கேள்வி : நீங்கள் அனுபவித்த மிக மோசமான கார்ப்பரேட் கலாச்சாரம் எது? அதை மிகவும் மோசமாக்கியது எது?
என் பதில் :..நான் இந்த கேள்விக்கு பதில் அளிப்பதைவிட ..என் நண்பர் ரங்கா அவர்களின் பகிர்வு அருமையாக இருக்கும் ..பல கார்பொரேட் நிறுவனங்களில் பணிபுரிந்து அனுபவம் பெற்றவர் ..அவரிடம் பேசியபோது ..இந்த கார்பொரேட் உலகம் புரிந்தது ..
நீங்கள் சதுரங்கம், (செஸ் பா!) ஆடி இருக்கிறீர்களா? எட்டு சிப்பாய்கள் எப்பொழுதும் முன்னே, நேர் கோட்டில் தான் போக முடியும். அதிகபட்சமாக குறுக்கே இருப்பதை வெட்டலாம். பல சமயங்களில் பவர் அதிகமுள்ள குதிரை, பிஷப், யானை போன்றவற்றை காப்பாற்ற இந்த சிப்பாய்கள் தான் களபலி ஆகும்.
கார்ப்பரேட் உலகமும் அப்படி தான். பிரஷ்ஷராக சேர்ந்து, உற்சாகத்துடன் புதிய விஷயங்களை கற்றுக் கொண்டு, ஐந்து வருடங்களில் வேகமாக முன்னேறுவீர்கள். எல்லோருமே விக்ரமன் படத்தில் வருவது போல "லாலே லாலே லாலா" என்று பாடுவது மாதிரி இருக்கும்.
ஆறிலிருந்து எட்டு வருடம் ஆனதும், தளபதியாக கனவு காண்பீர்கள். தளபதி என்றால் இங்கு ஸ்டாலின் என்று பொருள் கொள்ளக் கூடாது. டீம் லீட் அல்லது பிராஜக்ட் லீட் என்று அர்த்தம்.
"உன்னை விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணும் இல்லை"என்று உங்களை பாராட்டி, சில பிரஷ்ஷர்களுக்கு பயிற்சி அளிடா என் தங்கமே! என்று உச்சி முகர்வார்கள். சில மாதங்கள் சென்ற பின், ஒரு வெள்ளிக்கிழமை, எம கண்டத்தில் (3 - 4.30 PM ) , கொஞ்சம் பேசலாம் வா! என்று ஒரு கேபினுக்குள் கூப்பிடுவார்கள். நீங்களும் நிலவுக்கு அனுப்ப வேண்டிய ராக்கெட்டை ஸ்டான்ட் போட்டு நிறுத்தி விட்டு, கை கிரீஸை(grease) துடைத்துக் கொண்டு போவீர்கள்.
"சில தவிர்க்க முடியாத காரணத்தால் உங்களை வீட்டுக்கு அனுப்பறோம், மூணு மாத சம்பளம் உங்க அக்கவுண்டில் போடப்படும், இங்க கையெழுத்துப் போட்டுட்டு கிளம்புங்க!"
என்று மூச்சு விடாமல், முக்கியமாக முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் ஒருவர் சொல்லுவார். நீங்கள் கிட்டத்தட்ட சிவாஜி மாதிரி நவரசத்தையும் முகத்தில் காட்ட முயற்சி செய்தாலும் பலனளிக்காது. ஒரு செக்யூரிட்டி உங்கள் பேட்சை வாங்கிக் கொண்டு, (லேப்டாப்பையும் தான்) வாசல் கேட் வரை கொண்டு விடுவார். உங்கள் நண்பர்களுடன் பேச எல்லாம் வாய்ப்பளிக்க மாட்டார்கள். இன்று நீங்கள், இரண்டு வாரம் கழித்து அவர்களில் ஒருவன்/ஒருத்தி, அவ்வளவு தான் விஷயம்.
மேலே சொன்ன சம்பவம், பெங்களூரில் என் நண்பனின் மனைவிக்கு நடந்தது. ஆபிஸ் வாசலிலிருந்து, போனில் கதறி அழுதார். இதை போல பல கதைகள் ஒவ்வொரு சீசனிலும் நடைபெறும். அவை எல்லாம் சொல்ல மறந்த கதைகள். ஆனால் ஊரறிந்த ரகசியம்.
சதுரங்கத்திலாவது கருப்பு/வெள்ளை சிப்பாய்கள் தம் நேரடி எதிரிகளோடு தான் சண்டை போடும். ஆனால் கார்பரேட்டில் வாடிக்கையாளரிடமும் அர்ச்சனை வாங்க நேரிடும், நமக்கு உறுதுணையாக இருப்பார் என்று நம்பும் நம் தளபதியிடமும் அர்ச்சனை, இது போதாது என்று, நாம் நட்பு என்று நம்பிக் கொண்டிருக்கும் நமது டீமில் இருக்கும் சிலரும், யூதாஸாக மாறி முத்தம் கொடுக்கறேன் பேர்வழி என்று நம் முதுகில், (சில சமயம் நெஞ்சில்) கத்தி சொருகி விட்டு செல்வார்கள்.
என் முதல் கார்ப்ரேட் வேலையில், எதிர்பாரா மருத்துவ விடுப்பு முடிந்து, இருபது நாட்கள் கழித்து நான் வருவதற்குள், எனக்கு ஆப்பு சொருக முயற்சி சீரும் சிறப்புமாக நடந்தேறியது. பெரிய தலைக்கு என்னைப் பற்றி தெரியுமாதலால், வேறு டீமுக்கு மாற்றி விட்டார். தூங்கும் போதும் காலாட்டிக் கொண்டே தூங்க வேண்டும் - எனது முதல் பாடத்தை அங்கு கற்றேன்.
அதுவரை திரேதா யுகத்து ராமனாக இருந்த நான், துவாபர யுகத்தின் கண்ணனாக இருந்தால் தான் பிழைக்க முடியும் என்று கண்டு கொண்டேன், கண்டு கொண்டேன். ஆனால் நடப்பது கலியுகமல்லவா?
அடுத்து பெங்களூரில், இரண்டு பெரிய தலைகளுக்கு இடையே நடந்த பனிப் போரில் நான் பகடை காயாக ஆக்கப்பட்டது சிறிது தாமதமாகத் தான் எனக்கு புரிந்தது. கலகலப்பாக இருந்த என்னை, நான்கு மாதங்கள் மவுன சாமியாராக்கியது. நான்கு மாதங்கள், தினமும் 14 மணி நேரம் வேலை செய்து என் பொறுப்பிலிருந்த விடயங்களை டெலிவரி செய்து விட்டு, நானாக மன நிம்மதியுடன் வெளியே வந்தேன். "எதையும் மனதில் வைத்துக் கொள்ளாதே! ஒப்பந்த பணியிலிருந்து நிரந்தரமாக இங்கு இருக்கிறாயா?" என்று கேட்டனர். உங்கள் அன்புக்கு நன்றி! என்று கையெடுத்து கும்பிட்டு விட்டு வந்தேன். முட்டாளாக இருக்கலாம், தவறில்லை, முட்டாளாகவே இருப்பது தான் தவறு.
அனுபவங்கள் தான் நம்மை புடம் போடுகின்றன. நான் ஏற்கனவே இங்கு பகிர்ந்த பதிலில், அந்த பெண் சிங்கத்தின் டீமில் வந்து சேர்ந்தேன். அருந்தி சில மணி நேரம் கடந்தும், உள்நாக்கில் தித்திக்கும் ஒரு நல்ல தேநீரைப் போல, சில நல்ல அனுபவங்களும் கிடைக்கும் என்று அங்கு தெரிந்து கொண்டேன். இப்பொழுதும் ஏதேனும் உதவி என்றால், தயங்காமல் ஒரு போன் கால் தூரத்தில் தான் சில நண்பர்கள் உள்ளனர்.
இங்கு அமெரிக்காவில் வேறு கதை. யாராக இருந்தாலும், இரண்டு வாரங்கள் தான் நோட்டிஸ். ஆட் குறைப்புகள் சர்வ சாதாரணம். இது போக, அரசாங்கத்தின் உதவியாக, விசா மறுப்புகள் வேறு. நித்ய கண்டம், பூர்ண ஆயுசு.
"தாமரை இலைத் தண்ணீர் போல ஒட்டி ஒட்டாமல் இரு!"
எல்லா விஷயங்களையும் கணினிமயமாக்க இந்தியர்கள் வேண்டும், ஆனால் அவர்களுக்கு விசா வழங்க மட்டும் ஆயிரம் யோசனைகள். நல்லா இருங்கடே!
சார்லி சாப்ளின் அழுதாலும், அதை சிரிப்பென்றே ரசிக்கும் உலகு இது. ஏனெனில் சாப்ளினின் ராசி அப்படி. ..
நன்றி :..
என் பதில் :..நான் இந்த கேள்விக்கு பதில் அளிப்பதைவிட ..என் நண்பர் ரங்கா அவர்களின் பகிர்வு அருமையாக இருக்கும் ..பல கார்பொரேட் நிறுவனங்களில் பணிபுரிந்து அனுபவம் பெற்றவர் ..அவரிடம் பேசியபோது ..இந்த கார்பொரேட் உலகம் புரிந்தது ..
நீங்கள் சதுரங்கம், (செஸ் பா!) ஆடி இருக்கிறீர்களா? எட்டு சிப்பாய்கள் எப்பொழுதும் முன்னே, நேர் கோட்டில் தான் போக முடியும். அதிகபட்சமாக குறுக்கே இருப்பதை வெட்டலாம். பல சமயங்களில் பவர் அதிகமுள்ள குதிரை, பிஷப், யானை போன்றவற்றை காப்பாற்ற இந்த சிப்பாய்கள் தான் களபலி ஆகும்.
கார்ப்பரேட் உலகமும் அப்படி தான். பிரஷ்ஷராக சேர்ந்து, உற்சாகத்துடன் புதிய விஷயங்களை கற்றுக் கொண்டு, ஐந்து வருடங்களில் வேகமாக முன்னேறுவீர்கள். எல்லோருமே விக்ரமன் படத்தில் வருவது போல "லாலே லாலே லாலா" என்று பாடுவது மாதிரி இருக்கும்.
ஆறிலிருந்து எட்டு வருடம் ஆனதும், தளபதியாக கனவு காண்பீர்கள். தளபதி என்றால் இங்கு ஸ்டாலின் என்று பொருள் கொள்ளக் கூடாது. டீம் லீட் அல்லது பிராஜக்ட் லீட் என்று அர்த்தம்.
"உன்னை விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணும் இல்லை"என்று உங்களை பாராட்டி, சில பிரஷ்ஷர்களுக்கு பயிற்சி அளிடா என் தங்கமே! என்று உச்சி முகர்வார்கள். சில மாதங்கள் சென்ற பின், ஒரு வெள்ளிக்கிழமை, எம கண்டத்தில் (3 - 4.30 PM ) , கொஞ்சம் பேசலாம் வா! என்று ஒரு கேபினுக்குள் கூப்பிடுவார்கள். நீங்களும் நிலவுக்கு அனுப்ப வேண்டிய ராக்கெட்டை ஸ்டான்ட் போட்டு நிறுத்தி விட்டு, கை கிரீஸை(grease) துடைத்துக் கொண்டு போவீர்கள்.
"சில தவிர்க்க முடியாத காரணத்தால் உங்களை வீட்டுக்கு அனுப்பறோம், மூணு மாத சம்பளம் உங்க அக்கவுண்டில் போடப்படும், இங்க கையெழுத்துப் போட்டுட்டு கிளம்புங்க!"
என்று மூச்சு விடாமல், முக்கியமாக முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் ஒருவர் சொல்லுவார். நீங்கள் கிட்டத்தட்ட சிவாஜி மாதிரி நவரசத்தையும் முகத்தில் காட்ட முயற்சி செய்தாலும் பலனளிக்காது. ஒரு செக்யூரிட்டி உங்கள் பேட்சை வாங்கிக் கொண்டு, (லேப்டாப்பையும் தான்) வாசல் கேட் வரை கொண்டு விடுவார். உங்கள் நண்பர்களுடன் பேச எல்லாம் வாய்ப்பளிக்க மாட்டார்கள். இன்று நீங்கள், இரண்டு வாரம் கழித்து அவர்களில் ஒருவன்/ஒருத்தி, அவ்வளவு தான் விஷயம்.
மேலே சொன்ன சம்பவம், பெங்களூரில் என் நண்பனின் மனைவிக்கு நடந்தது. ஆபிஸ் வாசலிலிருந்து, போனில் கதறி அழுதார். இதை போல பல கதைகள் ஒவ்வொரு சீசனிலும் நடைபெறும். அவை எல்லாம் சொல்ல மறந்த கதைகள். ஆனால் ஊரறிந்த ரகசியம்.
சதுரங்கத்திலாவது கருப்பு/வெள்ளை சிப்பாய்கள் தம் நேரடி எதிரிகளோடு தான் சண்டை போடும். ஆனால் கார்பரேட்டில் வாடிக்கையாளரிடமும் அர்ச்சனை வாங்க நேரிடும், நமக்கு உறுதுணையாக இருப்பார் என்று நம்பும் நம் தளபதியிடமும் அர்ச்சனை, இது போதாது என்று, நாம் நட்பு என்று நம்பிக் கொண்டிருக்கும் நமது டீமில் இருக்கும் சிலரும், யூதாஸாக மாறி முத்தம் கொடுக்கறேன் பேர்வழி என்று நம் முதுகில், (சில சமயம் நெஞ்சில்) கத்தி சொருகி விட்டு செல்வார்கள்.
என் முதல் கார்ப்ரேட் வேலையில், எதிர்பாரா மருத்துவ விடுப்பு முடிந்து, இருபது நாட்கள் கழித்து நான் வருவதற்குள், எனக்கு ஆப்பு சொருக முயற்சி சீரும் சிறப்புமாக நடந்தேறியது. பெரிய தலைக்கு என்னைப் பற்றி தெரியுமாதலால், வேறு டீமுக்கு மாற்றி விட்டார். தூங்கும் போதும் காலாட்டிக் கொண்டே தூங்க வேண்டும் - எனது முதல் பாடத்தை அங்கு கற்றேன்.
அதுவரை திரேதா யுகத்து ராமனாக இருந்த நான், துவாபர யுகத்தின் கண்ணனாக இருந்தால் தான் பிழைக்க முடியும் என்று கண்டு கொண்டேன், கண்டு கொண்டேன். ஆனால் நடப்பது கலியுகமல்லவா?
அடுத்து பெங்களூரில், இரண்டு பெரிய தலைகளுக்கு இடையே நடந்த பனிப் போரில் நான் பகடை காயாக ஆக்கப்பட்டது சிறிது தாமதமாகத் தான் எனக்கு புரிந்தது. கலகலப்பாக இருந்த என்னை, நான்கு மாதங்கள் மவுன சாமியாராக்கியது. நான்கு மாதங்கள், தினமும் 14 மணி நேரம் வேலை செய்து என் பொறுப்பிலிருந்த விடயங்களை டெலிவரி செய்து விட்டு, நானாக மன நிம்மதியுடன் வெளியே வந்தேன். "எதையும் மனதில் வைத்துக் கொள்ளாதே! ஒப்பந்த பணியிலிருந்து நிரந்தரமாக இங்கு இருக்கிறாயா?" என்று கேட்டனர். உங்கள் அன்புக்கு நன்றி! என்று கையெடுத்து கும்பிட்டு விட்டு வந்தேன். முட்டாளாக இருக்கலாம், தவறில்லை, முட்டாளாகவே இருப்பது தான் தவறு.
அனுபவங்கள் தான் நம்மை புடம் போடுகின்றன. நான் ஏற்கனவே இங்கு பகிர்ந்த பதிலில், அந்த பெண் சிங்கத்தின் டீமில் வந்து சேர்ந்தேன். அருந்தி சில மணி நேரம் கடந்தும், உள்நாக்கில் தித்திக்கும் ஒரு நல்ல தேநீரைப் போல, சில நல்ல அனுபவங்களும் கிடைக்கும் என்று அங்கு தெரிந்து கொண்டேன். இப்பொழுதும் ஏதேனும் உதவி என்றால், தயங்காமல் ஒரு போன் கால் தூரத்தில் தான் சில நண்பர்கள் உள்ளனர்.
இங்கு அமெரிக்காவில் வேறு கதை. யாராக இருந்தாலும், இரண்டு வாரங்கள் தான் நோட்டிஸ். ஆட் குறைப்புகள் சர்வ சாதாரணம். இது போக, அரசாங்கத்தின் உதவியாக, விசா மறுப்புகள் வேறு. நித்ய கண்டம், பூர்ண ஆயுசு.
"தாமரை இலைத் தண்ணீர் போல ஒட்டி ஒட்டாமல் இரு!"
எல்லா விஷயங்களையும் கணினிமயமாக்க இந்தியர்கள் வேண்டும், ஆனால் அவர்களுக்கு விசா வழங்க மட்டும் ஆயிரம் யோசனைகள். நல்லா இருங்கடே!
சார்லி சாப்ளின் அழுதாலும், அதை சிரிப்பென்றே ரசிக்கும் உலகு இது. ஏனெனில் சாப்ளினின் ராசி அப்படி. ..
நன்றி :..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக