சனி, 18 ஜூலை, 2020

கேள்வி : .(+18) ஒரு சில பெண்கள் ஆசையா பழகி ஒத்துழைப்பும் கொடுத்துவிட்டு, காலம் கடந்து அந்த ஆண் தனது கையை பிடித்து இழுக்க வந்ததாக பத்தினி வேஷம் போடுகின்றனரே! ஏன்?

என் பதில் :..


பெண்னை மட்டும் குற்றம் சாட்டுவது தவறு.

நான் ஒரு Investigator…அந்த முறையில்.

கொஞ்ச நாள் முன்னாடி என் பால்ய கால நண்பன் திடீரென்று என்னை அழைத்தான்.

ஒரு இக்கட்டான பிரச்சனையில் மாட்டிக் கொண்டு இருக்கிறேன்... எனக்கு எப்படியாவது உதவ முடியுமா என்று கெஞ்சினான்.

நேரா வருகிறேன் என்று வீட்டுக்கே வந்து விட்டான்.

ஒரு காலத்திற்குப் பிறகு எதிரே வந்திருப்பவர், எந்த பிரச்சினைக்காக வந்திருக்கிறார் என்று தெள்ள தெளிவாக தெரிய ஆரம்பித்துவிட்டது.

நீங்களே யூகிக்கும் போது நான் யூகிக்க மாட்டேனா?

ஆம்… பெண் பிரச்சனை தான்.

நானும் அவனும் ஒரே ஏரியா தான், ஆனால் பள்ளிகூடம் வேற வேற.

ஒரு பெண் தன்னை அடிக்கடி பணம் கேட்டு மிரட்டுவதாக கூறினான்.

முதலில் அப்பாவியாக வேடம் போடுவார்கள், பின்பு பேச பேச தான் விஷயம் ஒன்னு ஒன்ன வரும்.

அவன் சொன்னது... பத்தாவது படிக்கும்போது தான் அந்த பெண்னை காதலித்தகாவும் பின்பு பிரிந்து விட்டாதாகவும், பிற்காலத்தில் அவளை சந்தித்த பிறகு அந்த காதல் தொடர்ந்து அப்புறம் காமத்தில் முடிந்தது என்றான்.

நிறுத்து… மிச்ச கதையை நானே சொல்கிறேன் என்றேன்.

அது பேர் காதல் எல்லாம் கிடையாது தம்பி, வெறும் காமம் மட்டுமே.

அவளுக்கு கணவன் இல்லை என்று தெரிந்ததும், நல்ல ஜல்சா பண்ணலாம் என்று ஒடியிருப்பே… கரக்ட்டா?

ஆமாம் என்றான்.

பின்பு கசமுசா நடந்த பிறகு அவள் மேல் இருந்த ஈர்ப்பு குறைந்திருக்கும்….

அதனால் அவளை கழட்டி விட பார்த்த சரியா ?

ஆமாம் என்றான்.

இப்போ உன்னை கார்னர் பண்றாள் … அப்படி தானே என்றேன்.

ஆமாம் டா உனக்கு எப்படி தெரியும் என்றான்?

அதை நான் அப்புறம் சொல்லுறேன்.

இப்போ நான் உன்னை காப்பாற்றி விட்டால்… நீ என்ன செய்வாய் என்று கேட்டேன்?

இனிமேல் ஒழுங்கா இருக்கேன் மச்சி…. பிராமிஸ் என்றான்.

ஒரு வாரத்தில் அவனை அந்த பிரச்சனையில் இருந்து மீட்டு விட்டேன்.

இவன் மட்டும் அல்ல, நிறைய பேர் இப்படி பட்ட பிரச்சனையில் சாதரணமாக மாட்டி கொள்வார்கள், பின் அதிலிருந்து வெளியே வரமுடியாமல் தவிப்பார்கள்.

இதை தான் EMA என்போம், இதில் இரண்டு பேரும் தான் குற்றவாளி.

ஆண் வேலை முடிந்த பிறகு தப்பிக்க முயற்சி செய்கிறான், பெண் தன் பாதுகாப்பிற்காக அவனை தன் வட்டத்துக்குள் வைத்துக்கொள்ள விரும்புகிறாள்.

அப்படி அவன் ஒத்துக் கொள்ளாத போது, பெண்கள் எடுக்கும் அஸ்திரம் மிரட்டல் அல்லது பணம்.

இப்படி பள்ளி காதல், கல்லூரி காதல், ஆபீஸ் காதல், பக்கத்து வீட்டு காதல் என்று லிஸ்ட் போய் கொண்டே இருக்கும். இதில் இருந்து தப்பிக்கும் வாய்ப்பு அதிகம் தான்.

ஆனால் சமீப காலமாக வரும் காதல் தான் ரொம்ப ஆபத்தான காதல்... அது App காதல்.

Tinder, Azar மற்றும் நிறைய டேடிங் காதலில் இருந்து மீள்வது இயலாத காரியம்.

உங்களை வலையில் விழ வைத்து, பிறகு வைச்சு செய்வார்கள்.

பார்த்து சூதனமா இருங்க.

Anything comes extra at a cost.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக