கேள்வி :..உங்கள் வாழ்க்கையினை மாற்றிய அந்த தருணம் எது?
என் பதில் :..இந்த கேள்வியை என் தோழி ஆசிரியரிடம் பதில் சொல்லுங்களேன் என்று கேட்டேன் ...அவர் பணிபுரிந்த கடற்கரை கிராம பள்ளியில் பணிபுரிந்ததை என்னிடம் பகிர்ந்துகொண்டது எனக்கு மகிழ்ச்சி ..
எனக்கு வேலை கிடைத்த அந்த தருணம் தான். ஏனா அதுவரைக்கும் நான் வேலை பார்த்துகிட்டு இருந்த தனியார் பள்ளியில் மாணவர்கள் ரொம்ப நீட்டா வருவாங்க. சொல்லிக் கொடுக்கிறத படிப்பாங்க. அதனால மிடில் கிளாஸ் ஃபேமிலியோட வாழ்க்கையும் அப்பர் மிடில் கிளாஸ் ஃபேமிலியோட வாழ்க்கை மட்டும் தான் எனக்கு தெரியும்.
ஆனால் முதன்முதலில் அரசுப்பள்ளியில் பணியில் சேர்ந்தப்போ அந்தப் பள்ளி உடைய தோற்றமும் அதைவிட அங்க உக்காந்து இருந்த மாணவர்களோடு தோற்றமும் என் மனசுல ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது உண்மைய சொல்லனும்னா ஒரு வாரம் முழுக்க என்னால அந்தப் பசங்கள ஏத்துக்க முடியல.
அதுக்கப்புறம் நான் யோசிச்சு பார்த்தேன் இனிமேல் அவங்க கூட தான் நான் இருந்து ஆகணும் ஏன் அவங்களை எனக்கு ஏத்த மாதிரி மாற்றக்கூடாது என்று முயற்சி செய்தேன். அவங்ககிட்ட நிறைய பேசினேன் அவங்களோட குடும்ப சூழ்நிலை என்னனு தெரிஞ்சிகிட்டேன் ஆனா அப்பதான் எனக்கு ஒன்னு புரிஞ்சிச்சு ஒருநாள் சாப்பாட்டுக்கே அவங்க எல்லாம் எவ்வளவு கஷ்டப்படுறாங்கன்னு .
காலைல சாப்பாடு சாப்பிடாத பசங்க எத்தனையோ பேர் வருவாங்க அவனோட வயிறு பசிக்கும்போது அவனால் எப்படி படிக்க முடியும். அதுக்காக தினம் என் கைப்பையில் தனியா பணம் வச்சுறுப்பேன் யாரு சாப்பிடாம வராங்களோ அவங்களுக்கு பிஸ்கட் பழம் வாங்கி குடுக்க. நான் அப்ப முடிவு செஞ்சேன் அவங்களோட வாழ்க்கைமுறையை மாத்தணும்னு. அங்க படிச்ச பசங்க எல்லாருமே மீனவர் வீட்டு பிள்ளைங்க.
அவங்க எனக்கு பெரிய தத்துவத்தை சொல்லிக் கொடுத்திருக்காங்க. அது என்ன தெரியுமா நாம வாழ்வதற்காக எவ்வளவு வேணாலும் போராடலாம்.
முதல் இரண்டு வாரம் அவங்க எல்லாரையும் என் பக்கத்துல வர வச்சு நிறைய கதை சொன்னேன். பாட்டு சொல்லிக் குடுத்தேன்.உங்க எல்லாரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனா உங்ககிட்ட ஒரு விஷயம் மட்டும் எனக்கு பிடிக்கல நீங்க சுத்தமா இருக்கணும்அப்போதான் உங்கள எனக்கு பிடிக்கும்னு சொன்னேன். அடுத்த நாள் எனக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது ஓரளவுக்கு கொஞ்சம் நீட்டா வந்திருந்தாங்க.
அடுத்து பெற்றோர்களை வரவச்சு பேசுனேன் அவங்ககிட்ட சொன்னேன் நீங்க கொஞ்சம் ஒத்துழைப்பு குடுங்க உங்க பசங்கள நான் படிக்க வைக்கிறேன்னு.இந்த தருணத்துல எனது பள்ளி தலைமையாசிரியர் எனக்கு நல்ல ஒத்துழைப்பு குடுத்தார்.
அதுக்கப்புறம் அவங்களோட நடத்தையில் நிறைய முயற்சி செய்துமாற்றத்தை உருவாக்குனேன். என்னோட வகுப்பில இருக்க மாணவர்கள் கிட்ட நிறைய மாற்றம் ஏற்பட்டது. எல்லாரும் சொல்லுவாங்க கடற்கரை ஏரியால வேலை பாக்குறது ரொம்ப கஷ்டம் அந்த பசங்க சொல்றது எதையுமே கேட்க மாட்டாங்க படிப்பு வராது ரொம்ப கஷ்டம்னு.
என்னோட உயர் அதிகாரி பள்ளிய பார்வையிட வரும் போது என் கைய புடிச்சுட்டு அவங்க சொன்னாங்க நான் உன்னை முதல் தடவை பார்க்கும் போது இந்த பொண்ணு எப்படி இங்க சமாளிக்க போகுதுனு நினைச்சேன் ஆனா மூணு மாசத்துலயே அவங்க கிட்ட நிறைய மாற்றத்தை உருவாக்கி இருக்க அப்படின்னு.ஏனா எனக்கு வேலை கிடைக்கும்பொழுது என் வயது 22.
அந்த தருணங்கள் தான் எனக்கு வாழ்க்கையில் பல விஷயத்தை கற்றுக் கொடுத்தது நம்மள விட கஷ்டமான வாழ்க்கை வாழ்றவங்க இருக்காங்க அப்படின்னு. அதுக்கப்புறம் நிறைய சிறப்பு குழந்தைகள் முதன்முதலா அங்கதான் பார்த்தேன் நடக்க முடியாத பேச முடியாத அதைவிட மனநலம் குன்றிய குழந்தைகள். அவங்கள சமாளிக்க தனி திறமை வேனும்.அந்த சுழ்நிலைதான் என்ன ஒரு புது மனுசியா மாத்துச்சு.
என் பதில் :..இந்த கேள்வியை என் தோழி ஆசிரியரிடம் பதில் சொல்லுங்களேன் என்று கேட்டேன் ...அவர் பணிபுரிந்த கடற்கரை கிராம பள்ளியில் பணிபுரிந்ததை என்னிடம் பகிர்ந்துகொண்டது எனக்கு மகிழ்ச்சி ..
எனக்கு வேலை கிடைத்த அந்த தருணம் தான். ஏனா அதுவரைக்கும் நான் வேலை பார்த்துகிட்டு இருந்த தனியார் பள்ளியில் மாணவர்கள் ரொம்ப நீட்டா வருவாங்க. சொல்லிக் கொடுக்கிறத படிப்பாங்க. அதனால மிடில் கிளாஸ் ஃபேமிலியோட வாழ்க்கையும் அப்பர் மிடில் கிளாஸ் ஃபேமிலியோட வாழ்க்கை மட்டும் தான் எனக்கு தெரியும்.
ஆனால் முதன்முதலில் அரசுப்பள்ளியில் பணியில் சேர்ந்தப்போ அந்தப் பள்ளி உடைய தோற்றமும் அதைவிட அங்க உக்காந்து இருந்த மாணவர்களோடு தோற்றமும் என் மனசுல ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது உண்மைய சொல்லனும்னா ஒரு வாரம் முழுக்க என்னால அந்தப் பசங்கள ஏத்துக்க முடியல.
அதுக்கப்புறம் நான் யோசிச்சு பார்த்தேன் இனிமேல் அவங்க கூட தான் நான் இருந்து ஆகணும் ஏன் அவங்களை எனக்கு ஏத்த மாதிரி மாற்றக்கூடாது என்று முயற்சி செய்தேன். அவங்ககிட்ட நிறைய பேசினேன் அவங்களோட குடும்ப சூழ்நிலை என்னனு தெரிஞ்சிகிட்டேன் ஆனா அப்பதான் எனக்கு ஒன்னு புரிஞ்சிச்சு ஒருநாள் சாப்பாட்டுக்கே அவங்க எல்லாம் எவ்வளவு கஷ்டப்படுறாங்கன்னு .
காலைல சாப்பாடு சாப்பிடாத பசங்க எத்தனையோ பேர் வருவாங்க அவனோட வயிறு பசிக்கும்போது அவனால் எப்படி படிக்க முடியும். அதுக்காக தினம் என் கைப்பையில் தனியா பணம் வச்சுறுப்பேன் யாரு சாப்பிடாம வராங்களோ அவங்களுக்கு பிஸ்கட் பழம் வாங்கி குடுக்க. நான் அப்ப முடிவு செஞ்சேன் அவங்களோட வாழ்க்கைமுறையை மாத்தணும்னு. அங்க படிச்ச பசங்க எல்லாருமே மீனவர் வீட்டு பிள்ளைங்க.
அவங்க எனக்கு பெரிய தத்துவத்தை சொல்லிக் கொடுத்திருக்காங்க. அது என்ன தெரியுமா நாம வாழ்வதற்காக எவ்வளவு வேணாலும் போராடலாம்.
முதல் இரண்டு வாரம் அவங்க எல்லாரையும் என் பக்கத்துல வர வச்சு நிறைய கதை சொன்னேன். பாட்டு சொல்லிக் குடுத்தேன்.உங்க எல்லாரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனா உங்ககிட்ட ஒரு விஷயம் மட்டும் எனக்கு பிடிக்கல நீங்க சுத்தமா இருக்கணும்அப்போதான் உங்கள எனக்கு பிடிக்கும்னு சொன்னேன். அடுத்த நாள் எனக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது ஓரளவுக்கு கொஞ்சம் நீட்டா வந்திருந்தாங்க.
அடுத்து பெற்றோர்களை வரவச்சு பேசுனேன் அவங்ககிட்ட சொன்னேன் நீங்க கொஞ்சம் ஒத்துழைப்பு குடுங்க உங்க பசங்கள நான் படிக்க வைக்கிறேன்னு.இந்த தருணத்துல எனது பள்ளி தலைமையாசிரியர் எனக்கு நல்ல ஒத்துழைப்பு குடுத்தார்.
அதுக்கப்புறம் அவங்களோட நடத்தையில் நிறைய முயற்சி செய்துமாற்றத்தை உருவாக்குனேன். என்னோட வகுப்பில இருக்க மாணவர்கள் கிட்ட நிறைய மாற்றம் ஏற்பட்டது. எல்லாரும் சொல்லுவாங்க கடற்கரை ஏரியால வேலை பாக்குறது ரொம்ப கஷ்டம் அந்த பசங்க சொல்றது எதையுமே கேட்க மாட்டாங்க படிப்பு வராது ரொம்ப கஷ்டம்னு.
என்னோட உயர் அதிகாரி பள்ளிய பார்வையிட வரும் போது என் கைய புடிச்சுட்டு அவங்க சொன்னாங்க நான் உன்னை முதல் தடவை பார்க்கும் போது இந்த பொண்ணு எப்படி இங்க சமாளிக்க போகுதுனு நினைச்சேன் ஆனா மூணு மாசத்துலயே அவங்க கிட்ட நிறைய மாற்றத்தை உருவாக்கி இருக்க அப்படின்னு.ஏனா எனக்கு வேலை கிடைக்கும்பொழுது என் வயது 22.
அந்த தருணங்கள் தான் எனக்கு வாழ்க்கையில் பல விஷயத்தை கற்றுக் கொடுத்தது நம்மள விட கஷ்டமான வாழ்க்கை வாழ்றவங்க இருக்காங்க அப்படின்னு. அதுக்கப்புறம் நிறைய சிறப்பு குழந்தைகள் முதன்முதலா அங்கதான் பார்த்தேன் நடக்க முடியாத பேச முடியாத அதைவிட மனநலம் குன்றிய குழந்தைகள். அவங்கள சமாளிக்க தனி திறமை வேனும்.அந்த சுழ்நிலைதான் என்ன ஒரு புது மனுசியா மாத்துச்சு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக