கேள்வி :நீங்கள் மிகவும் நேசிக்கும் ஒருவர் உங்களை காயப்படுத்திவிட்டால் அதிலிருந்து வெளிவர என்ன முறையை கையாள்வீர்கள்?
என் பதில் :..
சில பேரிடம் நாம ரொம்ப அதிகமா இடம் எடுத்துப்போம். அவங்க மேல அதிக அன்பு வைச்சிடுவோம். ஆனால் அவங்க நம்மளை அதை மாதிரி நினைக்கவில்லைன்னு நமக்கு ரொம்ப தாமதமா தான் புரியும். அவங்க வாழ்க்கைல நாம பத்தோட பதினொன்னா இருப்போம். ஆனா நம்ம வாழ்க்கையில அவங்க தான் எல்லாமுமா இருப்பாங்க.
சில நேரங்களில் அவர்களின் உண்மை குணத்தை நாம புரிஞ்சிக்க நமக்கு காயம் தேவை படுதுதான். இல்லைன்னா கடைசிவரை அவர்களின் குணம் தெரியாமலேயே போய்விடும்.
குழந்தையை நெருப்பை தொடாதேன்னு சொன்னா கேட்காது. நெருப்பை தொட்டு சூடு பட்டத்துக்கு அப்பறம் தான் புரியும்.
சைக்கிள் ஓட்ட கத்துக்கும் போதும் பத்து தடவை கீழே விழுந்து அடிப்பட்டு தான் அதை நல்லா ஓட்ட கத்துப்போம்.
அதைமாதிரி தான் யார்க்கிட்ட எந்த அளவோட பழகணும்னு நமக்கு புரிய வைக்கும் சில வாழ்க்கை பாடம்.
இது தான் தாமரை இலை. இந்த இலையில் மீது படும் நீரை எப்பவுமே ஒரு லேயர் தடுத்து கொண்டிருக்கும். அதனால் தாமரை மேல் படும் நீர் பட்டும்படாமலே இருக்கும். அதைப்போல தான் நாமும் சில நேரங்களில் பட்டும்படாமல் இருந்துவிடுவது நல்லது.
எதுக்கு அதிக பாசம் வைத்துவிட்டு அதிக காயம் பட வேண்டும். வரும் முன்னே காத்துக்கொள்வது நல்லது.
மனதில் ஏற்பட்ட காயத்தை போக்கும் மருந்து காலம் மட்டுமே. அதுவே உங்களை அந்த வேதனையில் இருந்து வெளிவருவதற்கு உதவும்.
என் பதில் :..
சில பேரிடம் நாம ரொம்ப அதிகமா இடம் எடுத்துப்போம். அவங்க மேல அதிக அன்பு வைச்சிடுவோம். ஆனால் அவங்க நம்மளை அதை மாதிரி நினைக்கவில்லைன்னு நமக்கு ரொம்ப தாமதமா தான் புரியும். அவங்க வாழ்க்கைல நாம பத்தோட பதினொன்னா இருப்போம். ஆனா நம்ம வாழ்க்கையில அவங்க தான் எல்லாமுமா இருப்பாங்க.
சில நேரங்களில் அவர்களின் உண்மை குணத்தை நாம புரிஞ்சிக்க நமக்கு காயம் தேவை படுதுதான். இல்லைன்னா கடைசிவரை அவர்களின் குணம் தெரியாமலேயே போய்விடும்.
குழந்தையை நெருப்பை தொடாதேன்னு சொன்னா கேட்காது. நெருப்பை தொட்டு சூடு பட்டத்துக்கு அப்பறம் தான் புரியும்.
சைக்கிள் ஓட்ட கத்துக்கும் போதும் பத்து தடவை கீழே விழுந்து அடிப்பட்டு தான் அதை நல்லா ஓட்ட கத்துப்போம்.
அதைமாதிரி தான் யார்க்கிட்ட எந்த அளவோட பழகணும்னு நமக்கு புரிய வைக்கும் சில வாழ்க்கை பாடம்.
இது தான் தாமரை இலை. இந்த இலையில் மீது படும் நீரை எப்பவுமே ஒரு லேயர் தடுத்து கொண்டிருக்கும். அதனால் தாமரை மேல் படும் நீர் பட்டும்படாமலே இருக்கும். அதைப்போல தான் நாமும் சில நேரங்களில் பட்டும்படாமல் இருந்துவிடுவது நல்லது.
எதுக்கு அதிக பாசம் வைத்துவிட்டு அதிக காயம் பட வேண்டும். வரும் முன்னே காத்துக்கொள்வது நல்லது.
மனதில் ஏற்பட்ட காயத்தை போக்கும் மருந்து காலம் மட்டுமே. அதுவே உங்களை அந்த வேதனையில் இருந்து வெளிவருவதற்கு உதவும்.
நன்றி ....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக