கேள்வி : வட்டிக்கு விடுவது பாவமா?
பதில் :...
வட்டிக்கு பணம் தருவது பாவமா புண்ணியமா? ஏன் இது பாவம் என்று சொல்லப்படுகிறது? இது எந்த உழைப்பும் இல்லாமல் வருவாய் வருவது அதனாலா? ஆனால் அந்த முதலீடு பணம் என்னுடைய உழைப்பில் வந்த பணம் தானே? என்னுடைய பணத்தை வாங்கியவன் அதை வைத்து லாபம் சம்பாதிக்கிறான் அதில் சிறிது எனக்கு வட்டியாகத் தருகிறான். இதில் என்ன தவறு? அவனுக்கு கையில் பணம் வந்தால் அவன் தேவைகள் பூர்த்தி ஆகும் என்கிற நிலையில் நான் பணம் கொடுத்து உதவுகின்றேன். , அதற்கு வட்டி வாங்குகின்றேன். இதில் என்ன பாவம் கண்டீர்கள்? Blah blah blah.
இதில் சாஸ்திரம் என்ன சொல்கிறது என்று எனக்குத் தெரியாது. நடைமுறையில் என்ன நடக்கிறது? வட்டி தருகிறேன் என்று கை நீட்டி பணம் வாங்குகின்றான் ஒருவன். பல சத்தியங்களை செய்து தான் பணம் கடன் வாங்குகிறான். அவன் கெட்ட நேரம். பணத்தை நான் கேட்கும் போதோ அல்லது அவன் தருகிறேன் என்று நாளிலோ அவனால் தர முடியவில்லை. அவனே அவனுடைய சத்தியத்தை மீறிய பாவி ஆகின்றான். நான் கடுமையாக பேசினால் அதை பொறுக்க முடியாமல் ஏதோ ஒன்று செய்து பணம் தயார் செய்து தருகின்றான். இங்கு கடுமையான வார்த்தைகளை நான் பேசி பாவி ஆகின்றேன்.
ஆகவே நான் புரிந்து கொண்டது என்னவென்றால் கொடுத்த பணத்தை திரும்ப வாங்க நாம் பாவங்கள் செய்ய வேண்டி இருக்கிறது அதனால் இதை தவறு என்று சொல்கிறார்கள் போலிருக்கிறது.
இதில் திருப்பதி சாமிக்கு குபேரன் கடன் கொடுத்து, ஆயிரக்கணக்கான வருடங்களாக வட்டி மட்டுமே வாங்கிக் கொண்டு தானே இருக்கிறான் என்று நீங்கள் கேள்வி கேட்டால், அதற்கு என்னிடம் பதில் இல்லை.
வட்டிக்கு பணம் கொடுத்தால் பாவமா என்று கேள்வி. இதைவிட இன்னொன்று நான் கேட்க விரும்புகின்றேன், இந்த கலி காலத்தில் கொடுத்த பணத்தையே முழுவதும் ஸ்வாஹா செய்கிறார்களே அவர்களை பற்றி சாத்திரங்கள் எதுவும் சொல்லவில்லையா? பணத்தை வாங்குவதற்காக மனசாட்சியே இல்லாமல் எவ்வளவு பொய் சொல்கிறார்கள் தெரியுமா? வட்டியை விடுங்கள். அசல் பணமே திரும்ப வருவது இல்லை. இதனாலேயே பிறருக்கு உதவும் மனப்பான்மை உள்ளவர்களும் கல் நெஞ்சம் கொண்டவர்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள்.
நன்றி ....
பதில் :...
வட்டிக்கு பணம் தருவது பாவமா புண்ணியமா? ஏன் இது பாவம் என்று சொல்லப்படுகிறது? இது எந்த உழைப்பும் இல்லாமல் வருவாய் வருவது அதனாலா? ஆனால் அந்த முதலீடு பணம் என்னுடைய உழைப்பில் வந்த பணம் தானே? என்னுடைய பணத்தை வாங்கியவன் அதை வைத்து லாபம் சம்பாதிக்கிறான் அதில் சிறிது எனக்கு வட்டியாகத் தருகிறான். இதில் என்ன தவறு? அவனுக்கு கையில் பணம் வந்தால் அவன் தேவைகள் பூர்த்தி ஆகும் என்கிற நிலையில் நான் பணம் கொடுத்து உதவுகின்றேன். , அதற்கு வட்டி வாங்குகின்றேன். இதில் என்ன பாவம் கண்டீர்கள்? Blah blah blah.
இதில் சாஸ்திரம் என்ன சொல்கிறது என்று எனக்குத் தெரியாது. நடைமுறையில் என்ன நடக்கிறது? வட்டி தருகிறேன் என்று கை நீட்டி பணம் வாங்குகின்றான் ஒருவன். பல சத்தியங்களை செய்து தான் பணம் கடன் வாங்குகிறான். அவன் கெட்ட நேரம். பணத்தை நான் கேட்கும் போதோ அல்லது அவன் தருகிறேன் என்று நாளிலோ அவனால் தர முடியவில்லை. அவனே அவனுடைய சத்தியத்தை மீறிய பாவி ஆகின்றான். நான் கடுமையாக பேசினால் அதை பொறுக்க முடியாமல் ஏதோ ஒன்று செய்து பணம் தயார் செய்து தருகின்றான். இங்கு கடுமையான வார்த்தைகளை நான் பேசி பாவி ஆகின்றேன்.
ஆகவே நான் புரிந்து கொண்டது என்னவென்றால் கொடுத்த பணத்தை திரும்ப வாங்க நாம் பாவங்கள் செய்ய வேண்டி இருக்கிறது அதனால் இதை தவறு என்று சொல்கிறார்கள் போலிருக்கிறது.
இதில் திருப்பதி சாமிக்கு குபேரன் கடன் கொடுத்து, ஆயிரக்கணக்கான வருடங்களாக வட்டி மட்டுமே வாங்கிக் கொண்டு தானே இருக்கிறான் என்று நீங்கள் கேள்வி கேட்டால், அதற்கு என்னிடம் பதில் இல்லை.
வட்டிக்கு பணம் கொடுத்தால் பாவமா என்று கேள்வி. இதைவிட இன்னொன்று நான் கேட்க விரும்புகின்றேன், இந்த கலி காலத்தில் கொடுத்த பணத்தையே முழுவதும் ஸ்வாஹா செய்கிறார்களே அவர்களை பற்றி சாத்திரங்கள் எதுவும் சொல்லவில்லையா? பணத்தை வாங்குவதற்காக மனசாட்சியே இல்லாமல் எவ்வளவு பொய் சொல்கிறார்கள் தெரியுமா? வட்டியை விடுங்கள். அசல் பணமே திரும்ப வருவது இல்லை. இதனாலேயே பிறருக்கு உதவும் மனப்பான்மை உள்ளவர்களும் கல் நெஞ்சம் கொண்டவர்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள்.
நன்றி ....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக