கேள்வி : வாழ்க்கையைப் பற்றி யாரும் உங்களிடம் சொல்லாத சில விஷயங்கள் எவை?
பதில் :...
கர்மாவை பற்றி யாரும் என்னிடம் கூறியது இல்லை. நான் என் அனுபவத்தில் தெரிந்து கொண்டது. மேலும் படித்து அறிந்து கொண்டேன்.. சிறு வயதில் "வினை விதைத்தவன் வினை அறுப்பான், திணை விதைத்தவன் திணை அறுப்பான்" என்ற பழமொழியை படித்து இருப்போம்.
ஆனால் அதன் அர்த்தத்தை நான் வெகுநாட்களாக தவறாக புரிந்து கொண்டிருந்தேன். நாம் என்ன செய்கிறோமோ அது தான் நமக்கு கிடைக்கும். அதிகமாகவும் இல்லை குறைவாகவும் இல்லை.
எனக்கு ஒரு கொள்கை உள்ளது. யாரையும் பாதிக்காத வரை எதுவும் தவறில்லை. ஆனால் அது தவறா இல்லையா என்பது கர்மாவின் தீர்ப்பு என்று பிறகு தான் புரிந்து கொண்டேன்.
உதாரணமாக,
நான் என்னுடைய ஒருவேளை உணவை பாதி சாப்பிட்டு மீதியை சாப்பிட முடியாமல் வீணாக்கி விடுகிறேன். நான் வீணாக்கிய உணவு ஒருவருடைய பசியை போக்காது. யாருக்கும் பாதிப்பு இல்லை. இது என்னுடைய கொள்கை.
ஆனால் என்றைக்காவது ஒருநாள் எனக்கு பசிக்கும் போது என்னால் உண்ண முடியாத நிலை வரும். (அனுபவமும் உள்ளது)இது தான் கர்மாவின் கொள்கை.
ஒருவர் என்னை ஏமாற்றினால் வேறு ஒருவரால் அவர் ஏமாற்றப்படுவார். நான் ஏமாற்றப்பட்டது முன்ஜென்மத்திலோ அல்லது எப்போதோ நான் செய்த என்னுடைய கர்மவினை.
என் பெற்றோரின் முன்னிலையில் என்னுடைய சுதந்திரம் என்ற பெயரில் நான் ஏதேனும் தவறு செய்தால் நாளை என் பிள்ளை என்னை எதிர்த்து ஏதேனும் ஒரு தவறு செய்வார். அதுவும் ஒருவகையான கர்மா.
ஒருவரை பிறரிடம் அவர் அறியாமல் அவதூறாக பேசினால் நான் அறியாமல் என்னை யாரேனும் பேசுவார்கள்.
பதில் :...
கர்மாவை பற்றி யாரும் என்னிடம் கூறியது இல்லை. நான் என் அனுபவத்தில் தெரிந்து கொண்டது. மேலும் படித்து அறிந்து கொண்டேன்.. சிறு வயதில் "வினை விதைத்தவன் வினை அறுப்பான், திணை விதைத்தவன் திணை அறுப்பான்" என்ற பழமொழியை படித்து இருப்போம்.
ஆனால் அதன் அர்த்தத்தை நான் வெகுநாட்களாக தவறாக புரிந்து கொண்டிருந்தேன். நாம் என்ன செய்கிறோமோ அது தான் நமக்கு கிடைக்கும். அதிகமாகவும் இல்லை குறைவாகவும் இல்லை.
எனக்கு ஒரு கொள்கை உள்ளது. யாரையும் பாதிக்காத வரை எதுவும் தவறில்லை. ஆனால் அது தவறா இல்லையா என்பது கர்மாவின் தீர்ப்பு என்று பிறகு தான் புரிந்து கொண்டேன்.
உதாரணமாக,
நான் என்னுடைய ஒருவேளை உணவை பாதி சாப்பிட்டு மீதியை சாப்பிட முடியாமல் வீணாக்கி விடுகிறேன். நான் வீணாக்கிய உணவு ஒருவருடைய பசியை போக்காது. யாருக்கும் பாதிப்பு இல்லை. இது என்னுடைய கொள்கை.
ஆனால் என்றைக்காவது ஒருநாள் எனக்கு பசிக்கும் போது என்னால் உண்ண முடியாத நிலை வரும். (அனுபவமும் உள்ளது)இது தான் கர்மாவின் கொள்கை.
ஒருவர் என்னை ஏமாற்றினால் வேறு ஒருவரால் அவர் ஏமாற்றப்படுவார். நான் ஏமாற்றப்பட்டது முன்ஜென்மத்திலோ அல்லது எப்போதோ நான் செய்த என்னுடைய கர்மவினை.
என் பெற்றோரின் முன்னிலையில் என்னுடைய சுதந்திரம் என்ற பெயரில் நான் ஏதேனும் தவறு செய்தால் நாளை என் பிள்ளை என்னை எதிர்த்து ஏதேனும் ஒரு தவறு செய்வார். அதுவும் ஒருவகையான கர்மா.
ஒருவரை பிறரிடம் அவர் அறியாமல் அவதூறாக பேசினால் நான் அறியாமல் என்னை யாரேனும் பேசுவார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக