வெள்ளி, 1 மே, 2020

குஜ்ஜபொம்மு  எப்படி பிறந்தார் என்ற தகவல்  ஒரு பாடல் வழியாக கூறும் செய்தியை பகிர்ந்து கொள்கிறேன். 
 காடேரி பொம்மு குரி பொம்மு வீரசின்னம்மா இவர்கள் மூன்று பேர் உடன் பிறந்தோர் என்றும்  வீர சின்னம்மா  கன்னியாக கருவுற்ற செய்தி அறிந்த காடார பொம்மு சகோதரி நீதி தவறியதாய் 
 சந்தன கட்டைகளை கொண்டு  அடக்கி தீ மூட்டி அந்த தீயில்  வீரசின்னம்மாவை இறக்கி விடுகிறார்கள்   அம்மக்கள்  அப்பொழுது வயிற்றில் இருந்த குழந்தை வெடித்து கத்தி ராயிலு  எனும் பெயர் கொண்ட   பாறைகளின் இடுக்குகளில்  போய் விழுந்த அக்குழந்தை  தானாக காடுகளில் காட்டெருமை பால் பருகி வளந்து வெறிக்கெட்டி முத்து  என்ற நாயக்கர்   (ஆவலு தொட்டி) மலையில் போட்ட பட்டிகளில் அலைந்த அக்குழந்தையை விசாரித்து  அப்பொழுது அங்கு வரும் மீனுலிங்கம் நடந்தவற்றை கூற பின்னர் எடுத்து வளர்த்து ஆளாக்கி  காடர  பொம்மு  மக்கள் கூடும்  கூட்டங்களில்  நிறுத்தி நடந்தவற்றை கூறி மக்கள் ஏற்று கொண்டு  வளர்த்ததாகவும்  அவர்கள் அக்கனி குதிரையில் ஆகாயத்தில் பறக்க தெய்வ சக்தி படைத்தவர் என்றும் கூறுகிறது.
 ஆனால் இவை நம்பும் படியாக இருக்கிறதோ இல்லையோ இது போன்ற கதைப்பாடல் இன்றும் கோவில் திருவிழாக்களில் பாடுவதை கேக்க முடிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக