செவ்வாய், 21 ஜூலை, 2020

கேள்வி : கணவன் மனைவி சண்டையில் மனைவி பேசும்போது கணவன் பேசாமல் இருக்க காரணம் என்ன?

என் பதில் :.

பேசி பிரயோஜனம் இல்லை எனும் நிலையில்.

தவறு நம் மீது இருக்கும் போது

தவறே செய்யாத போதும் தன் மீது திணிக்கப்படும் போது

"அப்படியே பழகிடுச்சுங்க. கேள்வி கேட்டா அடி விழும். எதுக்கு உடம்பை புண்ணாக்கிக்குவானேன்?"

"கேட்டு என்னங்க பிரயோஜனம்? அவ சொன்னதே தான் சொல்லுவா….!"

"அவ பரம்பரையில் லேடீஸ் சவுண்ட் ஜாஸ்தியா இருக்குமாம்!"

ஊரே வேடிக்கை பாக்குது. நாம் சைலண்ட் ஆனாதான் சண்டை நிக்கும்.

பழைய பஞ்சாங்கம் எல்லாம் கிண்டுறா. பூதம் வெளியே வரதுக்குள்ள கடைய சாத்திர்ரது நல்லது.

இப்படி கழுவி கழுவி ஊத்தற அளவுக்கு நாம் என்ன நல்லது பண்ணுனோம்?


யார் மேல இருக்குற கோபத்தை நம்ம மேல காட்றா? நம்ம மேலயா? புள்ளங்க மேலயா?

பின் குறிப்பு :

மனைவியுடனான சண்டையில் நான் மனைவியின் பக்கம் ! (உசுரு முக்கியமில்ல!)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக