கேள்வி :..அன்று உறவுகள் சுகமான சுமைகளாக தெரிந்தவர்கள், இன்று சுமைகளாக மட்டும் தெரிய காரணம் என்ன?
என் பதில் :..
"நமக்கும் நாலு பேரு வேணும்பா" இதை இப்போது கூறினால் "அட போயா சும்மா பழைய கதையை பேசிகிட்டு..எங்களுக்கு எதுக்கு அந்த நாலு பேரு காசு கொடுத்தா நாற்பது பேரு வந்து நமக்கு ஊழியம் பண்ணுவான்" என்று பதில் வரும்.
இப்போது இருக்கும் சூழலில்,கணவன்,மனைவி இருவரும் வேலைக்குச் செல்வது பெரும்பான்மை ஆகி விட்டது.விருந்தினர் வருகை என்றாலே வீட்டை சுத்தப்படுத்த வேண்டும்,அவர்களை கவனிக்க வேண்டும்,முறையாக சமையல் செய்ய வேண்டும் (No Swiggy,No Zomato),தேவைப்பட்டால் அலுவலக விடுப்பு எடுக்க வேண்டும் என பல சங்கடங்கள்.சரிப்பா வார நாட்களில் வந்தா தான கஷ்டம் வார இறுதில வர சொல்லுங்க என்று நீங்கள் நினைத்தால் அதிலும் சிக்கல் இருக்கு பாஸ்.
எங்களுக்கு கிடைக்கறதே வாரத்தில் ஒண்ணு இல்ல ரெண்டு நாள் தான்.அப்பவும் சமைக்க,துடைக்க,துவைக்க இது மாதிரி ஆயிரம் வேலை இருக்கு.பசங்களை வேற டான்ஸ் கிளாஸ்,பாட்டு கிளாஸ்,இன்ன பிற கிளாஸ் விட்டு கூட்டி வரணும்.
இதுக்கு எல்லாம் மேல,ஒரு நாள் தான் லேட்டா தூங்கி லேட்டா எழுந்துக்க முடியும்.அப்படியே சாயங்காலமா கிளம்பி மால்/சினிமா/பீச்சுனு போயிட்டு அப்படியே டின்னர நல்லா சாப்பிட்டு வரலாமுன்னு பார்த்தா இதை எல்லாம் கெடுக்குற மாதிரி விருந்தாளிக வந்தா நல்லாவா இருக்கும் !? சொல்லுங்கண்ணே சொல்லுங்க..
மேற்கூறியது ஒரு எடுத்துக்காட்டு தான்.அதாகப்பட்டது,
உறவுகளை வளர்ப்பதில் ஆர்வம் காட்டாமை.
தினசரி வாழ்க்கையில் நேரமின்மை.
தனது வழக்கமான அட்டவணையில் மாற்றத்தை விரும்பாமை.
உறவுகளின் மதிப்பு மற்றும் அருமையை அறியாமை.
ஒத்துப்போகும் ,விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இல்லாமை.
உறவுகளுக்கு உதவி செய்வதில் காட்டும் தயக்கம்.
உறவுகளை அனுசரித்து செயல்படுவதில் உள்ள சிரமம்.
உறவுகளின் நிறைகளை குறைவாகவும்,குறைகளை அதிகமாகவும் எடை போடுதல்.
இவை அனைத்தும் காரணங்களே..ஆனால் எல்லாவற்றிற்கும் மேல்,
"மனமிருந்தால் மார்க்கமுண்டு".உறவுகள் சுகமாக தெரிவதற்கும் சுமையாக தெரிவதற்கும் நம்முடைய மனநிலை (Mindset) ஒன்று தான் காரணி.
இன்றும் கூட சொந்த பந்தம் அனைத்தும் ஒன்று கூடி, பெருசு முதல் சிறுசு வரை,பண்டிகை,விசேஷம்,சுற்றுலா என்று அசத்தும் குடும்ப உறவுகள் ஆங்காங்கே அவ்வப்போது தென்படும்....நீங்களும் பார்த்து இருப்பீர்கள் ஏக்க பெருமூச்சுடன் ...
நன்றி ...மனா ஆறுதலுக்காக சில சொந்தங்களையாவது வாழ்க்கையில் சேர்த்துவையுங்கள் ...
என் பதில் :..
"நமக்கும் நாலு பேரு வேணும்பா" இதை இப்போது கூறினால் "அட போயா சும்மா பழைய கதையை பேசிகிட்டு..எங்களுக்கு எதுக்கு அந்த நாலு பேரு காசு கொடுத்தா நாற்பது பேரு வந்து நமக்கு ஊழியம் பண்ணுவான்" என்று பதில் வரும்.
இப்போது இருக்கும் சூழலில்,கணவன்,மனைவி இருவரும் வேலைக்குச் செல்வது பெரும்பான்மை ஆகி விட்டது.விருந்தினர் வருகை என்றாலே வீட்டை சுத்தப்படுத்த வேண்டும்,அவர்களை கவனிக்க வேண்டும்,முறையாக சமையல் செய்ய வேண்டும் (No Swiggy,No Zomato),தேவைப்பட்டால் அலுவலக விடுப்பு எடுக்க வேண்டும் என பல சங்கடங்கள்.சரிப்பா வார நாட்களில் வந்தா தான கஷ்டம் வார இறுதில வர சொல்லுங்க என்று நீங்கள் நினைத்தால் அதிலும் சிக்கல் இருக்கு பாஸ்.
எங்களுக்கு கிடைக்கறதே வாரத்தில் ஒண்ணு இல்ல ரெண்டு நாள் தான்.அப்பவும் சமைக்க,துடைக்க,துவைக்க இது மாதிரி ஆயிரம் வேலை இருக்கு.பசங்களை வேற டான்ஸ் கிளாஸ்,பாட்டு கிளாஸ்,இன்ன பிற கிளாஸ் விட்டு கூட்டி வரணும்.
இதுக்கு எல்லாம் மேல,ஒரு நாள் தான் லேட்டா தூங்கி லேட்டா எழுந்துக்க முடியும்.அப்படியே சாயங்காலமா கிளம்பி மால்/சினிமா/பீச்சுனு போயிட்டு அப்படியே டின்னர நல்லா சாப்பிட்டு வரலாமுன்னு பார்த்தா இதை எல்லாம் கெடுக்குற மாதிரி விருந்தாளிக வந்தா நல்லாவா இருக்கும் !? சொல்லுங்கண்ணே சொல்லுங்க..
மேற்கூறியது ஒரு எடுத்துக்காட்டு தான்.அதாகப்பட்டது,
உறவுகளை வளர்ப்பதில் ஆர்வம் காட்டாமை.
தினசரி வாழ்க்கையில் நேரமின்மை.
தனது வழக்கமான அட்டவணையில் மாற்றத்தை விரும்பாமை.
உறவுகளின் மதிப்பு மற்றும் அருமையை அறியாமை.
ஒத்துப்போகும் ,விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இல்லாமை.
உறவுகளுக்கு உதவி செய்வதில் காட்டும் தயக்கம்.
உறவுகளை அனுசரித்து செயல்படுவதில் உள்ள சிரமம்.
உறவுகளின் நிறைகளை குறைவாகவும்,குறைகளை அதிகமாகவும் எடை போடுதல்.
இவை அனைத்தும் காரணங்களே..ஆனால் எல்லாவற்றிற்கும் மேல்,
"மனமிருந்தால் மார்க்கமுண்டு".உறவுகள் சுகமாக தெரிவதற்கும் சுமையாக தெரிவதற்கும் நம்முடைய மனநிலை (Mindset) ஒன்று தான் காரணி.
இன்றும் கூட சொந்த பந்தம் அனைத்தும் ஒன்று கூடி, பெருசு முதல் சிறுசு வரை,பண்டிகை,விசேஷம்,சுற்றுலா என்று அசத்தும் குடும்ப உறவுகள் ஆங்காங்கே அவ்வப்போது தென்படும்....நீங்களும் பார்த்து இருப்பீர்கள் ஏக்க பெருமூச்சுடன் ...
நன்றி ...மனா ஆறுதலுக்காக சில சொந்தங்களையாவது வாழ்க்கையில் சேர்த்துவையுங்கள் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக