புதன், 6 மே, 2020


#ஜென்சி (பின்னணி பாடகி)
திருவிளையாடல் திரைப்படத்தில் பாலையா நடிகர் திலகத்தை பார்த்து, " உன் பாடலுக்கு இந்த பாண்டிய நாடே அடிமையப்பா " என்பார்.
அதுபோல 1980களில் தன் குரலால் தமிழகத்தையே கட்டிப்போட்டிருந்தது இந்த கேரளத்துக்குயில். இந்த குரலை நனகு பயன்படுத்தியவர் இசைஞானி. ஆனால் இவர் சுமார் 80-90 பாடல்கள் மட்டுமே பாடியிருப்பார்...அத்தனையுமே சூப்பர் ஹிட்...இவரது சில பாடல்கள்:
அடி பெண்ணே பொன்னூஞ்சலாடும் இளமை (முள்ளும் மலரும்)
ஆட சொன்னாரே (வட்டத்துக்குள் சதுரம்)
இதயம் போகுதே ;
தம் தன னம் தாளம் வரும்.
(புதிய வார்ப்புகள்)
ஆயிரம் மலர்களே மலருங்கள் ;
இரு பறவைகள் மலை முழுவதும்.
(நிறம் மாறாத பூக்கள்)
என்னுயிர் நீதானே ..உன்னுயிர் நான்தானே. (ப்ரியா)
கீதா ...சங்கீதா (அன்பே சங்கீதா)
மயிலே மயிலே உன் தோகை எங்கே (கடவுள் அமைத்த மேடை)
ஞான்..ஞான் பாடணம் (பூந்தளிர்)
தோட்டம் கொண்ட ராசாவே
(பகலில் ஒரு இரவு)
என் வானிலே, ஒரே வெண்ணிலா (ஜானி)
மீன் கொடி தேரில் மன்மத ராசன் (கரும்பு வில்)
தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல் ( உல்லாச பறவைகள்)
காதல் ஓவியம் ;
வாடி ஏ கப்பகெழங்கே (அலைகள் ஓய்வதில்லை)
பூ மலர்ந்திட (டிக்..டிக்..டிக்)
ஆத்தோரம் காத்தாட ஒரு ஆச தோணுது (எங்கேயோ கேட்ட குரல்)
இது தவிர மலையாள படங்களிலும் சில பாடல்களை பாடியுள்ளார்.
இவர் பாடிய அத்தனை பாடல்களும் இன்று வரை டாப் சார்ட்டில் இருக்கின்றன. 1983 ம் ஆண்டில் இவர் திருமணத்திற்கு பிறகு ஏனோ பாடுவதையே நிறுத்தி விட்டார். தற்போது இசை நிகழ்ச்சிகளில் நடுவாராக அவ்வப்போது வருகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக