கேள்வி :.வாழ்க்கையில் முக்கியமான ஒருவர் எதுக்கெடுத்தாலும் உங்களைத் திட்டிக்கொண்டே இருக்கிறார் என்றால், அதற்கு காரணம் என்ன?
பதில் :...
அவரை நீங்கள் ஏதோ ஒரு காலத்தில் சட்டை செய்யவில்லை என்றும் அதனால் அவர் மனமுடைந்து வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பாம்பு போல் கொட்டுகிறார் என்றும் அர்த்தம்.
சிலருக்கு உருவத்தை கலாய்த்தால் பிடிக்காது. குறிப்பாக பெண்கள் அதை சொல்லும்போது இ என்று இளித்துவிட்டு பின்னால் கொட்டு வாங்குவார்கள். ஆண்களுக்கோ சீக்கிரம் முடி கொட்டிவிட 'தள்ளிவாங்க.. ஏன் எப்போ வந்தாலும் அப்பாவோடயே வாராய் னு கேக்கறாங்க என்பார்
மாமியார் படுத்தல்களின் போது ஆதரவு கிடைக்குமா எனப்பார்த்து விலகி நின்றால் கோபம் பதிந்துவிடும்
பிறந்தவீட்டைப் பற்றி அவதூறு கூறினால் வெடிப்பார்கள். திரும்ப திரும்ப சொன்னால் ஸ்டோர் பண்ணிவைத்து 30 வருடம் கழித்து சொல்வார்கள்
பொறுப்பில்லாத காரியங்களால் தேவையில்லாத பல உளைச்சல்களுக்கு ஆளாகியிருந்தாலும் அதே போல் தான்
பத்து தடவை சொன்னாலும் மறந்துவிட்டு வந்தால் அர்ச்சனை நிச்சயம். அவர்கள் ஒருமுறை கூட சொல்லுமுன் செய்துவைப்பவர்களாக இருப்பார்கள்.
என்ன சொன்னாலும் புரிதல் இல்லை என்றால் திட்டித்தான் தீர்ப்பார்கள். லேசாக பாத்திர சத்தம் கேட்கும்போதே உஷார் ஆகி அட்டென்ட் பண்ணாவிட்டால் கரண்டி பறந்து வருவதை தவிர்ப்பது கடினம் தான்
நன்றி ..
பதில் :...
அவரை நீங்கள் ஏதோ ஒரு காலத்தில் சட்டை செய்யவில்லை என்றும் அதனால் அவர் மனமுடைந்து வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பாம்பு போல் கொட்டுகிறார் என்றும் அர்த்தம்.
சிலருக்கு உருவத்தை கலாய்த்தால் பிடிக்காது. குறிப்பாக பெண்கள் அதை சொல்லும்போது இ என்று இளித்துவிட்டு பின்னால் கொட்டு வாங்குவார்கள். ஆண்களுக்கோ சீக்கிரம் முடி கொட்டிவிட 'தள்ளிவாங்க.. ஏன் எப்போ வந்தாலும் அப்பாவோடயே வாராய் னு கேக்கறாங்க என்பார்
மாமியார் படுத்தல்களின் போது ஆதரவு கிடைக்குமா எனப்பார்த்து விலகி நின்றால் கோபம் பதிந்துவிடும்
பிறந்தவீட்டைப் பற்றி அவதூறு கூறினால் வெடிப்பார்கள். திரும்ப திரும்ப சொன்னால் ஸ்டோர் பண்ணிவைத்து 30 வருடம் கழித்து சொல்வார்கள்
பொறுப்பில்லாத காரியங்களால் தேவையில்லாத பல உளைச்சல்களுக்கு ஆளாகியிருந்தாலும் அதே போல் தான்
பத்து தடவை சொன்னாலும் மறந்துவிட்டு வந்தால் அர்ச்சனை நிச்சயம். அவர்கள் ஒருமுறை கூட சொல்லுமுன் செய்துவைப்பவர்களாக இருப்பார்கள்.
என்ன சொன்னாலும் புரிதல் இல்லை என்றால் திட்டித்தான் தீர்ப்பார்கள். லேசாக பாத்திர சத்தம் கேட்கும்போதே உஷார் ஆகி அட்டென்ட் பண்ணாவிட்டால் கரண்டி பறந்து வருவதை தவிர்ப்பது கடினம் தான்
நன்றி ..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக