திங்கள், 20 ஜூலை, 2020


 ஜூலை மாதம் என்றாலே ..வாழ்க்கையில் என் மலரும் நினைவுகள் 2004 வருடத்திற்கு சென்றுவிடும் .....எல்லோருக்கும் திருமணமான வருடம் ..என்றும் பசுமைகள் நிறைந்து இருக்கும் ...முதல் சினிமா ..பிடித்து இருந்தாலும் ..பிடிக்காவிட்டாலும் ...திருமணம் ஆனா புதிதில் மனைவியுடன் திரையரங்கு சென்று திரைப்படம் பார்ப்பது வாழ்க்கையில் பொக்கிஷம்  ...என்றும் பசுமைமாறா இருப்பது ..உடுமலை லதாங்கி திரையரங்கம் ...மகிழ்ச்சி தானே ..முதல் படம் ..என்றாலே வாழ்க்கையில் பசுமைதானே ...எனக்கு பிடித்த இயக்குனர் ....பிடித்த படம் நியூ ...வாழ்க்கையும் நியூ ....

எஸ்.ஜே.சூர்யா பிறந்த நாள் ஸ்பெஷல்...ஜூலை 20..

 நடிப்பை நேசிக்கும் நட்சத்திர இயக்குநர்...


தமிழ் சினிமாவில் ஒரு இயக்குநராக குறிப்பிடத்தக்க சாதனைகளைச் செய்து ஒரு நடிகராகவும் கவனம் ஈர்த்திருக்கும் சிலரில் ஒருவர் இன்று (ஜூலை 20) பிறந்த நாள் கொண்டாடும் எஸ்.ஜே.சூர்யா.

திரைத்துறையில் எத்தனையோ இயக்குநர்கள் அரிதாரம் பூசியிருக்கிறார்கள். எத்தனையோ நடிகர்கள் ஒரு சில படங்களையாவது இயக்கியிருக்கிறார்கள். ஆனால் எஸ்.ஜே.சூர்யா சற்று வித்தியாசமானவர். ஒரு இயக்குநராக நான்கு வெற்றிப் படங்களைக் கொடுத்த பிறகு நடிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கி நட்சத்திர அந்தஸ்தை நோக்கி அயராமல் பயணித்துக்கொண்டிருக்கிறார்.

பலரிடம் சினிமா கற்றவர்

திருநெல்வேலி மாவட்டம் வாசுதேவநல்லூரில் பிறந்தவரான சூர்யா சென்னை லயோலா கல்லூரியில் இயற்பியலில் பட்டம் பெற்றார். சினிமாவில் சாதிக்கும் வேட்கையுடன் சின்னச் சின்ன வேலைகள் செய்து சென்னையில் காலம் தள்ளினார். கே.பாக்யாராஜிடம் உதவியாளராகப் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றார். அதையடுத்து 'கிழக்குச் சீமையிலே' படத்தில் இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். அதற்கடுத்து வசந்திடம் 'ஆசை' படத்திலும், சபாபதியிடம் 'சுந்தரகாண்டம்' படத்திலும் ஜேடி-ஜெர்ரியிடம் 'உல்லாசம்' படத்திலும் உதவி இயக்குநராகப் பணியாற்றினார்.

'நியூ' என்று தலைப்பிடப்பட்ட படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார் என்றதும் பலருக்கு இந்தப் படம் குறித்து சந்தேகம் எழுந்தது. ஆனால், அறிவியல் மிகை யதார்த்த வகைமையைச் சார்ந்த இந்தக் கதையை தன் சுவாரஸ்யமான திரைக்கதையால் ரசிக்க வைத்து மூன்றாவது முறையும் வெற்றிபெற்றார் எஸ்.ஜே.சூர்யா. அதோடு ஒரு நடிகராகவும் வெற்றி முகத்துடன் அறிமுகமானார். இந்தப் படத்தின் தெலுங்குப் பதிப்பில் மகேஷ்பாபு நாயகனாக நடித்திருந்தார்.

அடுத்ததாக இவர் இயக்கிய 'அன்பே ஆருயிரே' பிரிந்த காதலர்கள் ஒன்று சேரும் கதையை வித்தியாசமான வகையில் கையாண்டு வெற்றிபெற்ற படம். ரஹ்மான் இசையமைத்த இந்த இரண்டு படங்களிலும் மிகச் சிறப்பான பாடல்கள் அமைந்தன.

வாழ்த்துக்கள் ...


https://youtu.be/WE60s5KJXvY



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக