ஞாயிறு, 17 மே, 2020

பாளையக்காரர்கள் காலத்து பாசன முறை கல்வெட்டு.....
உடுமலை: பாளையக்காரர்கள் ஆட்சிக்காலத்தில், மேற்குத்தொடர்ச்சி மலையிலிருந்து மழைக்
காலத்தில், வீணாக செல்லும் தண்ணீரை தடுத்து, அணை கட்டி விவசாயத்திற்கு பயன்படுத்தியது, உடுமலை அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ள கல்வெட்டு தகவல் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
உடுமலை அருகே மேற்குத்தொடர்ச்சி மலை திருமூர்த்தி மலையிலிருந்து பாலாறு உருவாகி, சமவெளிப்பகுதிக்கு செல்கிறது. பி.ஏ.பி., திட்டத்தில் திருமூர்த்தி அணை கட்டும் முன், பாலாற்றில் சென்ற தண்ணீரை தேக்கி, விவசாயத்திற்கு பயன்படுத்த தளி பாளையக்காரர்கள் ஆட்சிக்காலத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, மேடான பகுதியிலிருந்து வரிசையாக கீழ்நோக்கி ஏழு குளங்கள் அமைக்கப்பட்டு, தற்போதும் அக்குளங்கள் பயன்பாட்டில் உள்ளன. இக்குளங்களின் தொன்மையை உறுதிப்படுத்தும் வகையில், பெரியகுளத்தில், நீர் மட்டத்தை அளக்க
இதே போல், குளங்களை பாதுகாத்த வீரர்களுக்கு சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன. இவ்வரிசையில், திருமூர்த்தி மலையில் இருந்து மேற்கு நோக்கி பாயும் பாலாற்றின் குறுக்கேயும், தளி பாளையக்காரர்கள் ஆட்சிக்காலத்தில் அணை கட்டப்பட்டு, விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் சார்பில், திருமூர்த்திமலை பகுதியில், ஜல்லிபட்டி பழனிச்சாமி, அருட்செல்வன், , சிவக்குமார் உட்பட குழுவினர் ஆய்வு நடத்தினர். ஆய்வில், மொடக்குப்பட்டி ரோட்டில், பாலாற்றின் கரையில் இருந்த கல்வெட்டு கண்டறியப்பட்டது. அருகில், தளி பாளையக்காரர் சிலையுடன், பாறையில் செதுக்கப்பட்டிருந்த கல்வெட்டு படியெடுக்கப்பட்டது. கல்வெட்டில், அணை கட்டப்பட்ட ஆண்டு, மறைந்துள்ளது. சித்திரை மாதத்தில் தளி பாளையக்காரர் எர்ரமநாயக்கர் என்பவரால், அணை கட்டப்பட்டு, பாசன பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. தடுப்பணை போன்ற இந்த அணை சுவர்கள் இடிந்து ஓடையில் கிடக்கின்றன.
ஆய்வு நடுவத்தினர் கூறுகையில், 'தளி பாளையக்காரர் காலத்தில், பல்வேறு பாசன திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. தற்போது, திருமூர்த்தி அணையின் கழிவு நீர் ஓடையாக மாறியுள்ள பாலாற்றின் கரையிலுள்ள பாறையில் இந்த கல்வெட்டு உள்ளது. சிலை காலப்போக்கில் சேதமடைந்துள்ளது. அப்பகுதி எர்ரம நாயக்கரின் பெயரால், ஏராம் வயல் என அழைக்கப்படுகிறது. அங்குள்ள சிலைக்கு குறிப்பிட்ட நாட்களில், மக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். உடுமலை பகுதியில் நீர் பாசன முறைகள் சிறப்புற்றிருந்தது
முற்காலத்தில், அமைக்கப்பட்ட கல்மானி தற்போதும் உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக