கேள்வி :..தனிமையின் வலி எப்படி இருக்கும்? அதனை அனுபவித்துள்ளீரா?
பதில் :..
நீங்கள் ஒரு அழகான காதல் காவியம் படித்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆரம்பத்தில் கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாலும் போக போக சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு 30 பக்கங்கள் உள்ளன.
அப்போது பார்த்து உங்கள் வீட்டிற்க்கு விருந்தினர், அதுவும் நெருங்கிய உறவினர் வருகின்றனர். உங்கள் அம்மா உங்களை அழைத்து அவர்களுடன் அமரும் படி கூறிவிட்டு அவர்களுடன் கொஞ்சம் நேரம் பேசிவிட்டு நீ பேசிக் கொண்டிரு என்று கூறி உங்களை அவர்களுடன் உட்கார விட்டுவிட்டு அவர்களுக்கு ஏதேனும் சமைக்க சென்று விடுகிறார்..
அப்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்???
நாம் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தாலும் நமது உடல் பொருள் ஆவி அனைத்தும் அந்த நாவலில் தானே இருக்கும்.?
எனக்கெல்லாம், இவிங்க லாம் நம்ம இன்டெரெஸ்ட்டா கத படிக்கிறப்ப தான் வரணுமா? அப்படியே வந்தாலும் இந்த அம்மா ஏன் நம்மல தொந்தரவு பண்றாங்க என்று இருக்கும்.
Situation 2:
இன்னொரு நாள் ஒரு நல்ல த்ரில்லர் படம் பார்த்துக் கொண்டு இருக்கிறீர்கள். அதுவும் பயங்கர ஆர்வமாய் ஸ்வாரஸ்யமாய் போய்க் கொண்டு உள்ளது. அப்போது பார்த்து உங்கள் வீட்டில் இருப்பவர்கள் வா வெளிய போலாம். கோவிலுக்கு போய்ட்டு அப்படியே எங்கயாச்சும் வெளில போலாம் என்று அழைக்கிறார்கள்.
அப்போது நமது மனநிலை எப்படி இருக்கும்??
இப்போது தான் கோவிலுக்கு போக வேண்டுமா?? இந்த நல்ல நாளைக்கு தான் நான் இந்த படத்த பாக்கணுமா? என்று இருக்கும். அப்போதும் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து சேரும் வரை நினைவு முழுக்க அந்த படத்தில் தானே இருக்கும்.
Situation 3:
மறுநாள் ஒரு தேர்வு இருக்கிறது என கொள்வோம். நல்லா படித்தவர்களுக்கு இடையூறுகள் எல்லாம் ஒரு பொருட்டே இல்லை. ஜாலியாக தான் இருப்பார்கள். அதே போல சுத்தமாக படிக்காதவர்களும் அப்படி தான். ஆனால் இந்த அரைகுறை கேஸ்கள் ஒரு வாரத்திற்கு முன்பே இந்த வாட்ஸப், facebook, இன்ஸ்டாக்ராம் என அனைத்து சோசியல் மீடியாவையும் logout அல்லது அன்இன்ஸ்டால் செய்துவிட்டு முட்டி முட்டி படித்துக்கொண்டிருப்பார்கள். அரைகுறை கேஸ். எவ்வளவு படித்தாலும் பத்தாது போலயே ஒரு மனநிலை தான் எப்போதும் இருக்கும்.
அந்த மாதிரி ஒரு தேர்வு மறுநாள் என கொள்வோம். அப்போது பார்த்து அங்க போயிட்டு வா.. இங்க போய்ட்டு வா என்று ஒரு நாள் முழுவதும் செலவழியும் படி ஏதேனும் ஒரு வேலையை கொடுத்தால் எப்படி இருக்கும்??
அம்மா படிக்கணும் ம்மா என்றால், என் அம்மா இத்தன நாள் படிக்காததையா இன்னிக்கு ஒரு நாள் படிக்க போற? என்பார்.
Situation 4:
ஒருநாள் எந்த தொந்தரவும் இல்லாமல் தூங்கிக் கொண்டு இருக்கிறீர்கள்.
திடீரென உங்கள் அம்மா எழுப்பி இன்னிக்கு ஒரு விசேஷம். மறந்துட்டேன். குளிச்சுட்டு வா.. போய்ட்டு உடனே வந்துரலாம். வந்து தூங்கலாம் என்று எழுப்பினால் எப்படி இருக்கும்??
நிம்மதியா தூங்க கூட முடியலையே என்று தோன்றுமா?
எனக்கெல்லாம் அழுகையே வந்துவிடும்..
Situation 5:
ஒரு வேலை மும்முரமாக பார்த்துக் கொண்டு இருக்கிறீர்கள். உங்களை அழைத்து வேறு ஒரு வேலை உங்கள் அம்மா சொல்ல, உங்கள் அப்பா ஒரு வேலை சொல்ல, உங்கள் பாட்டி ஒரு வேலை சொல்ல எல்லாரும் அவசரம் என காலில் சுடுத்தண்ணீர் ஊற்றி கொண்டு பைத்தியம் பிடிக்க செய்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்??
இந்த வீட்டில் இல்லாமல் பேசாமல் எங்கேனும் ஓடிவிடலாம் என்று தோன்றுமா??
கொஞ்சம் கோபத்தை வெளியே காட்டிவிட்டாலும் என் அம்மா பத்ரகாளி ஆகிவிடுவார். அடுத்து ஒரு வாரத்திற்கு எந்த ஒரு வேலையும் என்னிடம் சொல்ல மாட்டார். சரியாக பேச மாட்டார்..
இந்த எல்லா சூழ்நிலையிலும் ஒரு முறையேனும் நாம் தனியா இருந்தால் இந்த தொல்லை எல்லாம் இருக்குமா என்று தோன்றும் தானே.. அடிக்கடி நான் நினைப்பேன் ஹாஸ்டலுக்கு கூட பேசாம போய்ரலாம்.
தனிமையின் வலி எப்படி இருக்கும்? அதனை அனுபவித்துள்ளீரா?
இங்குள்ள தனிமை என்பது எதை குறிக்கிறது என தெரியவில்லை. அதாவது எல்லாரும் இருக்கும் போது ஒரு தனிமை உணர்வு இருக்குமே.. காதல் தோல்வியின் தனிமை, பிடித்தவரின் பிரிவின் தனிமை போன்றவை.
ஆனால் யாருமில்லாத தனிமையை தான் நான் முற்றிலும் விரும்புவேன். நமக்கு ஒரு வேலையை இடையூறு இல்லாமல் செய்ய வேண்டும்.
ஏதேனும் படிக்க இருக்கும். அது போர் அடித்தால் வேறு பொழுது போக்கு புத்தகம் படிப்பேன். அதுவும் மொக்கையாக தோன்றினால் படம் பார்ப்பேன். அதுவும் பிடிக்கவில்லை என்றால் தூங்கிவிடுவேன். வேலை இருந்தால் தான் வெளியே செல்வேன். அந்த வேலைகளையும் சீக்கிரம் முடித்துவிட்டு சீக்கிரம் வீட்டிற்கு வந்துவிட தான் பார்ப்பேன்.
தனிமை என்பது வலியா அல்லது சுகமா என்பது நாம் அதை எப்படி பயன்படுத்திக் கொள்கிறோம் என்பதில் தான் உள்ளது.
சும்மா இருக்கும் மனம் உலைகளம் என்று கூறுவார்கள். அப்படி சும்மா இருக்கவிடாமல் நமக்கு நாமே ஏதேனும் ஒரு வேலையை கொடுத்துக் கொண்டால் தனிமை கூட நன்றாக தான் இருக்கும்.
நன்றி ....
பதில் :..
நீங்கள் ஒரு அழகான காதல் காவியம் படித்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆரம்பத்தில் கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாலும் போக போக சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு 30 பக்கங்கள் உள்ளன.
அப்போது பார்த்து உங்கள் வீட்டிற்க்கு விருந்தினர், அதுவும் நெருங்கிய உறவினர் வருகின்றனர். உங்கள் அம்மா உங்களை அழைத்து அவர்களுடன் அமரும் படி கூறிவிட்டு அவர்களுடன் கொஞ்சம் நேரம் பேசிவிட்டு நீ பேசிக் கொண்டிரு என்று கூறி உங்களை அவர்களுடன் உட்கார விட்டுவிட்டு அவர்களுக்கு ஏதேனும் சமைக்க சென்று விடுகிறார்..
அப்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்???
நாம் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தாலும் நமது உடல் பொருள் ஆவி அனைத்தும் அந்த நாவலில் தானே இருக்கும்.?
எனக்கெல்லாம், இவிங்க லாம் நம்ம இன்டெரெஸ்ட்டா கத படிக்கிறப்ப தான் வரணுமா? அப்படியே வந்தாலும் இந்த அம்மா ஏன் நம்மல தொந்தரவு பண்றாங்க என்று இருக்கும்.
Situation 2:
இன்னொரு நாள் ஒரு நல்ல த்ரில்லர் படம் பார்த்துக் கொண்டு இருக்கிறீர்கள். அதுவும் பயங்கர ஆர்வமாய் ஸ்வாரஸ்யமாய் போய்க் கொண்டு உள்ளது. அப்போது பார்த்து உங்கள் வீட்டில் இருப்பவர்கள் வா வெளிய போலாம். கோவிலுக்கு போய்ட்டு அப்படியே எங்கயாச்சும் வெளில போலாம் என்று அழைக்கிறார்கள்.
அப்போது நமது மனநிலை எப்படி இருக்கும்??
இப்போது தான் கோவிலுக்கு போக வேண்டுமா?? இந்த நல்ல நாளைக்கு தான் நான் இந்த படத்த பாக்கணுமா? என்று இருக்கும். அப்போதும் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து சேரும் வரை நினைவு முழுக்க அந்த படத்தில் தானே இருக்கும்.
Situation 3:
மறுநாள் ஒரு தேர்வு இருக்கிறது என கொள்வோம். நல்லா படித்தவர்களுக்கு இடையூறுகள் எல்லாம் ஒரு பொருட்டே இல்லை. ஜாலியாக தான் இருப்பார்கள். அதே போல சுத்தமாக படிக்காதவர்களும் அப்படி தான். ஆனால் இந்த அரைகுறை கேஸ்கள் ஒரு வாரத்திற்கு முன்பே இந்த வாட்ஸப், facebook, இன்ஸ்டாக்ராம் என அனைத்து சோசியல் மீடியாவையும் logout அல்லது அன்இன்ஸ்டால் செய்துவிட்டு முட்டி முட்டி படித்துக்கொண்டிருப்பார்கள். அரைகுறை கேஸ். எவ்வளவு படித்தாலும் பத்தாது போலயே ஒரு மனநிலை தான் எப்போதும் இருக்கும்.
அந்த மாதிரி ஒரு தேர்வு மறுநாள் என கொள்வோம். அப்போது பார்த்து அங்க போயிட்டு வா.. இங்க போய்ட்டு வா என்று ஒரு நாள் முழுவதும் செலவழியும் படி ஏதேனும் ஒரு வேலையை கொடுத்தால் எப்படி இருக்கும்??
அம்மா படிக்கணும் ம்மா என்றால், என் அம்மா இத்தன நாள் படிக்காததையா இன்னிக்கு ஒரு நாள் படிக்க போற? என்பார்.
Situation 4:
ஒருநாள் எந்த தொந்தரவும் இல்லாமல் தூங்கிக் கொண்டு இருக்கிறீர்கள்.
திடீரென உங்கள் அம்மா எழுப்பி இன்னிக்கு ஒரு விசேஷம். மறந்துட்டேன். குளிச்சுட்டு வா.. போய்ட்டு உடனே வந்துரலாம். வந்து தூங்கலாம் என்று எழுப்பினால் எப்படி இருக்கும்??
நிம்மதியா தூங்க கூட முடியலையே என்று தோன்றுமா?
எனக்கெல்லாம் அழுகையே வந்துவிடும்..
Situation 5:
ஒரு வேலை மும்முரமாக பார்த்துக் கொண்டு இருக்கிறீர்கள். உங்களை அழைத்து வேறு ஒரு வேலை உங்கள் அம்மா சொல்ல, உங்கள் அப்பா ஒரு வேலை சொல்ல, உங்கள் பாட்டி ஒரு வேலை சொல்ல எல்லாரும் அவசரம் என காலில் சுடுத்தண்ணீர் ஊற்றி கொண்டு பைத்தியம் பிடிக்க செய்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்??
இந்த வீட்டில் இல்லாமல் பேசாமல் எங்கேனும் ஓடிவிடலாம் என்று தோன்றுமா??
கொஞ்சம் கோபத்தை வெளியே காட்டிவிட்டாலும் என் அம்மா பத்ரகாளி ஆகிவிடுவார். அடுத்து ஒரு வாரத்திற்கு எந்த ஒரு வேலையும் என்னிடம் சொல்ல மாட்டார். சரியாக பேச மாட்டார்..
இந்த எல்லா சூழ்நிலையிலும் ஒரு முறையேனும் நாம் தனியா இருந்தால் இந்த தொல்லை எல்லாம் இருக்குமா என்று தோன்றும் தானே.. அடிக்கடி நான் நினைப்பேன் ஹாஸ்டலுக்கு கூட பேசாம போய்ரலாம்.
தனிமையின் வலி எப்படி இருக்கும்? அதனை அனுபவித்துள்ளீரா?
இங்குள்ள தனிமை என்பது எதை குறிக்கிறது என தெரியவில்லை. அதாவது எல்லாரும் இருக்கும் போது ஒரு தனிமை உணர்வு இருக்குமே.. காதல் தோல்வியின் தனிமை, பிடித்தவரின் பிரிவின் தனிமை போன்றவை.
ஆனால் யாருமில்லாத தனிமையை தான் நான் முற்றிலும் விரும்புவேன். நமக்கு ஒரு வேலையை இடையூறு இல்லாமல் செய்ய வேண்டும்.
ஏதேனும் படிக்க இருக்கும். அது போர் அடித்தால் வேறு பொழுது போக்கு புத்தகம் படிப்பேன். அதுவும் மொக்கையாக தோன்றினால் படம் பார்ப்பேன். அதுவும் பிடிக்கவில்லை என்றால் தூங்கிவிடுவேன். வேலை இருந்தால் தான் வெளியே செல்வேன். அந்த வேலைகளையும் சீக்கிரம் முடித்துவிட்டு சீக்கிரம் வீட்டிற்கு வந்துவிட தான் பார்ப்பேன்.
தனிமை என்பது வலியா அல்லது சுகமா என்பது நாம் அதை எப்படி பயன்படுத்திக் கொள்கிறோம் என்பதில் தான் உள்ளது.
சும்மா இருக்கும் மனம் உலைகளம் என்று கூறுவார்கள். அப்படி சும்மா இருக்கவிடாமல் நமக்கு நாமே ஏதேனும் ஒரு வேலையை கொடுத்துக் கொண்டால் தனிமை கூட நன்றாக தான் இருக்கும்.
நன்றி ....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக