டுரைகள் எழுதவும், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இடுகையிடவும் மேலும் பலவற்றிற்கும் நீங்கள் லிங்க்ட்இன் ஐப் பயன்படுத்தலாம்.


நிறைய பேர் லிங்க்ட்இன் என்பது சாஃப்ட்வேர் (IT) இல் மட்டும் வேலை பார்ப்பவர்களுக்கானது என்றும், அது ஒரு வேலை வாய்ப்பு தளம் என்றும் (தவறாக) நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.


லிங்க்ட்இன் ஐ எவ்வாறு பயன் படுத்த வேண்டும்?


1. உங்கள் தொழில்முறை விவரங்களை பதிவு செய்ய வேண்டும். அதனைப் படிப்பவர்களுக்கு உங்கள் திறன் என்னென்ன என்று தெளிவாக விளங்க வேண்டும்.


2. உங்கள் தொழில்முறையில் சம்பந்தப்பட்ட (கிட்டத்தட்ட உங்கள் ஸ்கில்செட்) கொண்டவர்களை உங்கள் “குழு” வில் லிங்க்ட்இன் சேர்த்து விடும்.


3. இதனால், உங்கள் தொழில்முறை ஞானம் வேண்டும் என்று யாராவது தேடினால் உங்கள் பெயரும் தேடியவருக்கு காணக்கிடைக்கும்.


4. உங்களைப் பற்றி நீங்களே ஒசத்தியாகக் கூறிக் கொள்வதை விட ஒரு மூன்றாம் மனிதர் உங்களைப் புகழ்ந்து அறிமுகம் செய்தால் உபயோகமாயிருக்குமல்லவா - கரகாட்டக்காரன் படத்தில் செந்தில் ரூ10 கொடுத்து அவரை “தில்லானா மோகனாம்பாள் சிவாஜி மாதிரி வாசிக்கிறார்” என்று விளம்பரம் செய்வதைப்போல? உங்கள் மேலாளர் வகையறாக்களை “வேண்டி”, உங்களைப் பற்றி recommendation எழுதி வாங்கி லிங்க்ட்இன் தளத்தில் வைத்துக் கொள்ளலாம்.


கடைசியாக ஒரு வாக்கியத்தில் சொல்ல வேண்டுமென்றால் – லிங்க்ட்இன் ஒரு நபரின் தொழில் முறை திறமைகளயும், தொழில்முறை சாதனைகளையும் உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட உதவும் சுய விளம்பரத் தளம்.


நன்றி ..


திங்கள், 27 டிசம்பர், 2021

 உடுமலைபேட்டை அரசு கல்லூரி ...பொன்விழா ஆண்டு -1971-2021..

தொடக்கம் 

கம்பள சொந்தங்களை  முதல் பட்டதாரிகள் உருவாக்கிய கல்லூரி 


வேதியல் பட்டதாரி செந்தில்குமார்  ...


வழக்கறிஞர் சிவரஞ்சனி 


வாழ்த்துக்கள் 


கம்பளவிருட்சம் அறக்கட்டளை ..

உடுமலைப்பேட்டை 

வெள்ளி, 24 டிசம்பர், 2021

மனைவி.......!!

 மனைவி.......!!

எங்கோ பிறந்து வளர்ந்து திருமணம் என்ற ஒரு வாழ்க்கை உறவின் நூலின் வழியாக வாழ்வின் இறுதி வரை வரும் அவளின் நிஜமான தியாகம்

மறைக்கப்படுகிறது மறக்கப்படுகிறது.....!

பிறக்க வைத்து வளர்த்து

அவள் உடலை மறைக்க உடைகள் பல வாங்கித் தந்து அவளது பசிக்கு உணவு தந்து அவளை பத்திரமாகத் தூங்க வைத்து

அவளுக்கு இதுவரை அவளது உயிருக்கும் உடலுக்கும் பாதுகாப்பு தந்த அவளது பெற்றோர்கள்....!

சிறுவயதில் இருந்து அவளுக்கான சந்தோசங்களே வருத்தங்களையும் உணவு உடை இடம் பாதுகாப்பு எனப் பகிர்ந்த சகோதர சகோதரிகள் என அனைத்தும் ஒரு நாளில் விட்டு வரும் அவளின் தியாகம் இது பாதியே....இன்னும்..தொடரும்.?

கணவனுக்கு உடலும் மனமும்

தந்து அவன் வாழ அவனுக்கான வாழ்நாள் முழுவதும் அவனது பசி தீர்க்க உணவு சமைத்துப் பரிமாறி அவன் உடுத்தும் உடைகள் வாஷ் செய்து.....!

அவனது கரு எனும் குழந்தையை வயிற்றில் சுமந்து மூச்சு விடும் நொடிகளும் மிகப்பெரும் அவஸ்தையாக அதன் பின் அந்தக் கருவான குழந்தையைப் பெற்று எடுக்கும் ஜீவிதம் எனும் ஜனன மரண வலிகளே உணரும் தருணம் அவள் மனதில் வரும்

அந்த நொடி பெண் பிறப்பு என்பது

மிகச் சரியான ஒரு தவறான பிறப்பு என்று அவள் உணர்வாள்..!

வீட்டு வேலைகள் அதை செய்து முடித்த உடல் வலிகள் தொடர்ந்து கொண்டே ஒரு மனைவி கணவனுக்கு செய்யும் புனிதமான தாம்பத்யம் எனும் உடல் தேவைகள் சில நேரங்களில்

அதைச் சரி வர செய்ய முடியாமல்

(மாதவிடாய்) எனும் பெண்மையின் சாபமான இயற்கை வலிகளில்

அவஸ்தைப்பட்டு சொல்ல முடியாமல் அதனால் ஏற்படும் மனதின் வலிகள்....!

காலம் எனும் மாற்றத்தால் கூட மாற்ற முடியாது.....!

தன் மனைவியின் உடலை அடிக்கும் முன் ஒரு நொடி யோசிக்க வேண்டும்.....!

தன் வயிற்றுப் பசி தீர்க்க உணவு சமைத்து நிற்காமல் ஓடிக் கொண்டு இருக்கும் உடல்

தன் உடல் காமப்பசி தீர்க்க மனம் தரும் இந்த உடல் தன் கருவான பேர் சொல்லும் சந்ததியே அவளது வயிற்றில் சுமந்த அந்த உடல் தனக்காக தனது வாழ்நாள் முழுவதும் கஷ்டங்களையும் சந்தோசங்களையும் சரிபாதியாக பங்கிட்டு உடன் வரும் அவளது உடலுக்கு நாம் அவளை அடிப்பது சரியா என்று......!

இந்த உலகில் பாசத்தை வெல்ல முடியாத முதல் உறவு தாய் ஆனால் அந்த தாயயே மிஞ்சிடு்ம் உறவு மனைவி மட்டுமே....!

ஒரு தாய் வாழ்நாள் காலம் முழுவதும் உடன் வர முடியாது. கருவி்ல் சுமந்து பெற்று எடுத்து வளர்த்து ஆளாக்கிய தாயின் பாசம் நிகரற்றது.நாம் இறந்தாலும் அழுவது பாசத்தின் வெளிப்பாடு தெரியாத பேசாத பார்க்காத

நம்மை ஒரு திருமணம் என்று

ஒருநாளின் உறவில் அறிமுகமாகி

நாம் இறந்தாலும் அவளது வாழ்வின் இறுதி வரை நினைத்து துடிக்கும் உறவு மனைவியின் பாசத்தின் உணர்வு வார்த்தைகளில் சொல்ல முடியாத ஒன்று....!

ஒரு ஆணின் வாழ்வில் வாழ பெரும்பங்கு தாய் பாதி மனைவி. பாதி தாயின் துணை பாதிவரை மனைவியின் துணை அவன் வாழ்வின் இறுதி வரை

மனைவி ஒரு கணவனுக்கான

கடவுள் தந்த இன்னோரு கடவுள்..!!

எனக்கு உயிர் தந்த பெண் இனத்திற்கு நான் தரும் சிறு மரியாதை......

புதன், 22 டிசம்பர், 2021

 கேள்வி : தற்பொழுது உள்ள சூழ்நிலையில் பாதுகாப்பான முதலீடு எது என்று கூறமுடியுமா ..?



என் பதில் : 



 பங்குச்சந்தை வேண்டாம், பாதுகாப்பான முதலீடு எதாவது நல்ல வட்டிவிகிதத்தில் வேண்டும் என கேட்டால் எதுவுமே இல்லை என்பதுதான் நிஜம்.



வங்கிகளில் 5.5%வட்டிக்கு பக்கமாக கொடுக்கிறார்கள். ட்ரிபிள் ஏ ரேட்டட் பாண்டுபத்திரங்களில் 6% வருகிறது. கொஞ்சம் ரேட்டிங் குறைவான கம்பனிகளில் 10% வருகிறது. ஆனால் அவற்றில் முதலீடு செய்யமுடியுமா என்பது பயமான விசயம்தான்


பாண்டு மியூச்சுவல் பண்டுகளில் போடலாம் என்றால் வட்டிவிகிதம் அதிகரித்தால் முதலீட்டின் அசலே குறையும் வாய்ப்பு உண்டு.


மேலும் 5% வட்டி என்கையில் பணவீக்கம் 5% என்றால் நமக்கு நிகர இழப்புதான்

அதனால் பணத்தை சேமிக்க நல்லவழி வீட்டுகடன் வாங்குவதுதான்

எட்டு சதவிகிதம் வட்டி. பணவீக்கம் 5% என்கையில்  நாம் 3% வட்டிதான் கொடுக்கிறோம். சில ஆண்டுகளில் பணவீக்கம் 7% ஆக கூட இருக்கும்.


பத்து ஆண்டுகளுக்கு முன்பு வீடுவாங்கினேன். வீட்டுக்கு கட்டும் ஈ.எம்.ஐ தொகையை விட அபார்ட்மெண்ட் வாட்கைகள் 50% குறைவு


பத்தாவது ஆண்டில் இ.எம்.ஐ தொகை அதேதான். ஆனால் வாடகைகள் ஈ.எம்.ஐயை விட 50% கூடுதலாகிவிட்டன.


எல்லா ஊரிலும் இதுதான் நிலவரம் என சொல்லமுடியாது. ஆனால் வட்டிவிகிதம் இப்படி தரைமட்டத்தில் இருக்கையில் குறைந்தவட்டியில் வீட்டு கடன்வாங்குவதுதான் நல்ல சேமிப்பு 🙂



நன்றி 


சிவக்குமார் V K 


Sivakumar.V.K

Home Loan Consultant

(Home Loans,Home Loans To NRIs,Car Loans,Construction,Property Buy and Sell) 

Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com


செவ்வாய், 21 டிசம்பர், 2021

அப்பாவின் மலரும் நினைவுகள் ...சினிமா பாட்டு புஸ்தகம் ....... ✒📚
சின்ன வயது ஞாபகங்கள் என்று சொல்லும் போது சினிமா பாட்டு புத்தகம் மறக்க முடியாதது ஆகும். அப்போது புத்தகம் என்று சொல்ல மாட்டார்கள். புஸ்தகம் அல்லது பொஸ்தகம் என்றுதான் சொல்வார்கள். சினிமா பாட்டு புஸ்தகம் என்பது பழைய செய்தித்தாள் போன்ற ஒரு தாளில் ( சாணித் தாள் என்றே சொல்வார்கள் ) சினிமா பாடல்களை அச்சடித்து ஒரு அணா அல்லது இரண்டு அணா என்று விற்பார்கள். ஒரு சினிமாப் படம் வந்ததும் பாட்டு புத்தகமும் விற்பனைக்கு வந்துவிடும். அந்த புத்தகத்தின் அட்டைப் படம் பெரும்பாலும் அந்த படத்தின் அன்றைய போஸ்டரின் கறுப்பு வெள்ளை போட்டோ நகலாகத்தான் இருக்கும். உள்ளே அந்த படத்தின் நடிகர்கள், நடிகைகள், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என்று எல்லா விவரங்களையும் தந்து இருப்பார்கள். புத்தகத்தில் பாடலின் வரிகளை இஷ்டத்திற்கு வடிவம் கொடுத்து இருப்பார்கள். முக்கியமான அம்சம் படத்தின் கதைச் சுருக்கம் தந்து, கதாநாயகி என்ன ஆனாள்? கதநாயகன் கொலைகாரனைக் கண்டு பிடித்தானா? வில்லன் முடிவு என்ன? என்ற கேள்விகள் கேட்டு கடைசி வரியாக “ விடையை வெள்ளித் திரையில் காண்க” என்று முடித்து இருப்பார்கள். இது மறக்க முடியாத வாசகம்.
பெரும்பாலும் இந்த சினிமா பாட்டு புஸ்தகங்களை சினிமா தியேட்டருக்கு அருகில் உள்ள பெட்டிக் கடைகளிலும், பள்ளிகளுக்கு அருகில் உள்ள தரைக் கடைகளிலும் விற்பனை செய்வார்கள். அந்தகாலத்து பத்திரிக்கைகளில் வரும் தொடர்கதைகளை பைண்டிங் செய்வது போல, பாட்டு புத்தக பிரியர்களும் சினிமா பாட்டு புஸ்தகங்களையும் பைண்டிங் செய்து வைத்து இருப்பார்கள்.✍🏼🌹