செவ்வாய், 12 மே, 2020

கேள்வி :சேற்று மண்ணில் கால் புதைந்ததால் ஒருவரின் முகம் அருவருப்பு கொண்டதை நேரில் கண்டேன். இவர்கள் தானா மண்ணின் மைந்தர்கள்?

என் பதில் ...

முதலில் யார் மண்ணின் மைந்தர்கள் என்பதை வரையறுத்தது கொள்வோம் ,

இம் மண்ணில் பிறந்து இம் மண்ணிற்காக வாழ்ந்து பல சிறப்புகளை சேர்த்து இந்த மண்ணில் மடிபவர்கள் தான் மண்ணின் மைந்தர்கள் அப்படி பார்க்கும்பொழுது மனிதர்கள் என்றும் மண்ணின் மைந்தர்கள் இல்லை..

உண்மையில் மண்ணின் மைந்தர்கள் கரப்பான் பூச்சிகளும், மண்புழுக்களும் தான் , அவைகளால் மட்டுமே மண்ணின்கு வளமும் நலமும் அடைகின்றனர் அவைகள் தான் மண்ணில் பிறந்து மண்ணை உண்டு மண்ணில் மடிகின்றன,



சேற்று மண்ணில் கால் புதைந்ததால் ஒருவரின் முகம் அருவருப்பு கொண்டதை நேரில் கண்டேன் இவர்கள் தான் மண்ணின் மைந்தர்கள்?


சேற்று மண்ணின் சுவாசமும் வாசமும் சுவையும் யாவரும் அறிவதில்லை. விவசாய குடும்பதில் பிறந்தவர்களுக்கே வயல்சேறு முகம் சுழிக்கதான் செய்கிறது.


என் தாத்தா தளி ஜல்லிபட்டி குமாரசாமி வயல் மண்ணோடு(மானுப்பட்டி அருகே ) உறவாடி வேலைசெய்த பிறகு கைகூட கழுவாமல் கஞ்சி கலனில் கைவிட்டு சாப்பிடுவார் மண் வாசத்திற்கு ஈடே இல்லை என்று என் அம்மா சொல்ல கேட்டு இருக்கிறேன்


முகம் சுழிப்பவர்கள் சுழிக்கட்டும் ஆனால் என்றும் சேற்று மண்ணில் களிப்பவர்களும் உண்டு என்போன்றோர்கள் அய்யா,,


சேற்றில் பட்ட என் கால்களை கூட பல நாட்கள் நான் ரசித்ததுண்டு


நன்றி...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக