சனி, 2 மே, 2020

உடுமலை பஞ்சாலை மேற்பார்வையாளர் ....


பஞ்சு பறக்கும் தொழிலில் இருப்பதால் கடந்த பத்தாண்டுகளாக ஒரு நாள் கூட முகமூடி அணியாமல் தொழிற்சாலைக்குள் இருந்ததே இல்லை. தொழிற்சாலையைச் சுற்றி வரும் போது கட்டாயம் முக கவசம் என் முகத்தில் இருக்கும். பெரும்பாலும் தொழிலாளர்கள் முதல் மற்றவர்கள் வரை ஆடிட் நடக்கும் சமயங்களில் தான் அணிந்திருப்பார்கள். அணியச் சொன்னாலும் மறுப்பார்கள். பறந்து கொண்டேயிருக்கும் பஞ்சு துகள்களை அருகே நின்று வேடிக்கை பார்க்க முடியும். சுவாசத்தில் ஒன்றாகக் கலந்து உள்ளே வெளியே என்று விளையாட்டு காட்டி பறந்து கொண்டிருக்கும். ஆனால் மக்களைத் திருத்த முடியாது. நான் திருத்த முற்படுவதில்லை. ஆனால் கட்டாயம் நான் உள்ளே நுழைந்தவுடன் அணிந்து விடுவேன். காரணம் காலையில் முழுமையாக ஒரு ரவுண்டு வர வேண்டும். மதியத்திற்கு முன்பு ஒரு முறை என்று குறிப்பிட்ட நேர இடைவெளியில் சுற்றி வர வேண்டும் என்பதால் அணிந்து கொள்வதுண்டு.


ஆனால் ஒரு நாளைக்கு மூன்று கவசங்களை மாற்றி விடுவதுண்டு. பயன்படுத்திய முக கவசங்களை நானே குப்பைத் தொட்டியில் கிழித்துப் போட்டு விடுவதுண்டு. அதாவது குப்பை எடுக்கும் அம்மா கூட அதனைத் தொடாமல் காகித்தில் சுற்றிப் பாதுகாப்பாக என் அறையில் உள்ள கூடையில் போட்டு அந்த அம்மாவிடம் கொடுப்பேன். "ஏன் சார் குப்பையைத் தங்கம் மாதிரி தர்றீங்க" என்று சிரிப்பார். அவருக்குத் தெரியாது. என் நோய் நொடி எல்லாம் வயதான அந்த அம்மாவுக்கு வந்து விடக்கூடாது என்ற அக்கறை. ஆனால் சொன்னாலும் அவருக்குப் புரியாது. நான் சொல்வதும் இல்லை. நான் என்னளவில் சரியாக இருந்து கொள்வதுண்டு.

நன்றி .....

தகவலுக்கு நன்றி என் நீண்டகால நண்பர் பஞ்சாலை மேற்பார்வையாளர்க்கு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக