சனி, 4 ஜூலை, 2020

கேள்வி : பல அம்மாக்களுக்கு தன் மகனிடமிருந்து வாங்கி மகள்களுக்கு செய்தே ஆகவேண்டும் என நினைப்பர். இதையெல்லாம் எப்படி சரி செய்வது?

என் பதில் :


உறவுகள் தொடர்வதற்கு சில இழப்புப்புக்களை சந்தித்தே தீர வேண்டும். அதில் இதுவும் ஒன்று.. அம்மாவின் மகிழ்ச்சி முக்கியம் என்று நினைக்கும் எந்த மகனுக்கும் இது பெரிய இழப்பு இல்லை.. நமது ஆதரவில் வாழும் அம்மாவுக்கு உடல்நலம் சரி இல்லை என்றால் மருத்துவத்திற்கு செலவு செய்ய மாட்டோமா? அது போலவும் நினைத்துக் கொள்ளலாம்.. அம்மாவுக்கென்று நாம் கொடுப்பதை அவர்களின் சந்தோஷத்திற்காக யாருக்குக் கொடுத்தாலும் நாம் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். மகளோ, வழிப்போக்கனோ அது அவர்களுக்கு புண்ணியமாக இருக்கட்டும் என்றும் நாம் நினைத்துக் கொள்ளலாம். இதை சரி செய்யப் போனால் அம்மாவின் அன்பையும், உடன்பிறந்தவர்களின் உறவையும் இழக்க நேரிடலாம். எது சிறந்தது என்பதை தேர்ந்தெடுக்கும் உரிமை அவரவர் பொறுப்பு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக