திங்கள், 6 ஜூலை, 2020

கேள்வி : இணையத்திலும் ,முக நூலிலும் .வாட்ஸாப்பிலும்  உங்கள் உழைப்பையும் நேரத்தையும் செலவிட்டு விடைகள் எழுதுவது எதற்காக? இதனால் உங்களுக்குக் கிடைக்கும் பலன்கள் என்ன?

என் பதில் :

கொரோனா வைரஸால் முடங்கிக் கிடக்காமல் நல்ல பயனுள்ள வகையில் பயன்படுத்திக் கொள்வதோடு, உங்களுக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்ற ஒரு நல்ல எண்ணத்தில் என் மனதில் தேங்கியிருந்த எண்ணங்கள் எல்லாம் ஒரு வடிகாலாக இந்த தளங்களை  பயன்படுத்திக் கொள்கிறேன்.

சமீபத்தில் தான் செய்த பதிவுகளை ஒவ்வொன்றுக்கும் தொடர்பில்லாத, வெவ்வேறு தலைப்பில் மனதில் தேக்கி வைத்த கருத்துக்களை / எண்ணங்களை, என் வாழ்வில் செயல்படுத்திய நினைவுகளையும், உங்களோடு பகிர்ந்து கொண்டேன்.

உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன். இதற்காக நீங்கள் காட்டி ஆதரவும் அரவணைப்பும் உற்சாகமும் என்னை மேலும் மேலும் எழுதத் தூண்டியது.

மற்ற சமூக வலைத்தளங்களில் உள்ள குறுகிய நட்பு வட்டத்துக்குள் எனது எண்ணத்தை தெரிவிக்க தற்போது மனம் ஏற்கவில்லை.

வாட்ஸ் ஆப் & முக நூல்,இணையதளத்திலும் எனது எழுத்துப் பயணம் இணையதளத்தில் அதிக அளவு பார்வையாளர்கள் கொண்ட தளத்தில் மேற்கொள்ள வேண்டுமென்ற எண்ணத்தில் கேள்விக்கு பதில் எழுதியும், கேள்வி கேட்டு பதிலை எதிர்பார்த்தும் இருக்கிறேன்.

நன்றி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக