புதன், 10 ஜூன், 2020

கேள்வி : மனைவிகள் எல்லாம் பளிச் பளிச் என்று இருக்கும்போது இந்த கணவன்மார்கள் மட்டும் எப்போதும் பாவமாக இருப்பதேன்?

என் பதில் :..


பொன்னிறமான தோசைக்கு பின்னால்,கரு கருவென தோசை கல் இருப்பதை போல ...

கண்கவரும் சிற்பத்திற்கு பின்னால் , கிழிந்த வேட்டியுடன் ஓர் சிற்பி இருப்பதை போல ...

அழகான ரோஜாமலருக்கு காவலாளியாய் இருக்கும் முற்களை போல தான் தந்தை மார்களும் , கணவன் மார்களும்,

தோசை தாங்கும் வெப்பத்தை விட, தோசைக்கல் பல மடங்கு வெப்பத்தை தாங்கினாலும் ,இறுதியில் அந்த தோசைக்கு கிடைக்கும் அங்கீகாரம் ,தோசைக்கல்லுக்கு கிடைப்பதில்லை.அப்படி பட்ட அங்கீகாரத்தை தோசைக்கல் எதிர்பார்ப்பதும் இல்லை, விரும்புவதும் இல்லை.

சந்தோஷம் என்ற ருசியுடன் ,சிரிப்பு என்ற பொன்னிறம் தோசைக்கு கிடைப்பதே, தோசைக்கல்லின் லட்சியம்.

நன்றி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக