கேள்வி :ஒரு ஆணாக, பிறரிடம் என்னை நான் எப்படி சிறந்த ஆளுமையாக காட்டுவது? பிறரால் சிறந்த ஆளுமை குணங்களாக கருதப்படுபவை எவை?
என் பதில் :..
ஒரு ஆணாக சிறந்த ஆளுமை காட்டுவது சுலபம் தான். நான் பார்த்த மிக சிறந்த மனிதர்களிடம் அவர்களை நினைத்தால் என் மனதில் தெரிவதை சொல்கிறேன்
ஆள் பாதி ஆடை பாதி - தலைமை பொறுப்பு அல்லது சிறந்த ஆண்கள் மிக நேர்த்தியாக, சிறந்த முறையில் ஆடை அணிவார்கள். அந்த காலணி ஆடை தலை சீவியது அவர்களின் நகம் எல்லாம் சரியா இருக்கும்.
ஆக ஆளுமையை காட்ட அழகாக நேர்த்தியாக உடை அணிய வேண்டும்
அளவோடு பேச வேண்டும் - ஆண்மைக்கான இலக்கணங்களில் கூட இதனை ஒன்றாக கருதுகின்றனர். ஜவ்வு ரம்பம் மாதிரி பேசுபவர்கள் சிறந்த அதிகாரிகள் இல்லை. அவர்கள் செயல் வீரராக இருந்து பேச்சினை குறைத்து கொள்கின்றனர்
தலைமை பண்பு ஏற ஏற பணிவு இன்னும் ஏறுகிறது - ஹுமிலிட்டி(Humility) என்கிற பணிவு அதிகம் இருக்கும். இது ஆளுமைக்கான சிறந்த குணம். ஏ பீ ஜெ கலாம் ஐயா அவர்களை கிட்ட பார்த்தது இதிலிருந்து...சில பிரபலங்கள் மற்றும் அலுவலக வீ பீ எல்லாரும் இந்த பணிவு மிக அதிகம் உள்ளவர்கள்.
செய்வதை விடாமல் செய்யும் ஒழுக்கம் பெற்றவர்கள் - அதாவது தினமும் 4.30 மணிக்கு எழ வேண்டும் என்றால் ஓர் நாள் கூட தவறாமல் அதனை செய்தனர். என் தந்தை அவர்களும் நல்ல பதவி சிறந்த பெயரில் இருந்தார்கள். அவர்கள் ஓர் நாள் கூட இந்த நேரம் என்கிற விஷயமோ, சுத்தம் இப்படி சில பண்புகள் தவறியதே இல்லை. அப்பா அவர்கள் பெற்றோர்களுக்கான ஓட்ட பந்தயத்தில் 50-60 வயதில் ஓடினால் கூட முதல் மூன்றில் வந்ததற்கு அவருக்குள் இருந்த இந்த ஒழுக்கம். இது ஆளுமையை அப்பட்டமாக காட்டும்,
பிறரிடம் கற்றுக்கொள்வது - எல்லோரிடத்திலும் கற்று கொள்ள நிறைய உண்டு. ஆளுமை காட்டுவதும் ஆண்மைக்கான இன்னோர் விஷயம் "எனக்கு மட்டும் உலகத்தில் அதிகம் தெரியும்...நான் எதுக்கு கத்துக்கணும்?" இப்படி இருக்க மாட்டார்கள். பலரிடம் இருந்து கற்று கொள்வார்கள். எந்த வயதிலும் கற்று கொள்வார்கள்.
திரு கலாம் ஐயா அவர்கள் நம் கிரிக்கெட் வீரர்களிடம் ஸ்பின் போலிங் பற்றி கற்றுக்கொண்டார் என்பது படித்து உள்ளேன்
புன்முறுவல் மற்றும் உணர்ச்சியை கட்டுக்கோப்பாக வைத்தல் - பெரிய தலைவர்கள் சிறந்த ஆண்கள் உணர்ச்சியை கட்டுக்கோப்பாக வைத்து எப்போதும் ஓர் புன்னகை செய்வார்கள். இது மிக அழகு. இந்த விடையை எழுதும்போது கூட ஓர் பெரிய மெண்டோர் ஐயாவின் முகம் வந்து செல்கிறது. கோடி நட்சத்திரம் பூத்த சந்தோஷம், அந்த புன்னகையில் உண்டு தெரியுமா? மருந்து மாதிரி இருக்கும்...அவர்களோடு உள்ள சில நிமிடங்கள் சொர்க்கம் போல இருக்கும்...ஆற்றல்கள் அதிகரிக்கும்.
நிறைய படிப்பார்கள் - இதற்கு மேலும் விளக்கம் தேவை இல்லை. எந்த மிக அழகான ஆளுமை காட்டும் ஆண் மகனும் எல்லா துறையிலும் படித்தவர்கள். அந்த படிக்கும் கருவி தான் மாறுபடலாம் தவிர கற்பது அதிகம்.
சுறுசுறுப்பாக இருப்பார்கள் - இதுவும் ரொம்ப விளக்க தேவை இல்லை. எப்போதும் ஓர் தேடல் இருக்கும். நேர்மறை எண்ணங்கள் நிறைய இருக்கும்....இதனை எழுதும் பொழுது எனக்கு பிடித்த ஓர் எழுத்தாளர் முகம் வந்து போகிறது....சுறுசுறுப்பா இருப்பாங்க...துடிப்பா இருப்பாங்க...இது ஆளுமை கொடுக்கும்
அளவான நகைச்சுவை கண்டிப்பாக இருக்கும் - இதுவும் ஓரளவு தலைவர்களிடம் உண்டு. தலைமை பொறுப்பு ஏற்க ஏற்க வேலை பளு டென்ஷன் அதிகம்...இதில் மிக கொடிய டெட்லைன் நேரத்தில் நம் பாஸ் அவர்களும் சிடுசிடு என்றோ உணர்ச்சி பிழம்பாக இருந்தால்,..வேலை ஊத்தி மூடிடும்.
என் மிக அருமையான சில மேல் அதிகாரிகள் நகைச்சுவை அழகாக உள்ளவர்கள்.
பஞ்சுவலிட்டி எனப்படும் நேரத்தை சரியாக கடைபிடித்தல் - இது மிக சிறந்த ஆளுமையை காட்டும்.
மிக முக்கியமான பண்பு..அருமையான பண்பு. பிறரின் நேரத்தையும் நாம் மதிக்கிறோம் என்பதை வேறு எப்படி காட்ட முடியும்?
நன்றி ...
என் பதில் :..
ஒரு ஆணாக சிறந்த ஆளுமை காட்டுவது சுலபம் தான். நான் பார்த்த மிக சிறந்த மனிதர்களிடம் அவர்களை நினைத்தால் என் மனதில் தெரிவதை சொல்கிறேன்
ஆள் பாதி ஆடை பாதி - தலைமை பொறுப்பு அல்லது சிறந்த ஆண்கள் மிக நேர்த்தியாக, சிறந்த முறையில் ஆடை அணிவார்கள். அந்த காலணி ஆடை தலை சீவியது அவர்களின் நகம் எல்லாம் சரியா இருக்கும்.
ஆக ஆளுமையை காட்ட அழகாக நேர்த்தியாக உடை அணிய வேண்டும்
அளவோடு பேச வேண்டும் - ஆண்மைக்கான இலக்கணங்களில் கூட இதனை ஒன்றாக கருதுகின்றனர். ஜவ்வு ரம்பம் மாதிரி பேசுபவர்கள் சிறந்த அதிகாரிகள் இல்லை. அவர்கள் செயல் வீரராக இருந்து பேச்சினை குறைத்து கொள்கின்றனர்
தலைமை பண்பு ஏற ஏற பணிவு இன்னும் ஏறுகிறது - ஹுமிலிட்டி(Humility) என்கிற பணிவு அதிகம் இருக்கும். இது ஆளுமைக்கான சிறந்த குணம். ஏ பீ ஜெ கலாம் ஐயா அவர்களை கிட்ட பார்த்தது இதிலிருந்து...சில பிரபலங்கள் மற்றும் அலுவலக வீ பீ எல்லாரும் இந்த பணிவு மிக அதிகம் உள்ளவர்கள்.
செய்வதை விடாமல் செய்யும் ஒழுக்கம் பெற்றவர்கள் - அதாவது தினமும் 4.30 மணிக்கு எழ வேண்டும் என்றால் ஓர் நாள் கூட தவறாமல் அதனை செய்தனர். என் தந்தை அவர்களும் நல்ல பதவி சிறந்த பெயரில் இருந்தார்கள். அவர்கள் ஓர் நாள் கூட இந்த நேரம் என்கிற விஷயமோ, சுத்தம் இப்படி சில பண்புகள் தவறியதே இல்லை. அப்பா அவர்கள் பெற்றோர்களுக்கான ஓட்ட பந்தயத்தில் 50-60 வயதில் ஓடினால் கூட முதல் மூன்றில் வந்ததற்கு அவருக்குள் இருந்த இந்த ஒழுக்கம். இது ஆளுமையை அப்பட்டமாக காட்டும்,
பிறரிடம் கற்றுக்கொள்வது - எல்லோரிடத்திலும் கற்று கொள்ள நிறைய உண்டு. ஆளுமை காட்டுவதும் ஆண்மைக்கான இன்னோர் விஷயம் "எனக்கு மட்டும் உலகத்தில் அதிகம் தெரியும்...நான் எதுக்கு கத்துக்கணும்?" இப்படி இருக்க மாட்டார்கள். பலரிடம் இருந்து கற்று கொள்வார்கள். எந்த வயதிலும் கற்று கொள்வார்கள்.
திரு கலாம் ஐயா அவர்கள் நம் கிரிக்கெட் வீரர்களிடம் ஸ்பின் போலிங் பற்றி கற்றுக்கொண்டார் என்பது படித்து உள்ளேன்
புன்முறுவல் மற்றும் உணர்ச்சியை கட்டுக்கோப்பாக வைத்தல் - பெரிய தலைவர்கள் சிறந்த ஆண்கள் உணர்ச்சியை கட்டுக்கோப்பாக வைத்து எப்போதும் ஓர் புன்னகை செய்வார்கள். இது மிக அழகு. இந்த விடையை எழுதும்போது கூட ஓர் பெரிய மெண்டோர் ஐயாவின் முகம் வந்து செல்கிறது. கோடி நட்சத்திரம் பூத்த சந்தோஷம், அந்த புன்னகையில் உண்டு தெரியுமா? மருந்து மாதிரி இருக்கும்...அவர்களோடு உள்ள சில நிமிடங்கள் சொர்க்கம் போல இருக்கும்...ஆற்றல்கள் அதிகரிக்கும்.
நிறைய படிப்பார்கள் - இதற்கு மேலும் விளக்கம் தேவை இல்லை. எந்த மிக அழகான ஆளுமை காட்டும் ஆண் மகனும் எல்லா துறையிலும் படித்தவர்கள். அந்த படிக்கும் கருவி தான் மாறுபடலாம் தவிர கற்பது அதிகம்.
சுறுசுறுப்பாக இருப்பார்கள் - இதுவும் ரொம்ப விளக்க தேவை இல்லை. எப்போதும் ஓர் தேடல் இருக்கும். நேர்மறை எண்ணங்கள் நிறைய இருக்கும்....இதனை எழுதும் பொழுது எனக்கு பிடித்த ஓர் எழுத்தாளர் முகம் வந்து போகிறது....சுறுசுறுப்பா இருப்பாங்க...துடிப்பா இருப்பாங்க...இது ஆளுமை கொடுக்கும்
அளவான நகைச்சுவை கண்டிப்பாக இருக்கும் - இதுவும் ஓரளவு தலைவர்களிடம் உண்டு. தலைமை பொறுப்பு ஏற்க ஏற்க வேலை பளு டென்ஷன் அதிகம்...இதில் மிக கொடிய டெட்லைன் நேரத்தில் நம் பாஸ் அவர்களும் சிடுசிடு என்றோ உணர்ச்சி பிழம்பாக இருந்தால்,..வேலை ஊத்தி மூடிடும்.
என் மிக அருமையான சில மேல் அதிகாரிகள் நகைச்சுவை அழகாக உள்ளவர்கள்.
பஞ்சுவலிட்டி எனப்படும் நேரத்தை சரியாக கடைபிடித்தல் - இது மிக சிறந்த ஆளுமையை காட்டும்.
மிக முக்கியமான பண்பு..அருமையான பண்பு. பிறரின் நேரத்தையும் நாம் மதிக்கிறோம் என்பதை வேறு எப்படி காட்ட முடியும்?
நன்றி ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக