கேள்வி : சுமார் 40 வருடங்களுக்கு முன் இருந்த ஆசிரியர்-மாணவர்களுக்கும், தற்போதைய ஆசிரியர்-மாணவர்களுக்கும் இடையேயான வேறுபாடுகள் என்ன?
பதில் :..நான் சொல்வதை விட ..ஆசிரியர் தோழி எபனேசர் எலிசபெத் அவர்கள் பதில் பதிந்தால் அருமையாக இருக்கும் ..
//எங்க டீச்சர் மாதிரி கொண்டை பின்ன வேண்டும் என்பதற்காகவே , அம்மா அப்பா விளையாட்டில் எங்க பாட்டி ஜவுரி முடியை எடுத்து கொண்டை போட்டுட்டு டீச்சரா நடிச்சேன்.//
இப்பவும் எனக்கு முதல் வகுப்பு எடுத்த ஆசிரியையை ஊரில் பார்க்கும் போதெல்லாம் வணக்கம் சொல்றேன். எதையேனும் அவர்கள் துக்கி செல்ல கண்டால் ஓடி போய் வாங்கிக் கொள்கிறேன். ஆனால் என் மாணவர்களில் பெரும்பாலானோர் பள்ளியிலும் வணக்கம் தெரிவிப்பது இல்லை. வெளி இடத்தில் எங்கேனும் கண்டால் நீயாரோ நான் யாரோ என்பது போன்றே கடந்து செல்வார்கள். (முக்கியமா டீன் ஏஜ் மாணவர்கள்).
அப்படியே எந்த குழந்தையாவது வணக்கம் சொன்னாலும், எதுக்குடா பொது இடத்தில் எல்லாம்? நம்ம டீல் எல்லாம் ஸ்கூல் காம்பவுண்ட்டுக்கு உள்ளேயே வச்சிப்போம்ப்பானு ஒரு ஜெண்ட்டில் அக்ரிமென்ட் போட்டுக்குறோம். ஆனால் நாம படிக்கும் போது ஆசிரியர்களை வெளி இடத்தில் பார்த்து வந்தனம் செய்யாவிட்டால் அடுத்த நாள் டார்கெட் நாம தான்.பிரம்பாலையே அடி வெளுத்துடுவாங்க.
ஆசிரியர் என்றாலே பயம் தான். நாம் சென்றிருக்கும் கல்யாண வீட்டிற்கு நம் ஆசிரியர் வந்திருந்தால் ஓடி போய் ஒளிந்த நாட்கள் உண்டு . இப்ப நேர் எதிர். நீங்க ரெண்டு கோட்டிங் லிப்ஸ்டிக் போட்டுட்டு வந்தால் நாம் நான்கு கோட்டிங் போட்டுட்டு சும்மா கெத்தா வந்து நிற்பேன் என்று நம் முன்னே வந்து நிற்பார்கள்.
எனக்கு நல்லா நியாபகம் இருக்கு எங்க இரண்டாம் வகுப்பு சுதா டீச்சரோட அந்த ஆறடி கூந்தல், தினம் மேட் மேட்சா ரப்பர் பேண்ட் மாத்திட்டு வருவாங்க. அப்புறம் அந்த கிளி கூண்டு கம்மல். அதுக்கு அப்புறம் யாரையும் அந்த அளவுக்கு ரசிச்சதே இல்லை. டீச்சரை பார்க்கவே பள்ளிகூடத்துக்கு போன பலபேரில் நானும் ஒருத்தி.
ஆனால் இன்றைய நாகரீக வளர்ச்சியில் குழந்தைகளின் அம்மாக்களே அவ்வளவு ஸ்டைலா இருக்காங்க. அந்த குழந்தைகள் எங்க நம்மள ரசிக்க?
எலிசபெத் மிஸ் உங்களுக்கு இந்த ஹேர் ஸ்டைல் நல்லாவே இல்லனு தலைக்கு பின்னிட்டு போற அன்னைக்கு எல்லாம் என் நான்காம் வகுப்பு மாணவர்களில் நான்கு பேரேனும் சொல்லிவிடுவார்கள். ஆனால் நான்? எங்க டீச்சர் மாதிரி கொண்டை போடனும் என்பதற்காகவே அம்மா அப்பா விளையாட்டில் எங்க பாட்டி ஜவுரி முடியை எடுத்து கொண்டை போட்டுட்டு டீச்சரா நடிச்சேன்.
எங்கள் ஆசிரியர்கள் எங்களைப் பார்த்து ஒரு நாளும் பொறாமைப்பட்டதே இல்லை. ஆனால் மாணவர்களை பார்த்து ஆசிரியர்கள் பொறாமைப்படும் அளவிற்கு மாணவர்களின் வாழ்க்கைத்தரம் இருக்கிறது என்பது உண்மை.
மிஸ் இந்தா வந்துட்டு போறான்ல இந்த பையனோட அப்பா தான் அந்த படத்தோட இயக்குனர். இதை கண்டுபிடிச்சது அதோ அந்த பொண்ணோட அப்பா, பெரிய சயிண்ட்டிஸ்ட்.இந்த மாதிரி பின்புலம் கொண்ட மாணவர்களுக்கு பாடம் கற்றுக் கொடுப்பதே பெரிய சவாலா இருக்கு. எங்கடா நாம ஒரு ஸ்பெல்லிங் தப்பா எழுதிடுவோமோ? அவங்க பெற்றோர் பார்த்துவிட்டு பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பில் கூறிவிட்டால் அசிங்கமா போயிடுமேனு பயந்து பயந்து வேலை செய்யனும். ஆனால் நான் படிக்கையில் எங்களை வாசிக்க சொல்லிவிட்டு குரட்டைவிட்டு தூங்கிய ஆசிரியர் பெருமக்கள் அநேகர் உண்டு.
இந்த இமேஜ் தண்ணீரில் பார்க்கையில் கீழ்கண்ட எந்த இமேஜை பிரதிபலிக்கும்? என்ற விதத்தில் நான் கேள்விதாள் எடுக்க வேண்டும். ஆனால் அன்று, 42வது பக்கம் திருப்புங்க, ஆன் அதுல மூணாவது பத்தியில் நான்காவது வரியிலிருந்து 43வது பக்கம் ஆகும் என்பது வரைக்கும் குறித்துக் கொள்ளுங்கள். இது மிக முக்கியமான கேள்வி படிச்சிக்கோங்க என்று பாடம் நடத்திய ஆசிரியர்கள் உண்டு.
எங்கள் வகுப்பறைக்கு சனிக்கிழமைகளில் வருகை தரும் ஆசிரியைகளின் குழந்தைகள் தான் உலகிலே அழகான குழந்தைகளாய் என் கண்ணுக்கு தெரிஞ்சாங்க. இன்று இன்ஸ்டாவிற்கு சென்றால், நயன்தாரா என்ன பெரிய நயந்தாரா? எங்க ஸ்கூல் பிள்ளைங்க அவங்களுக்கே டஃப் குடுப்பாங்க. டீச்சர் குழந்தைகளை பார்த்து வியந்த நாங்க இன்று எங்கள் மாணவர்களை பார்த்து விழி பிதுங்கி போய் நிற்கிறோம்.நான் இதுவரையில் வேலைபார்த்த பள்ளிகள் எல்லாமே புகழ்பெற்ற பள்ளிகள் தான்.திடீரென்று நடிகர்கள், இயக்குனர்கள், கலெக்ட்டர்ஸ் எல்லாம் வருவாங்க பள்ளியை பார்வையிட. அவர்கள் குழந்தைகள் அங்கே படிக்கிறார்கள் என்பதால் சுகாதாரத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய. ஆசியர்கள் எல்லாம் ஓடி ஓடி வேலை செய்யனும்.
நான் படிக்கும் போது, சரி டீச்சர் சரி டீச்சர் என் புள்ள நல்லா படிக்கிறாளா டீச்சர்னு அவ்வளவு பவ்வியமா பேசுவாங்க பெற்றோர் ஆசிரியர்களிடம்.
அன்று, 50 பைசாவையும் எடுத்துட்டு சஞ்சயிகாவில் சேர்க்க ஆசிரியரை நோக்கி ஒவ்வொரு இடவேளையிலும் ஓடுவோம். இன்று? ஆமா கூகுள் பே பாஸ்வர்ட் என்ன? என்ன மிஸ் நீங்க? ஸ்விகில உங்களுக்கு ஆஃபரே இல்லனு கேட்பாங்க.அன்று ஆசிரியரை ஆசிரியராக மட்டும் பார்த்தோம். மதிப்பு என்னும் வார்த்தையினால் ஒரு பெரிய இடைவெளி இருந்தது. ஆனால் இன்று அந்த இடைவெளி கொஞ்சம் கூட இல்லை. ஆசிரியர் - மாணவர் உறவு ஒரு நட்புறவாக இருக்கிறது தனியார் பள்ளிகளில்.
நான் படிக்கையில் ஆசிரியரின் பிள்ளைகளுக்கு மட்டுமே அனைத்து வாய்ப்புகளும் தாரைவார்க்கப்படும். அதனால் மாணவர்களுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை அதிகம் இருந்ததும் இன்று கண்டிப்பாக அனைத்து மாணவர்களுக்கும் வாய்ப்புகள் அளித்தே ஆக வேண்டும் என்பதால் அது வேரருக்கப்பட்டதாக உணர்கிறேன் (இது தனியார் பள்ளிகளுக்கு மட்டும் பொருந்தும்).
முதல் வகுப்பு ஆசிரியை கொண்டு வந்த ப்ளாஸ்க்கை வியப்புடன் பார்த்தேன். ஏய் இது சூடாவே இருக்குமாம்லனு டீச்சர் பயன்படுத்திய அந்த ப்ளாஸ்க்கையே 'பனு' பார்த்தேன்.ஆனால் இன்றைக்கு?என்ன மிஸ் நீங்க? அதான் நல்லா சம்பாதிக்கிறீங்கள்ல ஐபோன் எக்ஸ் தான் ஒன்னு வாங்க வேண்டியது தான? அப்டேட் ஆகாமலே இருக்கீங்க. அப்படினு நம்மளையே திட்டுவாங்க.
டீச்சர் டீச்சர், வெளியே பாட்டி கடையில் விக்குற நெல்லிக்காயை இவன் வாங்கி தின்னான் டீச்சர், நான் பார்த்தேன் டீச்சர்னு கம்ப்ளெயிண்ட் பண்ணிட்டு இருந்தோம். ஆனால் இன்று? சரி என்ன ஆர்டர் பண்ண? உங்களுக்கு ஒரு ஷவர்மா போடவா? எனக்கு ஒரு பீட்சா, மச்சி உனக்கு என்னடா? பிரியாணியானு நம்ம மொபைலிலே ஆர்டர் போடுவாங்க. அட, ச்சே நெல்லிக்கா வாங்கி தின்னது ஒரு குத்தம்னு அந்த சரவணன் பையன டீச்சர்கிட்ட போட்டு குடுத்து அடி எல்லாம் வாங்கி குடுத்துட்டோமேனு இப்ப ஃபீல் பண்ணுறேன். மன்னிச்சிடு சரவணா.
நன்றி ...
பதில் :..நான் சொல்வதை விட ..ஆசிரியர் தோழி எபனேசர் எலிசபெத் அவர்கள் பதில் பதிந்தால் அருமையாக இருக்கும் ..
//எங்க டீச்சர் மாதிரி கொண்டை பின்ன வேண்டும் என்பதற்காகவே , அம்மா அப்பா விளையாட்டில் எங்க பாட்டி ஜவுரி முடியை எடுத்து கொண்டை போட்டுட்டு டீச்சரா நடிச்சேன்.//
இப்பவும் எனக்கு முதல் வகுப்பு எடுத்த ஆசிரியையை ஊரில் பார்க்கும் போதெல்லாம் வணக்கம் சொல்றேன். எதையேனும் அவர்கள் துக்கி செல்ல கண்டால் ஓடி போய் வாங்கிக் கொள்கிறேன். ஆனால் என் மாணவர்களில் பெரும்பாலானோர் பள்ளியிலும் வணக்கம் தெரிவிப்பது இல்லை. வெளி இடத்தில் எங்கேனும் கண்டால் நீயாரோ நான் யாரோ என்பது போன்றே கடந்து செல்வார்கள். (முக்கியமா டீன் ஏஜ் மாணவர்கள்).
அப்படியே எந்த குழந்தையாவது வணக்கம் சொன்னாலும், எதுக்குடா பொது இடத்தில் எல்லாம்? நம்ம டீல் எல்லாம் ஸ்கூல் காம்பவுண்ட்டுக்கு உள்ளேயே வச்சிப்போம்ப்பானு ஒரு ஜெண்ட்டில் அக்ரிமென்ட் போட்டுக்குறோம். ஆனால் நாம படிக்கும் போது ஆசிரியர்களை வெளி இடத்தில் பார்த்து வந்தனம் செய்யாவிட்டால் அடுத்த நாள் டார்கெட் நாம தான்.பிரம்பாலையே அடி வெளுத்துடுவாங்க.
ஆசிரியர் என்றாலே பயம் தான். நாம் சென்றிருக்கும் கல்யாண வீட்டிற்கு நம் ஆசிரியர் வந்திருந்தால் ஓடி போய் ஒளிந்த நாட்கள் உண்டு . இப்ப நேர் எதிர். நீங்க ரெண்டு கோட்டிங் லிப்ஸ்டிக் போட்டுட்டு வந்தால் நாம் நான்கு கோட்டிங் போட்டுட்டு சும்மா கெத்தா வந்து நிற்பேன் என்று நம் முன்னே வந்து நிற்பார்கள்.
எனக்கு நல்லா நியாபகம் இருக்கு எங்க இரண்டாம் வகுப்பு சுதா டீச்சரோட அந்த ஆறடி கூந்தல், தினம் மேட் மேட்சா ரப்பர் பேண்ட் மாத்திட்டு வருவாங்க. அப்புறம் அந்த கிளி கூண்டு கம்மல். அதுக்கு அப்புறம் யாரையும் அந்த அளவுக்கு ரசிச்சதே இல்லை. டீச்சரை பார்க்கவே பள்ளிகூடத்துக்கு போன பலபேரில் நானும் ஒருத்தி.
ஆனால் இன்றைய நாகரீக வளர்ச்சியில் குழந்தைகளின் அம்மாக்களே அவ்வளவு ஸ்டைலா இருக்காங்க. அந்த குழந்தைகள் எங்க நம்மள ரசிக்க?
எலிசபெத் மிஸ் உங்களுக்கு இந்த ஹேர் ஸ்டைல் நல்லாவே இல்லனு தலைக்கு பின்னிட்டு போற அன்னைக்கு எல்லாம் என் நான்காம் வகுப்பு மாணவர்களில் நான்கு பேரேனும் சொல்லிவிடுவார்கள். ஆனால் நான்? எங்க டீச்சர் மாதிரி கொண்டை போடனும் என்பதற்காகவே அம்மா அப்பா விளையாட்டில் எங்க பாட்டி ஜவுரி முடியை எடுத்து கொண்டை போட்டுட்டு டீச்சரா நடிச்சேன்.
எங்கள் ஆசிரியர்கள் எங்களைப் பார்த்து ஒரு நாளும் பொறாமைப்பட்டதே இல்லை. ஆனால் மாணவர்களை பார்த்து ஆசிரியர்கள் பொறாமைப்படும் அளவிற்கு மாணவர்களின் வாழ்க்கைத்தரம் இருக்கிறது என்பது உண்மை.
மிஸ் இந்தா வந்துட்டு போறான்ல இந்த பையனோட அப்பா தான் அந்த படத்தோட இயக்குனர். இதை கண்டுபிடிச்சது அதோ அந்த பொண்ணோட அப்பா, பெரிய சயிண்ட்டிஸ்ட்.இந்த மாதிரி பின்புலம் கொண்ட மாணவர்களுக்கு பாடம் கற்றுக் கொடுப்பதே பெரிய சவாலா இருக்கு. எங்கடா நாம ஒரு ஸ்பெல்லிங் தப்பா எழுதிடுவோமோ? அவங்க பெற்றோர் பார்த்துவிட்டு பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பில் கூறிவிட்டால் அசிங்கமா போயிடுமேனு பயந்து பயந்து வேலை செய்யனும். ஆனால் நான் படிக்கையில் எங்களை வாசிக்க சொல்லிவிட்டு குரட்டைவிட்டு தூங்கிய ஆசிரியர் பெருமக்கள் அநேகர் உண்டு.
இந்த இமேஜ் தண்ணீரில் பார்க்கையில் கீழ்கண்ட எந்த இமேஜை பிரதிபலிக்கும்? என்ற விதத்தில் நான் கேள்விதாள் எடுக்க வேண்டும். ஆனால் அன்று, 42வது பக்கம் திருப்புங்க, ஆன் அதுல மூணாவது பத்தியில் நான்காவது வரியிலிருந்து 43வது பக்கம் ஆகும் என்பது வரைக்கும் குறித்துக் கொள்ளுங்கள். இது மிக முக்கியமான கேள்வி படிச்சிக்கோங்க என்று பாடம் நடத்திய ஆசிரியர்கள் உண்டு.
எங்கள் வகுப்பறைக்கு சனிக்கிழமைகளில் வருகை தரும் ஆசிரியைகளின் குழந்தைகள் தான் உலகிலே அழகான குழந்தைகளாய் என் கண்ணுக்கு தெரிஞ்சாங்க. இன்று இன்ஸ்டாவிற்கு சென்றால், நயன்தாரா என்ன பெரிய நயந்தாரா? எங்க ஸ்கூல் பிள்ளைங்க அவங்களுக்கே டஃப் குடுப்பாங்க. டீச்சர் குழந்தைகளை பார்த்து வியந்த நாங்க இன்று எங்கள் மாணவர்களை பார்த்து விழி பிதுங்கி போய் நிற்கிறோம்.நான் இதுவரையில் வேலைபார்த்த பள்ளிகள் எல்லாமே புகழ்பெற்ற பள்ளிகள் தான்.திடீரென்று நடிகர்கள், இயக்குனர்கள், கலெக்ட்டர்ஸ் எல்லாம் வருவாங்க பள்ளியை பார்வையிட. அவர்கள் குழந்தைகள் அங்கே படிக்கிறார்கள் என்பதால் சுகாதாரத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய. ஆசியர்கள் எல்லாம் ஓடி ஓடி வேலை செய்யனும்.
நான் படிக்கும் போது, சரி டீச்சர் சரி டீச்சர் என் புள்ள நல்லா படிக்கிறாளா டீச்சர்னு அவ்வளவு பவ்வியமா பேசுவாங்க பெற்றோர் ஆசிரியர்களிடம்.
அன்று, 50 பைசாவையும் எடுத்துட்டு சஞ்சயிகாவில் சேர்க்க ஆசிரியரை நோக்கி ஒவ்வொரு இடவேளையிலும் ஓடுவோம். இன்று? ஆமா கூகுள் பே பாஸ்வர்ட் என்ன? என்ன மிஸ் நீங்க? ஸ்விகில உங்களுக்கு ஆஃபரே இல்லனு கேட்பாங்க.அன்று ஆசிரியரை ஆசிரியராக மட்டும் பார்த்தோம். மதிப்பு என்னும் வார்த்தையினால் ஒரு பெரிய இடைவெளி இருந்தது. ஆனால் இன்று அந்த இடைவெளி கொஞ்சம் கூட இல்லை. ஆசிரியர் - மாணவர் உறவு ஒரு நட்புறவாக இருக்கிறது தனியார் பள்ளிகளில்.
நான் படிக்கையில் ஆசிரியரின் பிள்ளைகளுக்கு மட்டுமே அனைத்து வாய்ப்புகளும் தாரைவார்க்கப்படும். அதனால் மாணவர்களுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை அதிகம் இருந்ததும் இன்று கண்டிப்பாக அனைத்து மாணவர்களுக்கும் வாய்ப்புகள் அளித்தே ஆக வேண்டும் என்பதால் அது வேரருக்கப்பட்டதாக உணர்கிறேன் (இது தனியார் பள்ளிகளுக்கு மட்டும் பொருந்தும்).
முதல் வகுப்பு ஆசிரியை கொண்டு வந்த ப்ளாஸ்க்கை வியப்புடன் பார்த்தேன். ஏய் இது சூடாவே இருக்குமாம்லனு டீச்சர் பயன்படுத்திய அந்த ப்ளாஸ்க்கையே 'பனு' பார்த்தேன்.ஆனால் இன்றைக்கு?என்ன மிஸ் நீங்க? அதான் நல்லா சம்பாதிக்கிறீங்கள்ல ஐபோன் எக்ஸ் தான் ஒன்னு வாங்க வேண்டியது தான? அப்டேட் ஆகாமலே இருக்கீங்க. அப்படினு நம்மளையே திட்டுவாங்க.
டீச்சர் டீச்சர், வெளியே பாட்டி கடையில் விக்குற நெல்லிக்காயை இவன் வாங்கி தின்னான் டீச்சர், நான் பார்த்தேன் டீச்சர்னு கம்ப்ளெயிண்ட் பண்ணிட்டு இருந்தோம். ஆனால் இன்று? சரி என்ன ஆர்டர் பண்ண? உங்களுக்கு ஒரு ஷவர்மா போடவா? எனக்கு ஒரு பீட்சா, மச்சி உனக்கு என்னடா? பிரியாணியானு நம்ம மொபைலிலே ஆர்டர் போடுவாங்க. அட, ச்சே நெல்லிக்கா வாங்கி தின்னது ஒரு குத்தம்னு அந்த சரவணன் பையன டீச்சர்கிட்ட போட்டு குடுத்து அடி எல்லாம் வாங்கி குடுத்துட்டோமேனு இப்ப ஃபீல் பண்ணுறேன். மன்னிச்சிடு சரவணா.
நன்றி ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக