கேள்வி : ஆறு மாதத்திற்கு ஒருமுறை பல் சுத்தம் செய்துகொள்ள வேண்டுமென்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இதைப் பற்றி தெரிந்தவர்கள் கொஞ்சம் விளக்கமாக கூறமுடியுமா?
என் பதில் :அருமையான கேள்வி ..நான் சொல்வதை விட பல் மருத்துவரிடம் கேட்டு பதில் அளித்தால் நன்றாக இருக்கும் ...எங்கள் அக்கா மகள் Dr .சொர்ணமாலா முருகராஜ் -திருப்பூர் ..அவர்கள் கொடுத்த பதில் ..நீங்கள் தெரிந்துகொள்வதற்காக ...
முதலில், தற்போது கிடைக்கும் உணவுகள் எல்லாம் கடிக்க மெதுவாக இருப்பதை நினைவில் கொள்ளவும். நீங்கள் பயங்கரமாக கடித்து சாப்பிட இங்கே தற்போது ஒன்றும் இல்லை. உடலை மட்டும் இல்லை, வாயை கூட சோம்பேறி ஆக்கி வைத்திருக்கு இந்த சமூகம்.
நீங்கள் எப்படி பல் துலக்கினாலும், floss செய்தாலும், பல்லில் உணவு துணுக்குகள், பிரியாணியில் உள்ள மட்டன் பீஸ் போல பல்லில் ஒட்டிக்கொள்ளும். அதை எடுக்க ஊக்கு தேடி பாதி உசிர் போய்விடும். உணவில் உள்ள சர்க்கரை ( even carbohydrates) உங்கள் பல்லை பதம் பார்த்து விடும். இதனால் தான் சாப்பிட்ட பின் வாயை தண்ணீர் கொண்டு கொப்பளித்து துப்ப சொல்கிறார்கள். இப்படி செய்தே திருடனை பாரதியார் விரட்டியதை மறக்க வேண்டாம்.
6 மாதம் ஒரு முறை பல் மருத்துவரிடம் காண்பிக்கும் பொழுது அவர் பல்லில் சொத்தை ஏதும் இருக்கிறதா, இல்லை வேறு ஏதும் பிரச்சனை இருக்கிறதா என்பதை பார்த்து கூறிவிடுவார். அது இல்லாமல் சில நேரம் தேனீர் அதிகமாக குடிப்பவர்களுக்கு மஞ்சள் காரை வாயினுள் அதிகமாக படிந்துவிடும் அதை மருத்துவரிடம் சுத்தம் செய்யலாம்.
ஒரு 200 ரூபாய் பல் மருத்துவரிடம் கொடுத்தால் நம் குடி முழுகிப் போய்விடாது. இதற்கும் உங்களுக்காக நீங்கள் செய்து கொள்ளும் முக்கியமான செலவு அது. விஜய் படம் அஜித் படம் வந்தால் 300 ரூபாய் செலவு செய்து பார்க்கத் தூண்டுகிறது, இதற்கு செலவு செய்ய என்ன குறை? வெளிநாடுகளில் பல் மருத்துவர்களின் கட்டணம் மிக அதிகம் என்பதை நினைவிற் கொள்ள வேண்டும்.
மற்ற படி, உங்களது பல்லை, ஈறுகளை நன்றாக வைத்திருக்க, oil pulling செய்யலாம். நல்லெண்ணெய் என்ன விலை விக்கிறது என்று நினைக்க வேண்டாம். தேங்கா எண்ணெயிலும் பண்ணலாம்.ஆனால் கடையில் கிடைக்கும் refined oil வேண்டாம். அது வெறும் சூப்பி போட்ட பணங்கோட்டை போன்றது. செக்கு எண்ணெய் சிறப்பு.
எப்படி செய்வது?
10 - 15ml எடுத்து, காலை எழுந்த உடன் ஒரு 10 நிமிடமாவது கொப்பளிக்க வேண்டும். முதலில் வாய் வலிக்கும். அப்புறம்? அதுவே பழகிடும்.
என்ன பலன் ?
இயற்கையான முறையில் உங்கள் பல் பாதுகாக்கப்படும். பல் ஈறு, சொத்தை, பல் வலி வராது. ரூட் கேணல் செய்யவேண்டிய அவசியம் வராது. சிரித்தமுகத்தோடு ஸ்ரீநித்யா (Shrinithyaa Gopalan) @ மாதிரி பின்னி எடுக்கலாம். ..
நன்றி ...
என் பதில் :அருமையான கேள்வி ..நான் சொல்வதை விட பல் மருத்துவரிடம் கேட்டு பதில் அளித்தால் நன்றாக இருக்கும் ...எங்கள் அக்கா மகள் Dr .சொர்ணமாலா முருகராஜ் -திருப்பூர் ..அவர்கள் கொடுத்த பதில் ..நீங்கள் தெரிந்துகொள்வதற்காக ...
முதலில், தற்போது கிடைக்கும் உணவுகள் எல்லாம் கடிக்க மெதுவாக இருப்பதை நினைவில் கொள்ளவும். நீங்கள் பயங்கரமாக கடித்து சாப்பிட இங்கே தற்போது ஒன்றும் இல்லை. உடலை மட்டும் இல்லை, வாயை கூட சோம்பேறி ஆக்கி வைத்திருக்கு இந்த சமூகம்.
நீங்கள் எப்படி பல் துலக்கினாலும், floss செய்தாலும், பல்லில் உணவு துணுக்குகள், பிரியாணியில் உள்ள மட்டன் பீஸ் போல பல்லில் ஒட்டிக்கொள்ளும். அதை எடுக்க ஊக்கு தேடி பாதி உசிர் போய்விடும். உணவில் உள்ள சர்க்கரை ( even carbohydrates) உங்கள் பல்லை பதம் பார்த்து விடும். இதனால் தான் சாப்பிட்ட பின் வாயை தண்ணீர் கொண்டு கொப்பளித்து துப்ப சொல்கிறார்கள். இப்படி செய்தே திருடனை பாரதியார் விரட்டியதை மறக்க வேண்டாம்.
6 மாதம் ஒரு முறை பல் மருத்துவரிடம் காண்பிக்கும் பொழுது அவர் பல்லில் சொத்தை ஏதும் இருக்கிறதா, இல்லை வேறு ஏதும் பிரச்சனை இருக்கிறதா என்பதை பார்த்து கூறிவிடுவார். அது இல்லாமல் சில நேரம் தேனீர் அதிகமாக குடிப்பவர்களுக்கு மஞ்சள் காரை வாயினுள் அதிகமாக படிந்துவிடும் அதை மருத்துவரிடம் சுத்தம் செய்யலாம்.
ஒரு 200 ரூபாய் பல் மருத்துவரிடம் கொடுத்தால் நம் குடி முழுகிப் போய்விடாது. இதற்கும் உங்களுக்காக நீங்கள் செய்து கொள்ளும் முக்கியமான செலவு அது. விஜய் படம் அஜித் படம் வந்தால் 300 ரூபாய் செலவு செய்து பார்க்கத் தூண்டுகிறது, இதற்கு செலவு செய்ய என்ன குறை? வெளிநாடுகளில் பல் மருத்துவர்களின் கட்டணம் மிக அதிகம் என்பதை நினைவிற் கொள்ள வேண்டும்.
மற்ற படி, உங்களது பல்லை, ஈறுகளை நன்றாக வைத்திருக்க, oil pulling செய்யலாம். நல்லெண்ணெய் என்ன விலை விக்கிறது என்று நினைக்க வேண்டாம். தேங்கா எண்ணெயிலும் பண்ணலாம்.ஆனால் கடையில் கிடைக்கும் refined oil வேண்டாம். அது வெறும் சூப்பி போட்ட பணங்கோட்டை போன்றது. செக்கு எண்ணெய் சிறப்பு.
எப்படி செய்வது?
10 - 15ml எடுத்து, காலை எழுந்த உடன் ஒரு 10 நிமிடமாவது கொப்பளிக்க வேண்டும். முதலில் வாய் வலிக்கும். அப்புறம்? அதுவே பழகிடும்.
என்ன பலன் ?
இயற்கையான முறையில் உங்கள் பல் பாதுகாக்கப்படும். பல் ஈறு, சொத்தை, பல் வலி வராது. ரூட் கேணல் செய்யவேண்டிய அவசியம் வராது. சிரித்தமுகத்தோடு ஸ்ரீநித்யா (Shrinithyaa Gopalan) @ மாதிரி பின்னி எடுக்கலாம். ..
நன்றி ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக