கேள்வி :..நான் ஒரு திருமணமான பெண், வேறொரு ஆண் மூலம் கர்ப்பமாகிவிட்டேன். நான் என்ன செய்ய வேண்டும்?
என் பதில் :...
இந்த பதிவை முடிந்தால் பெண்கள் அனைவரும் படியுங்கள், வயது வித்தியாசம் இன்றி, யாருக்கு தெரியும் வாழ்வில் நாமும் சில தருணங்களில் சில சிக்கலான முடிவை எடுக்க நேரம் வரலாம்!
கர்பமாகிவிட்டீர்களா?
நல்லது வாழ்த்துக்கள்…💐💐💐
இங்கு அனைவருக்கும் கர்ப்பம் தரிக்க வரன் கிடைப்பதில்லை என்பதை முதலில் உணருங்கள்… சிலருக்கு அது மறுமுறை என்பது நடக்க வாய்ப்பு இல்லாமலும் போலாம், குழந்தையில்லாதவர்களை கேட்டால் தெரியும் அதன் அருமை.
இது ஒருவேளை சித்தரிக்கப்பட்ட கேள்வி என்றாலும், இன்றைய சமூகத்தில் இதுபோன்ற தவறான கர்ப்பம் தரிப்பு நடந்து கொண்டுதான் உள்ளதல்லவா.
இறுதியில் என் தனிப்பட்ட கருத்தை சொல்கிறேன், முதலில் தவறு யார்பக்கம் என்று பார்ப்போம்.
இப்படி பெண் தவறான வழியில் கர்ப்பம் தரிக்க காரணம் என்ன? யார்?
ஆண்கள் தான், மணமுடித்த பெண்ணை மதிக்காது..பணத்தின் பின்னே திரியும் சில வேடிக்கையான மனிதர்களை நீங்கள் பார்த்திருக்கக் கூடும்.திருமணமான மனைவியோ தமிழ்நாட்டில், கணவனின் வேலையோ வெளிநாட்டில் என்றிருந்தால் சில பெண்கள் இத்தகைய சிக்கலான வழியையே தேர்ந்தெடுக்கிறார்கள்…பாவம் அவளும் பெண்ணல்லவா! அவர்களுக்கும் உணர்ச்சிகள் இருக்கும் அல்லவா!
சரி…இல்லை இல்லை தவறுக்கு பெண் தான் காரணம்! எப்படி?
முதலில் பெண்கள் விருப்பமற்ற ஆணை கட்டாய திருமணத்தால் மணந்துகொள்வது, பிறகு விரும்பியவனான காதலனுக்கு குழந்தை பெற்று விடுவோமே என்று தவறான அன்பால் தடம் புரள்கிறார்கள்.சிலர் தாம்பத்திய உறவு சரியான சுகம் தரவில்லை என்று…வேறொரு தலைவனை தேடுகிறார்கள்..
ஆணும் இல்லை, பெண்ணும் இல்லை, இந்த சமூகம் தான் காரணம்:
பெண்கள் கேட்கலாம், ஏன் ஆண்கள் இது போல தவறு செய்வதில்லையா?திருமணம் ஒரு பெண்ணோடு, தேனிலவு வேறு பெண்ணோடு என்று இருக்கிறார்கள்? இதில் நாங்கள் செய்தால் என்ன தவறு என்று? இது ஆண்கள் ஆளும் சமூகம் அம்மா(patriarchial society)என்ன செய்வது.. இந்த சமுதாயம் ஆண் குழந்தை பெற்காவிட்டால் இவள் தேர மாட்டாள் என்று இன்னொரு திருமணம் செய்யவும் தயங்கமாட்டார்கள்.
இந்த ஆண் சமூகம் பெண்ணையே குறை கூறும். அதனாலேயே என்னவோ , ஆணின் இயலாமையை அவர்களின் பெற்றோர்களே கூட ஒப்புக்கொள்ள மாட்டார்கள், இவளுக்கு தான் எதோ குறை என்று சொல்வார்கள்.பெண்கள் குழந்தை தான் பெற்கவில்லை என்றால், மலடி என்கிறீர்கள் இந்த சமூகத்தில், அதே வேறு ஒருவனுக்கு பெற்றால் தாசி என்கிறார்கள், என்று, இத்தகைய சமூக சூழ்நிலைக்கு ஆளாகாமல் இருக்க தகாத முறையிலும் சிலர் பெற்று தகப்பன் இவன் தான் என்று வாய் கூசாமல் கணவனை கை காட்டிவிடுகிறார்கள்.
ஏனென்றால், அம்மா வந்து சொன்னா தான் அப்பாவின் பெயர் தெரியுமடா, அவளும் சொல்லவில்லை என்றால் தப்பாக தான் போகுமடா, என்பதுபோல் தான் பெண்கள் நினைத்தால் யாருக்கு வேண்டும் என்றாலும் குழந்தையை பெற்று கொள்ளலாம்.
இதில் ஆணும் பெண்ணும் தவறு இழைத்தவர்கள் தான் அதில் சந்தேகம் இல்லை.
நீங்கள் உங்கள் சுகத்திற்காக வேறு ஒருவருக்கு பெறாமல், சூழ்நிலையால் சமூக பிடியில் இருந்து தப்பிக்க அப்படி செய்துவிட்டேன், என்று உங்கள் தவறை உணர்ந்தால், தெரிந்துகொள்ளுங்கள் குழந்தை பெற மருத்துவ பரிந்துரைகளும், வாடகைத்தாய்,தொழில்நுட்ப முறை என்று பல வழிகள் உள்ளது அதில் நீங்கள் பெற்றுக் கொண்டிருக்கலாம். அப்படி தவறான முறையில் தான் பெற வேண்டும் என்பது, நீங்கள் செய்த மன்னிக்க முடியாத தவறு தான்.
ஒருவேளை உங்கள் கணவர் குழந்தை பெற்றுதர இயலாதவர், அதனால் அவருக்கு அவப்பெயர் கிடைப்பது என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை அதனால் தான் தெரியாமல் செய்துவிட்டேன் என்று நீங்கள் உணர்ந்தால், அது உங்கள் கணவரின் குழந்தை தான், கடவுள் அருளால் கிடைத்தது என்று, சமூகத்தின் பிடியில் உங்களுக்கு கிடைக்கும் மலடி என்ற பட்டத்தில் இருந்தும், உங்கள் கணவருக்கு கிடைக்கும் ஆண் மகன் இல்லை என்ற பெயரில் இருந்தும் தப்பித்து கொள்ளுங்கள், ஏனென்றால் குழந்தை பெற இயலவில்லை என்றால் அது பெண்ணுக்கு மட்டும் அழுக்கு அல்ல, இங்கு ஆண்களும் ஆண்மையற்றவராகவே பார்க்கப்படுகிறார்கள் என்பதை பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
கணவனுக்கு துரோகம் இழைத்தவள் என்ற பெயர் உங்கள் மனதில் அழியாத வடு தான்…நீங்கள் செய்த தவறுக்காக, வாழ்நாள் முழுக்க அனுபவியுங்கள். உறவு கொண்டவனிடம் இல்லை நான் தவறு செய்து விட்டேன், என்னை நெருங்காதே என்று விலகி விடுங்கள், குழந்தை உங்கள் கணவருக்கு பெற்றது ,தவறான உறவு கொண்டவனுக்கு இல்லை என்பதை உரைத்துவிடுங்கள் அவனுக்கு. கற்பை தெரிந்தே கொடுக்கத் தெரிந்த உங்களுக்கு , கள்வனை எப்படி கழட்டி விடுவது என்பதும் நன்கு தெரிந்திருக்கும் என்றே நம்புகிறேன்,
மன்னிக்கணும் சகோதரி கடினமான சொல் தான்…! கனத்த இதயத்தோடு சொல்லிவிட்டேன்!
இதில் உங்கள் சூழ்நிலை என்ன என்பது எனக்குத் தெரியாது, நான் நினைப்பதை ஒரு சகோதரிக்கு சொல்வது போல் சொல்லிவிட்டேன்,என்ன இருந்தாலும் நீங்கள் செய்தது தவறுதான்!
இதுபோல் ஆணும் பெண்ணும் சமூகத்திற்க்கு பயந்து வாழாமல், ஒருவருக்கு ஒருவர் உண்மையாக வாழுங்கள்,அதுவே உத்தமமான வாழ்க்கை!
இதை படித்த உங்களுக்கு வேறு எதேனும் நல்ல தீர்வு தெரிந்தால் தயங்காமல் கருத்து தெரிவியுங்கள், நாளை யாரோ ஒருவர் இது போன்ற தவறை செய்யாதிருக்க நாம் காரணமாக இருக்கலாம். ஏனென்றால் அடுத்த தலைமுறைக்கு எது தவறு எது சரி என்று கற்றுகொடுப்தே நம் தலையாய கடமை.
நன்றி ...
என் பதில் :...
இந்த பதிவை முடிந்தால் பெண்கள் அனைவரும் படியுங்கள், வயது வித்தியாசம் இன்றி, யாருக்கு தெரியும் வாழ்வில் நாமும் சில தருணங்களில் சில சிக்கலான முடிவை எடுக்க நேரம் வரலாம்!
கர்பமாகிவிட்டீர்களா?
நல்லது வாழ்த்துக்கள்…💐💐💐
இங்கு அனைவருக்கும் கர்ப்பம் தரிக்க வரன் கிடைப்பதில்லை என்பதை முதலில் உணருங்கள்… சிலருக்கு அது மறுமுறை என்பது நடக்க வாய்ப்பு இல்லாமலும் போலாம், குழந்தையில்லாதவர்களை கேட்டால் தெரியும் அதன் அருமை.
இது ஒருவேளை சித்தரிக்கப்பட்ட கேள்வி என்றாலும், இன்றைய சமூகத்தில் இதுபோன்ற தவறான கர்ப்பம் தரிப்பு நடந்து கொண்டுதான் உள்ளதல்லவா.
இறுதியில் என் தனிப்பட்ட கருத்தை சொல்கிறேன், முதலில் தவறு யார்பக்கம் என்று பார்ப்போம்.
இப்படி பெண் தவறான வழியில் கர்ப்பம் தரிக்க காரணம் என்ன? யார்?
ஆண்கள் தான், மணமுடித்த பெண்ணை மதிக்காது..பணத்தின் பின்னே திரியும் சில வேடிக்கையான மனிதர்களை நீங்கள் பார்த்திருக்கக் கூடும்.திருமணமான மனைவியோ தமிழ்நாட்டில், கணவனின் வேலையோ வெளிநாட்டில் என்றிருந்தால் சில பெண்கள் இத்தகைய சிக்கலான வழியையே தேர்ந்தெடுக்கிறார்கள்…பாவம் அவளும் பெண்ணல்லவா! அவர்களுக்கும் உணர்ச்சிகள் இருக்கும் அல்லவா!
சரி…இல்லை இல்லை தவறுக்கு பெண் தான் காரணம்! எப்படி?
முதலில் பெண்கள் விருப்பமற்ற ஆணை கட்டாய திருமணத்தால் மணந்துகொள்வது, பிறகு விரும்பியவனான காதலனுக்கு குழந்தை பெற்று விடுவோமே என்று தவறான அன்பால் தடம் புரள்கிறார்கள்.சிலர் தாம்பத்திய உறவு சரியான சுகம் தரவில்லை என்று…வேறொரு தலைவனை தேடுகிறார்கள்..
ஆணும் இல்லை, பெண்ணும் இல்லை, இந்த சமூகம் தான் காரணம்:
பெண்கள் கேட்கலாம், ஏன் ஆண்கள் இது போல தவறு செய்வதில்லையா?திருமணம் ஒரு பெண்ணோடு, தேனிலவு வேறு பெண்ணோடு என்று இருக்கிறார்கள்? இதில் நாங்கள் செய்தால் என்ன தவறு என்று? இது ஆண்கள் ஆளும் சமூகம் அம்மா(patriarchial society)என்ன செய்வது.. இந்த சமுதாயம் ஆண் குழந்தை பெற்காவிட்டால் இவள் தேர மாட்டாள் என்று இன்னொரு திருமணம் செய்யவும் தயங்கமாட்டார்கள்.
இந்த ஆண் சமூகம் பெண்ணையே குறை கூறும். அதனாலேயே என்னவோ , ஆணின் இயலாமையை அவர்களின் பெற்றோர்களே கூட ஒப்புக்கொள்ள மாட்டார்கள், இவளுக்கு தான் எதோ குறை என்று சொல்வார்கள்.பெண்கள் குழந்தை தான் பெற்கவில்லை என்றால், மலடி என்கிறீர்கள் இந்த சமூகத்தில், அதே வேறு ஒருவனுக்கு பெற்றால் தாசி என்கிறார்கள், என்று, இத்தகைய சமூக சூழ்நிலைக்கு ஆளாகாமல் இருக்க தகாத முறையிலும் சிலர் பெற்று தகப்பன் இவன் தான் என்று வாய் கூசாமல் கணவனை கை காட்டிவிடுகிறார்கள்.
ஏனென்றால், அம்மா வந்து சொன்னா தான் அப்பாவின் பெயர் தெரியுமடா, அவளும் சொல்லவில்லை என்றால் தப்பாக தான் போகுமடா, என்பதுபோல் தான் பெண்கள் நினைத்தால் யாருக்கு வேண்டும் என்றாலும் குழந்தையை பெற்று கொள்ளலாம்.
இதில் ஆணும் பெண்ணும் தவறு இழைத்தவர்கள் தான் அதில் சந்தேகம் இல்லை.
நீங்கள் உங்கள் சுகத்திற்காக வேறு ஒருவருக்கு பெறாமல், சூழ்நிலையால் சமூக பிடியில் இருந்து தப்பிக்க அப்படி செய்துவிட்டேன், என்று உங்கள் தவறை உணர்ந்தால், தெரிந்துகொள்ளுங்கள் குழந்தை பெற மருத்துவ பரிந்துரைகளும், வாடகைத்தாய்,தொழில்நுட்ப முறை என்று பல வழிகள் உள்ளது அதில் நீங்கள் பெற்றுக் கொண்டிருக்கலாம். அப்படி தவறான முறையில் தான் பெற வேண்டும் என்பது, நீங்கள் செய்த மன்னிக்க முடியாத தவறு தான்.
ஒருவேளை உங்கள் கணவர் குழந்தை பெற்றுதர இயலாதவர், அதனால் அவருக்கு அவப்பெயர் கிடைப்பது என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை அதனால் தான் தெரியாமல் செய்துவிட்டேன் என்று நீங்கள் உணர்ந்தால், அது உங்கள் கணவரின் குழந்தை தான், கடவுள் அருளால் கிடைத்தது என்று, சமூகத்தின் பிடியில் உங்களுக்கு கிடைக்கும் மலடி என்ற பட்டத்தில் இருந்தும், உங்கள் கணவருக்கு கிடைக்கும் ஆண் மகன் இல்லை என்ற பெயரில் இருந்தும் தப்பித்து கொள்ளுங்கள், ஏனென்றால் குழந்தை பெற இயலவில்லை என்றால் அது பெண்ணுக்கு மட்டும் அழுக்கு அல்ல, இங்கு ஆண்களும் ஆண்மையற்றவராகவே பார்க்கப்படுகிறார்கள் என்பதை பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
கணவனுக்கு துரோகம் இழைத்தவள் என்ற பெயர் உங்கள் மனதில் அழியாத வடு தான்…நீங்கள் செய்த தவறுக்காக, வாழ்நாள் முழுக்க அனுபவியுங்கள். உறவு கொண்டவனிடம் இல்லை நான் தவறு செய்து விட்டேன், என்னை நெருங்காதே என்று விலகி விடுங்கள், குழந்தை உங்கள் கணவருக்கு பெற்றது ,தவறான உறவு கொண்டவனுக்கு இல்லை என்பதை உரைத்துவிடுங்கள் அவனுக்கு. கற்பை தெரிந்தே கொடுக்கத் தெரிந்த உங்களுக்கு , கள்வனை எப்படி கழட்டி விடுவது என்பதும் நன்கு தெரிந்திருக்கும் என்றே நம்புகிறேன்,
மன்னிக்கணும் சகோதரி கடினமான சொல் தான்…! கனத்த இதயத்தோடு சொல்லிவிட்டேன்!
இதில் உங்கள் சூழ்நிலை என்ன என்பது எனக்குத் தெரியாது, நான் நினைப்பதை ஒரு சகோதரிக்கு சொல்வது போல் சொல்லிவிட்டேன்,என்ன இருந்தாலும் நீங்கள் செய்தது தவறுதான்!
இதுபோல் ஆணும் பெண்ணும் சமூகத்திற்க்கு பயந்து வாழாமல், ஒருவருக்கு ஒருவர் உண்மையாக வாழுங்கள்,அதுவே உத்தமமான வாழ்க்கை!
இதை படித்த உங்களுக்கு வேறு எதேனும் நல்ல தீர்வு தெரிந்தால் தயங்காமல் கருத்து தெரிவியுங்கள், நாளை யாரோ ஒருவர் இது போன்ற தவறை செய்யாதிருக்க நாம் காரணமாக இருக்கலாம். ஏனென்றால் அடுத்த தலைமுறைக்கு எது தவறு எது சரி என்று கற்றுகொடுப்தே நம் தலையாய கடமை.
நன்றி ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக