கேள்வி :..நம்பிக்கை துரோகத்தை சகித்து கொள்வது எப்படி?
என் பதில் :..
நம்பிக்கை துரோகம் நமது உள்ளத்தை மட்டுமல்ல உடலையும் உருக்கும். அந்த நொடியில் கண்டிப்பாக , கோபம், வலி, அவநம்பிக்கை, அதிர்ச்சி போன்றவை நம் உடலை தாக்கும். அடுத்து நம் மனதை எந்த அளவிற்கு அது தாக்கும் என்றால், யார் அதை செய்தது, எந்த விஷயத்தில் செய்தது என்பதை பொறுத்தது.
ரொம்ப உணர்ச்சிபூர்வமான விஷயத்தில் நமக்கு நம்பிக்கையான ஒருவர் இதை செய்திருக்கும்போது, எப்படி மீண்டு வருவது? எத்தனையோ வழிகள் சொல்லப்பட்டாலும், முதலில் செய்ய வேண்டியது இதுதான்.
அது நம்மை ரொம்பவும் காயப் படுத்தும் என்பதை ஒத்துக் கொள்ளவேண்டும். . இதயத் தாக்குதலுக்கு இணையானது அது. அதன் தொடர்ச்சியாக வரும் மனச் சோர்வு ….. யாரோ நம்முடைய இதயத்தை வேரோடு பிடுங்கி, தூக்கிஎரிந்தது போல…வெறும் சூனியமாய் ஆனது போல, உடம்பிலுள்ள சக்தி எல்லாத்தையும் பிழிஞ்சு எடுத்தது போல….உடம்பே பற்றி எறிவது போல…இதயமே சுக்கு நூறாய் ஆனது போல…
அந்த வலி ..அனுபவிக்கத்த்தான் வேண்டும்….ஓடவும் முடியாது. ஒளியவும் முடியாது…. எல்லோரும் அந்த கட்டத்தை தாண்டித்தான் வந்திருக்காங்க. நாமளும் தாண்டனும். தாண்டுவோம்.
அடுத்தது ….நம்பிக்கை துரோகம் செய்த நபர்… அவர் எந்த அளவுக்கு நமக்கு முக்கியமுன்னு பார்க்கணும். இந்த காரியத்தை தெரிந்தே செய்தாரா? நாம படறகஷ்டம் அவருக்கு தெரியுமா? அதற்க்கு வருத்தப்படுறாரா? நம்மையே கேட்டுக்கணும்.சந்தர்ப்பம் கிடைச்சால், அவர் வேண்டினால், அவர் தரப்பையும் கேட்போம். பிறகு முடிவு செய்வோம், நம்முடைய அடுத்த கட்ட வாழ்க்கை பயணத்திற்கு அவர் தேவைதாணா? தேவை என்றால் அவரை மன்னிக்க பழக வேண்டும். கஷ்டம் தான். நமக்கு நாமே கொஞ்சம் டைம் கொடுப்போம். அவர் நமக்கு செய்த, நமக்கு தெரிஞ்சவங்களுக்கு செய்த நல்ல காரியத்தை ஞாபகப்படுத்திக்குவோம். கொஞ்சம் கொஞ்சமாக அவர் மேலிருந்த பழியுனர்ச்சியை துடைப்போம். இது போல திரும்பவும் நடக்காம இருக்க வழி தேடுவோம்.
முடியாதா? பிரியறதுக்கு தயாராவோம். அதுதான் நல்லது.
கடைசியாக"நடுவுல கொஞ்ச பக்கத்தை காணோமின்னு" பயணத்தை தொடருவோம். நமக்கு நாமே அடிக்கடி சொல்லி கொள்வோம். நடந்த தவறுக்கு நாம் காரணம் இல்லையின்னு.நம்மை நாம் காயப்படுத்திகாம இருக்கிறது ரொம்ப முக்கியம். அதே போல மத்தவங்க செய்ததையும் நியாயப்படுத்த வேண்டாம்.
இது நடந்ததாலே மனுஷங்க மேல நாம வச்சிருந்த நம்பிக்கை குறையக்கூடாது. எல்லோரும் ஒன்னு கிடையாது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்" என்பது இங்கே செல்லுபடி ஆகாது.நம்பிக்கை வைக்கிறதுக்கு எத்தனையோ பேர் உண்டு..உங்களைப்போல..இந்த ஒரு சம்பவம் எவ்வளவு கெட்டதானாலும் நம்ம வாழ்க்கையை மாற்ற கூடாது. நாம எப்போதும் போல திறந்த மனசோடவே இருப்போம். அதை ஒரு அனுபவமா எடுத்துக்குவோம். அந்த வலி? அது தான் நாம் இன்னும் மனிதத்தன்மையோட இருக்கோம்னு காட்ற விஷயம்.. அது இந்நேரம் வடுவாயிருக்கும். இல்லேனாலும் பின்னாடி ஆயிடும். உடைஞ்ச இதயம்? இருக்கிரதிலேயே உடைய உடைய வலிமையாறது அது தானாம். அப்புறம் என்ன?
வாழ்க்கை வாழ்வதற்கே ....
என் பதில் :..
நம்பிக்கை துரோகம் நமது உள்ளத்தை மட்டுமல்ல உடலையும் உருக்கும். அந்த நொடியில் கண்டிப்பாக , கோபம், வலி, அவநம்பிக்கை, அதிர்ச்சி போன்றவை நம் உடலை தாக்கும். அடுத்து நம் மனதை எந்த அளவிற்கு அது தாக்கும் என்றால், யார் அதை செய்தது, எந்த விஷயத்தில் செய்தது என்பதை பொறுத்தது.
ரொம்ப உணர்ச்சிபூர்வமான விஷயத்தில் நமக்கு நம்பிக்கையான ஒருவர் இதை செய்திருக்கும்போது, எப்படி மீண்டு வருவது? எத்தனையோ வழிகள் சொல்லப்பட்டாலும், முதலில் செய்ய வேண்டியது இதுதான்.
அது நம்மை ரொம்பவும் காயப் படுத்தும் என்பதை ஒத்துக் கொள்ளவேண்டும். . இதயத் தாக்குதலுக்கு இணையானது அது. அதன் தொடர்ச்சியாக வரும் மனச் சோர்வு ….. யாரோ நம்முடைய இதயத்தை வேரோடு பிடுங்கி, தூக்கிஎரிந்தது போல…வெறும் சூனியமாய் ஆனது போல, உடம்பிலுள்ள சக்தி எல்லாத்தையும் பிழிஞ்சு எடுத்தது போல….உடம்பே பற்றி எறிவது போல…இதயமே சுக்கு நூறாய் ஆனது போல…
அந்த வலி ..அனுபவிக்கத்த்தான் வேண்டும்….ஓடவும் முடியாது. ஒளியவும் முடியாது…. எல்லோரும் அந்த கட்டத்தை தாண்டித்தான் வந்திருக்காங்க. நாமளும் தாண்டனும். தாண்டுவோம்.
அடுத்தது ….நம்பிக்கை துரோகம் செய்த நபர்… அவர் எந்த அளவுக்கு நமக்கு முக்கியமுன்னு பார்க்கணும். இந்த காரியத்தை தெரிந்தே செய்தாரா? நாம படறகஷ்டம் அவருக்கு தெரியுமா? அதற்க்கு வருத்தப்படுறாரா? நம்மையே கேட்டுக்கணும்.சந்தர்ப்பம் கிடைச்சால், அவர் வேண்டினால், அவர் தரப்பையும் கேட்போம். பிறகு முடிவு செய்வோம், நம்முடைய அடுத்த கட்ட வாழ்க்கை பயணத்திற்கு அவர் தேவைதாணா? தேவை என்றால் அவரை மன்னிக்க பழக வேண்டும். கஷ்டம் தான். நமக்கு நாமே கொஞ்சம் டைம் கொடுப்போம். அவர் நமக்கு செய்த, நமக்கு தெரிஞ்சவங்களுக்கு செய்த நல்ல காரியத்தை ஞாபகப்படுத்திக்குவோம். கொஞ்சம் கொஞ்சமாக அவர் மேலிருந்த பழியுனர்ச்சியை துடைப்போம். இது போல திரும்பவும் நடக்காம இருக்க வழி தேடுவோம்.
முடியாதா? பிரியறதுக்கு தயாராவோம். அதுதான் நல்லது.
கடைசியாக"நடுவுல கொஞ்ச பக்கத்தை காணோமின்னு" பயணத்தை தொடருவோம். நமக்கு நாமே அடிக்கடி சொல்லி கொள்வோம். நடந்த தவறுக்கு நாம் காரணம் இல்லையின்னு.நம்மை நாம் காயப்படுத்திகாம இருக்கிறது ரொம்ப முக்கியம். அதே போல மத்தவங்க செய்ததையும் நியாயப்படுத்த வேண்டாம்.
இது நடந்ததாலே மனுஷங்க மேல நாம வச்சிருந்த நம்பிக்கை குறையக்கூடாது. எல்லோரும் ஒன்னு கிடையாது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்" என்பது இங்கே செல்லுபடி ஆகாது.நம்பிக்கை வைக்கிறதுக்கு எத்தனையோ பேர் உண்டு..உங்களைப்போல..இந்த ஒரு சம்பவம் எவ்வளவு கெட்டதானாலும் நம்ம வாழ்க்கையை மாற்ற கூடாது. நாம எப்போதும் போல திறந்த மனசோடவே இருப்போம். அதை ஒரு அனுபவமா எடுத்துக்குவோம். அந்த வலி? அது தான் நாம் இன்னும் மனிதத்தன்மையோட இருக்கோம்னு காட்ற விஷயம்.. அது இந்நேரம் வடுவாயிருக்கும். இல்லேனாலும் பின்னாடி ஆயிடும். உடைஞ்ச இதயம்? இருக்கிரதிலேயே உடைய உடைய வலிமையாறது அது தானாம். அப்புறம் என்ன?
வாழ்க்கை வாழ்வதற்கே ....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக