சனி, 30 மே, 2020

கேள்வி :..சேமிப்புகளில் பெரும்பாலான தொகையை வங்கிக் கணக்கில் வைத்திருப்பது நல்லதா?

என் பதில் :..


பாதுகாப்பு மட்டுமே முக்கியம் என கருதினால் வங்கி சேமிப்பு கணக்கு அல்லது வைப்பு கணக்கில் சேர்க்கலாம். பண வீக்கத்தை கணக்கில் எடுத்துக்கொண்டால் உங்கள் பணம் அதிக மதிப்பை ஈட்டாது.

எதிர் காலத்திற்கு பயன் தரத்தக்க வகையில் உங்கள் பணத்தை சேமிக்க வேண்டுமெனில் மீதமாகும் தொகையை நான்காக பிரித்து கீழ் கண்டவாறு சேர்க்கலாம.

முதல் 25% பணமாக அல்லது வங்கி கணக்கில் போட்டு வைக்கலாம். இது உங்கள் அவசர தேவைகளுக்கோ அல்லது பின்னாளில் மதிப்பு கூடும் என கருதும் பொருளை வாங்கி இருப்பு வைக்கவோ உதவும்.

இரண்டாவது 25% வீடு அல்லது நிலம் வங்கி கடனாகபெற்று அதற்கு மாதாந்திர தவணை செலுத்த பயன் படுத்தலாம். அவ்வகையில் உங்களுக்கு குடியிருக்க வீடு கிடைப்பதோடு அதற்கு வரிசலுகையும் கிடைக்கும்.

மூன்றாவது 25% ஏதாவது ஓய்வூதிய திட்டம், ஆயுள் மருத்துவ காப்பீடு, நல்ல பரஸ்பர நிதிதிட்டம் நல்ல பங்கு முதலீடு ஆகியவற்றில் முதலீடு செய்யலாம். இவை வரிசலுகைகளோடு ஒரு குடும்ப பாதுகாப்பையும் அளிக்கும்.

நான்காவது 25% தங்கம் மற்றும் வெள்ளி யில் நகைகளாகவோ காசுகளாகவோ சேர்த்து வைக்கலாம். இது மதிப்பு உயர்ந்து கொண்டே இருப்பதோடு அவசர ஆபத்து காலஙகளில் கை தூக்கி விடும்..

சேமிப்புகளோடு நின்று விடாமல் மன நிறைவோடு வாழ சுற்றுலா பொழுது போக்குகளுக்கும் சிறிது சேர்த்து வைத்து செலவு செய்யுங்கள்.

இனிய வாழ்த்துக்கள்…

நன்றி ...

சிவக்குமார்

நிதி ஆலோசகர்

99440 66681

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக