கேள்வி :..வாங்குவதற்கு யாரும் இல்லாத நிலையில் தங்கம் விலை ஏன் குறையவில்லை?
பதில் :..தங்கம் நா சும்மாவா ....!!!
மொத்த தங்க உற்பத்தியில்
50 % தங்கம் அணிகலன்கள் தயாரிக்க பயன்படுகிறது.
7 - 10 % தங்கம் தொழில்முறை பயன்பாட்டிற்காக உபயோகப்படுத்தப் படுகிறது. பல மருத்தவ சாதனங்கள் தயாரிப்பில் தங்கம் பயன்படுத்தப்படுகிறது.
மீதமிருக்கும் தங்கம் அனைத்தும் முதலீட்டிற்காக பயன்படுத்தப்படுகிறது.
எனவே அணிகலன்கள் வாங்குவது குறைவதினால் மட்டும் தங்கத்தின் விலை குறையாது. பாதிப்பு ஏற்படாது என்று அர்த்தமல்ல பாதிப்பு ஏற்படும் ஆனால் தற்போதுள்ள அசாதாரண பொருளாதார சூழ்நிலையால் அது விலை ஏறிக்கொண்டே இருக்கிறது.
ஒருவன் பணக்காரனாக வேண்டுமென்றால் அவன் பணத்தை அவனுக்காக வேலை செய்ய விட வேண்டுமென பணக்காரத் தந்தை ஏழை தந்தை புத்தகத்தில் ராபர்ட் கியோசாக்கி கூறியிருப்பார்.
எனவே பெரும் பணம் படைத்த முதலாளிகள், நிதி நிறுவனங்கள் அனைத்தும் தங்களிடம் உள்ள பணத்தை வேலை செய்ய விடுவார்கள். அப்பொழுது தான் பணம் வளரும். அவர்கள் அதை எப்படி செய்கிறார்கள். மிக எளிது, தங்களது பணத்தை நல்ல வருவாய் ஈட்டி தரும் மற்றும் முதலீட்டிற்கு ஆபத்தில்லாத இடங்களில் முதலீடு செய்து விடுவார்கள். இதன் மூலம் தங்கள் பணம் நாளடைவில் பல்கிப் பெருகும்.
அந்த இடங்கள் என்னனென்ன
பத்திரங்கள்
பங்குகள்
ரியல் எஸ்டேட்
தொழில்
இந்த நான்கு இடங்களும் பொருளாதாரத்தை சார்ந்தே ஏற்ற இறக்கம் காணும். பொருளாதாரம் நன்றாக போய்க்கொண்டிருக்கும் காலங்களில் இவை அனைத்தும் செய்த முதலீட்டிற்கு நல்ல வருமானத்தை ஈட்டித்தரும்.
ஆனால் தற்போது இருப்பது போல் உள்ள சூழ்நிலைகளில் இந்த நான்கும் மோசமான வருவாயை தருவதோடு மட்டுமல்லாமல் நம் முதலீட்டை ஆபத்தானதாக்கி விடும்.
இது போன்ற ஒரு அசாதாரண சூழ்நிலையில் பெரும் பணம் படைத்தவர்கள் அந்த நான்கு இடங்களில் தாங்கள் செய்த முதலீட்டினை விற்றுவிட்டு பணமாக மாற்றிக்கொள்வார்கள். பணமாக மாற்றினால் மட்டும் போதுமா? அதை வேலை செய்ய விட வேண்டுமல்லவா.
அதனால் எப்பொழுதெல்லாம் பங்குச்சந்தை மிக பெரும் சரிவை சந்திக்கிறதோ, பொருளாதாரம் மோசமாக உள்ளதோ அப்பொழுதெல்லாம் பெரும் பணக்காரர்கள் மற்ற முதலீட்டிலிருந்து வெளியே வந்த பணத்தை தங்கத்தில் முதலீடு செய்து விடுவார்கள். அதனால் தான் இப்பொழுது தங்கம் தினம் ஒரு உச்சத்தை தொட்டு கொண்டிருக்கிறது.
இப்பொழுதிருக்கும் ஒரே நம்பகமான முதலீடு தங்கம் தான். எப்பொழுது பொருளாதாரம் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்புகிறதோ அப்பொழுது தங்கத்திலிருந்து வெளியில் வந்து மீண்டும் பங்குகள் பத்திரம் போன்றவற்றில் முதலீடு செய்ய துவங்கி விடுவார்கள். அந்த சமயத்தில் தங்கத்தின் விலையில் இறக்கம் காணப்படும்.
தங்கம் விலை அதிகமாக மற்றொரு காரணம்
கச்சா எண்ணெய் மற்றும் காபி போல தங்கமும் ஒரு பண்டம் தான். ஒரு சிறு வித்தியாசம் என்னவெனில் தங்கம் எண்ணெய் அல்லது காபி போல் நுகரப்படுவதில்லை. அதாவது இது வரை வெட்டி எடுக்கப்பட்ட தங்கமென்பது புழக்கத்தில் தான் உள்ளது. இன்னுமும் வெட்டி எடுத்துக் கொண்டிருப்பதும் புழக்கத்திற்கு வந்துகொண்டுள்ளது.
இங்கே வழங்கல் மற்றும் சேவை சரிசமமாக உள்ளது இருந்தும் ஏன் விலை மட்டும் ஏன் இறக்கம் காணாமல் ஏறிக்கொண்டே இருக்கிறது? அதற்கான பதில் நகைகளாக செய்யும் தங்கம் பெரும்பாலும் வீட்டு லாக்கரிலோ அல்லது வங்கி லாக்கரிலோ சோம்பேறி தனமாக தூங்கிக்கொண்டிருப்பதால் தான்.
மேலும் தங்க சுரங்கங்கள் சுலபமாக எடுக்கக்கூடிய தங்கம் அனைத்தையும் வெட்டி எடுத்து விட்டார்கள். இப்பொழுது குறைவான தங்கத்தை வெட்டி எடுப்பதற்கு அதிக உழைப்பு, பணம் தேவைப்படுகிறது. இதுவும் தங்கத்தின் விலை ஏற்றத்திற்கு ஒரு காரணம் தான்.
நன்றி ....
பதில் :..தங்கம் நா சும்மாவா ....!!!
மொத்த தங்க உற்பத்தியில்
50 % தங்கம் அணிகலன்கள் தயாரிக்க பயன்படுகிறது.
7 - 10 % தங்கம் தொழில்முறை பயன்பாட்டிற்காக உபயோகப்படுத்தப் படுகிறது. பல மருத்தவ சாதனங்கள் தயாரிப்பில் தங்கம் பயன்படுத்தப்படுகிறது.
மீதமிருக்கும் தங்கம் அனைத்தும் முதலீட்டிற்காக பயன்படுத்தப்படுகிறது.
எனவே அணிகலன்கள் வாங்குவது குறைவதினால் மட்டும் தங்கத்தின் விலை குறையாது. பாதிப்பு ஏற்படாது என்று அர்த்தமல்ல பாதிப்பு ஏற்படும் ஆனால் தற்போதுள்ள அசாதாரண பொருளாதார சூழ்நிலையால் அது விலை ஏறிக்கொண்டே இருக்கிறது.
ஒருவன் பணக்காரனாக வேண்டுமென்றால் அவன் பணத்தை அவனுக்காக வேலை செய்ய விட வேண்டுமென பணக்காரத் தந்தை ஏழை தந்தை புத்தகத்தில் ராபர்ட் கியோசாக்கி கூறியிருப்பார்.
எனவே பெரும் பணம் படைத்த முதலாளிகள், நிதி நிறுவனங்கள் அனைத்தும் தங்களிடம் உள்ள பணத்தை வேலை செய்ய விடுவார்கள். அப்பொழுது தான் பணம் வளரும். அவர்கள் அதை எப்படி செய்கிறார்கள். மிக எளிது, தங்களது பணத்தை நல்ல வருவாய் ஈட்டி தரும் மற்றும் முதலீட்டிற்கு ஆபத்தில்லாத இடங்களில் முதலீடு செய்து விடுவார்கள். இதன் மூலம் தங்கள் பணம் நாளடைவில் பல்கிப் பெருகும்.
அந்த இடங்கள் என்னனென்ன
பத்திரங்கள்
பங்குகள்
ரியல் எஸ்டேட்
தொழில்
இந்த நான்கு இடங்களும் பொருளாதாரத்தை சார்ந்தே ஏற்ற இறக்கம் காணும். பொருளாதாரம் நன்றாக போய்க்கொண்டிருக்கும் காலங்களில் இவை அனைத்தும் செய்த முதலீட்டிற்கு நல்ல வருமானத்தை ஈட்டித்தரும்.
ஆனால் தற்போது இருப்பது போல் உள்ள சூழ்நிலைகளில் இந்த நான்கும் மோசமான வருவாயை தருவதோடு மட்டுமல்லாமல் நம் முதலீட்டை ஆபத்தானதாக்கி விடும்.
இது போன்ற ஒரு அசாதாரண சூழ்நிலையில் பெரும் பணம் படைத்தவர்கள் அந்த நான்கு இடங்களில் தாங்கள் செய்த முதலீட்டினை விற்றுவிட்டு பணமாக மாற்றிக்கொள்வார்கள். பணமாக மாற்றினால் மட்டும் போதுமா? அதை வேலை செய்ய விட வேண்டுமல்லவா.
அதனால் எப்பொழுதெல்லாம் பங்குச்சந்தை மிக பெரும் சரிவை சந்திக்கிறதோ, பொருளாதாரம் மோசமாக உள்ளதோ அப்பொழுதெல்லாம் பெரும் பணக்காரர்கள் மற்ற முதலீட்டிலிருந்து வெளியே வந்த பணத்தை தங்கத்தில் முதலீடு செய்து விடுவார்கள். அதனால் தான் இப்பொழுது தங்கம் தினம் ஒரு உச்சத்தை தொட்டு கொண்டிருக்கிறது.
இப்பொழுதிருக்கும் ஒரே நம்பகமான முதலீடு தங்கம் தான். எப்பொழுது பொருளாதாரம் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்புகிறதோ அப்பொழுது தங்கத்திலிருந்து வெளியில் வந்து மீண்டும் பங்குகள் பத்திரம் போன்றவற்றில் முதலீடு செய்ய துவங்கி விடுவார்கள். அந்த சமயத்தில் தங்கத்தின் விலையில் இறக்கம் காணப்படும்.
தங்கம் விலை அதிகமாக மற்றொரு காரணம்
கச்சா எண்ணெய் மற்றும் காபி போல தங்கமும் ஒரு பண்டம் தான். ஒரு சிறு வித்தியாசம் என்னவெனில் தங்கம் எண்ணெய் அல்லது காபி போல் நுகரப்படுவதில்லை. அதாவது இது வரை வெட்டி எடுக்கப்பட்ட தங்கமென்பது புழக்கத்தில் தான் உள்ளது. இன்னுமும் வெட்டி எடுத்துக் கொண்டிருப்பதும் புழக்கத்திற்கு வந்துகொண்டுள்ளது.
இங்கே வழங்கல் மற்றும் சேவை சரிசமமாக உள்ளது இருந்தும் ஏன் விலை மட்டும் ஏன் இறக்கம் காணாமல் ஏறிக்கொண்டே இருக்கிறது? அதற்கான பதில் நகைகளாக செய்யும் தங்கம் பெரும்பாலும் வீட்டு லாக்கரிலோ அல்லது வங்கி லாக்கரிலோ சோம்பேறி தனமாக தூங்கிக்கொண்டிருப்பதால் தான்.
மேலும் தங்க சுரங்கங்கள் சுலபமாக எடுக்கக்கூடிய தங்கம் அனைத்தையும் வெட்டி எடுத்து விட்டார்கள். இப்பொழுது குறைவான தங்கத்தை வெட்டி எடுப்பதற்கு அதிக உழைப்பு, பணம் தேவைப்படுகிறது. இதுவும் தங்கத்தின் விலை ஏற்றத்திற்கு ஒரு காரணம் தான்.
நன்றி ....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக