சனி, 11 ஜூலை, 2020

கேள்வி : பணம் ஒரு பொருட்டே அல்ல என உங்களுக்கு தோன்றிய தருணம் எது?

என் பதில் :


ஒரு முறை என் ஷியமுடன் (நான்கு வயது -வருடம் 2011) வடவள்ளியில் இருக்கும்  கடைக்கு சாக்லேட் வாங்க பைக்கில் சென்றேன். கைலி மற்றும் டீசர்ட் அணிந்திருந்ததால் பணத்தை என் ஷ்யாமிடம் கொடுத்து வைத்தேன் அவன்  அதை இறுக்கமாக வைத்திருந்தான்

சாக்லேட் வாங்கிய பின் மீதி பணத்தை ஷ்யாமிடம் திரும்பவும் அதே மாதிரி வை என்று கூறினேன் ஆனால் அதை தூக்கி எறிந்துவிட்டான்  ஏன் என்றேன் அதற்க்கு அதான் சாக்லேட் வாங்கியாச்சே என்றான் .

அப்போது தான் எனக்கு உரைத்தது, இருக்கிறத வைத்து சந்தோஷமாக வாழாமல் நாம் தான் நம் தேவைக்கு அதிகமான பணத்தை தேடி ஓடுகிறோம் என்று. என் ஷ்யாமிடம் கற்றுகொண்டபாடம் கடைபிடித்து வாழ்க்கைப்பயணம் தொடர்கிறது ....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக