ஞாயிறு, 21 ஜூன், 2020

வேடப்பட்டி_திம்மநாயக்கர்

வேடப்பட்டி பாளையக்காரர் திம்மநாயக்கர் 

  ஆதி பூருவதில்  ஆனைகொந்தி சமஸ்தானத்தில்  இருந்த கம்பள சாதியார் அனைவரும்   டெல்லி சுல்தானியர்களின்   படைகளில் வீரர்களாகவும்  படை தளபதிகளாகவும்  வாழ்ந்து வந்த  இவர்கள். 
 தெட்சணம் நாட்டு ( மகாராஷ்டிரா, ஆந்திரா கர்நாடகம் ) எல்லைகளில்  வாழ்ந்த 
 மொகலாயர் தளபதிகள்

 ஊர்களுக்கு  ஊர்  படைகள் நிரம்பிய  மக்களுள்  கம்பள சாதியினரும் ஒன்று  அவர்களிடம் பெண் கேட்க  பெண் கொடுக்க மனமில்லாமல்  
 இரவோடு இரவாக  அந்நாட்டை விட்டு வெளியேறி   மான்கோட்டை என்னும் இடத்தை கடந்து துங்க நதிக்கரையில் நடந்து ராயர் சீமையில் அங்க அங்கே குடில்களும் வனாந்தரமமும்   கொண்ட காடுகளிலும் மலைகளிலும் தங்கினார். 

 தங்கிய நாளையில் சிறுது  தானிய வகைகளை உண்டு மாடுகளை தந்தரையில் மந்தையாக்கி  வாழ்வாதாரம் கேட்டு ராயர் சமஸ்தானத்திற்கு வந்தனர்

  ராயர் அவர்களும் கம்பள சாதியினர் என்றறிந்து மனமுவந்து அவர்களை அரவணைத்து  சமஸ்தானத்தில் அவர்களுக்கு ஏற்ப வேலைகளையும் பொறுப்புகளையும் கொடுத்து தம் நாட்டில் தங்கவைத்து அவர்களுக்கு முன்னுரிமையும் கொடுத்து தென்னகம் நோக்கி,  நாகமநாயக்கர் அவர் மதுரை போரில் வீர சோழரை அடக்க அனுப்பி வைக்கப்பட்டனர் 
 
அப்படி வந்த கம்பள இனக்குழுக்கள் தான் மதுராபுரியை ஆட்சி செய்து கொண்டு இருந்த அப்போதைய  சந்திர சேகர பாண்டியன் மானியமாக விட்ட     ஆரண்யமாக இருந்த காடுகளை  நாடுகளாக்கி ஊர்கள் உண்டு பண்ணி கிராமங்களை கொண்டு ஆண்டு வந்து பாளையக்காரர்கள் ஆனார்கள் அந்த வரிசையில்  கும்மநாயக்கர் அவர்கள்   அமராவதி கரையின் மேற்புறம் ஆண்ட  வேட கம்பளத்தார்  வேட்டையில் வல்லவர் ஆதலால் அந்த ஊருக்கு வேடப்பட்டி என்றும் பெயரும் உண்டு பண்ணி பாளையமும் கட்டி வைக்கப்பட்டார். 

 இவர்களின் முன்னோர் ராயர் சமஸ்தானத்தில்  வேட்டையாடுதல் வல்லவர்களான  கம்பள சாதியினர்  பிறந்த கும்மநாயக்கர் புலியை வேட்டையாடியதால்  
புலிக்குத்தி கும்மநாயக்கர் என்று பெயரும் கொடுத்ததாக  தகவல்கள் கிடைக்கின்றது.   இவரின் வாரிசுகளே  சக்கரிகிரியில்  உள்ள வேடப்பட்டி பாளையக்காரர் ஆவார்கள் 

_திருப்பதி தேவராஜன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக