கேள்வி : ஏதோ குடும்ப பிரச்சனைக்காக கல்யாணம் தாமதமாகும் ஆண்களைப் பற்றி சமூகத்தின் கண்ணோட்டம் எப்படி இருக்கும்? அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன?
என் பதில் :..இதற்கு நான் பதில் அளிப்பது விட என் நண்பரின் தம்பியிடம் கேட்டு பார்த்தேன் ..நான் அதிகம் யாரையும் கேட்கமாட்டேன் ..உரிமையோடு பழக கூடிய தம்பியிடம் கேட்டுப்பார்த்தேன் ..அவரின் ஆதங்கம் ..கோபம் .கொட்டி தீர்த்துவிட்டார் ...
அந்த கொடுமைய என் வாயால எப்படி சொல்லுவேன் அண்ணா ..என்று . இந்த ஒரு வாட்டி சொல்றேன் ..
27 வயது தாண்டிவிட்டால் போதும்,
'எப்ப தான் கல்யாணம் சாப்பாடு போடுவே'
'எப்போ தான் பண்ணலன்னு இருக்கே'
இது போன்று கேள்விகளால் துளைக்க ஆரம்பித்து விடுவார்கள். ஏதோ அக்கறையின் காரணமாக கேட்கிறார்கள் என்று பல நேரம் சிறு சிரிப்போடு கடந்துவிடுவதுண்டு. ஆனால் சில நேரம் அப்படி முடியாது, 'நீங்கள் ஏன் திருமணம் செய்து கொண்டீர்கள்' என்று திருப்பி கேட்டுவிடுவது. அதற்கு பெரும்பான்மை பதில் 'செய்து வைத்தார்கள் செய்து கொண்டேன்' என்பது தான்.
இரத்தக்கண்ணீர் படத்தில் எம்.ஆர்.ராதா சொல்வது தான் நினைவுக்கு வரும், 'இந்தியாவுல எதுக்கு கல்யாணம் பன்றோம்னே பல பயலுகளுக்கு தெரியாது'.
அலுவலகத்தில் என்னை விட பத்து வயது மூத்தவர் எனக்கு சொன்ன அறிவுரை, அப்போது எனக்கு 28 வயது. 23 - 24ல் திருமணம் செய்து கொண்டால் தான் 25 - 26ல் பிள்ளை பெற்றுக்கொள்ளலாம். அடுத்து பணி ஓய்வு நேரம் வரும் பொழுது நம் பிள்ளை வேலைக்கு போய் சம்பாதிக்க ஆரம்பித்திருக்கும் எந்த சங்கடமும் இருக்காது என்றார்.
இது ஏதோ முதலீடு பற்றியோ, ரீட்டையர்மென்ட் பெனிபிட் பற்றியோ பேசுவது போல இருந்தது. ஆனால் இதுவும் ஒரு திட்டமிடலே, வாழ்க்கையை இப்படி திட்டமிட்டு வாழ்பவர்கள் தான் பெரும்பான்மை. ஆனால் எனக்கு அதில் உடன்பாடு இல்லை, இந்த வாழ்க்கை பயணத்தில் என்னோடு பயணிக்கும் நபரை தேடுகிறேன், ஏதோ ஒரு நபரோடு பயணிப்பதை விட பிடித்த நபரோடு, கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் அவளுக்காக நானும், எனக்காக அவளும் விட்டுக்கொடுத்து போகும் ஒரு பயணத்தை தான் விரும்புகிறேன்.
இங்கு பலர் திருமண வாழ்க்கை பணி ஓய்வு திட்டம் போல தான் நடத்துகிறார்கள். அதை விடுத்தது வேறு கோணத்தில் அணுகுபவரை விநோதமாகவும், தோற்றவன் போலவும் தான் பார்க்கிறோம்.
தனிப்பட்ட ஒருவரின் விருப்பு வெறுப்பு பற்றி எந்த கவலையும் இல்லாமல் இன்ன வயதில் இதை நான் செய்துவிட்டேன் நீ ஏன் இன்னமும் அதை செய்யவில்லை என்று ஒரு மரம் போல வாழ்பவர்கள் கேள்விகளுக்கு அதிகம் செவி கொடுப்பதில் எந்த பயனும் இல்லை. அதற்கு தரும் பதில், 'என் வாழ்வுக்கான திட்டம் என்னிடம் இருக்கிறது, அது மிகவும் அழகானது, அது பெரும்பனை மக்கள் வாழும் வாழ்க்கை போல இல்லை, அதனால் கூட எனக்கு அது அழகாக தெரியலாம். அதை வாழ்கிறேன்.' இது அவர்களுக்கு புரியப்போவதும் இல்லை.
நான் சென்னைக்கு வந்து 13 ஆண்டுகள் ஓடிவிட்டது, இதில் 2013ல் இருந்து தனியாகவே வசித்து வருகிறேன். இந்த ஊரடங்கு சமயத்தில் என்னோடு பேசும் பலர் 'பாவம் நீ வேற தனியா இருக்கே' எண்ணும்போது, தனியாக இருக்கிறேன் ஆனால் பாவமாக இல்லை என்பேன். இந்த தனிமையை பார்க்காதவர்கள், குடும்பம் என்ற சூழலில் இருப்பவர்கள் அது தான் சௌகர்யம் என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கு அவர்கள் போல் அல்லாதவர்கள் எல்லோருமே பாவம் தான்.
இந்த சமூகம் ஒரு கோட்டில் இயங்க ஆரம்பித்து சில நூற்றாண்டுகள் ஆகி விட்டது. அதனை விட்டு வெளியே செல்வோரை ஒன்று கடவுள் போலவும் இல்லை முட்டாள் போலவுமே பார்க்கிறது. உண்மையில் அந்த கோட்டை விட்டு வெளியே வருவோர் இவர்களின் பார்வைகளை பற்றி கண்டுகொள்வதில்லை, பயணித்துக்கொண்டே இருக்கிறார்கள்.
சிலர் தானாக அந்த கோட்டை விட்டு வெளியே வாராமல் வேறு சில வெளி காரத்திற்காக வந்து, ஏக்கத்தோடு அந்த கோட்டை பார்கிறார்கள். அவர்களை இரக்கப்பட்டே நோகடித்து விடுவார்கள். இரக்கம் காட்டுங்கள், அதை உதவியின் மூலம் மட்டுமே காட்டுங்கள், வார்த்தைகளால் இரக்கம் காட்டுவது போல ஒரு குரூரம் இல்லை.
என் பதில் :..இதற்கு நான் பதில் அளிப்பது விட என் நண்பரின் தம்பியிடம் கேட்டு பார்த்தேன் ..நான் அதிகம் யாரையும் கேட்கமாட்டேன் ..உரிமையோடு பழக கூடிய தம்பியிடம் கேட்டுப்பார்த்தேன் ..அவரின் ஆதங்கம் ..கோபம் .கொட்டி தீர்த்துவிட்டார் ...
அந்த கொடுமைய என் வாயால எப்படி சொல்லுவேன் அண்ணா ..என்று . இந்த ஒரு வாட்டி சொல்றேன் ..
27 வயது தாண்டிவிட்டால் போதும்,
'எப்ப தான் கல்யாணம் சாப்பாடு போடுவே'
'எப்போ தான் பண்ணலன்னு இருக்கே'
இது போன்று கேள்விகளால் துளைக்க ஆரம்பித்து விடுவார்கள். ஏதோ அக்கறையின் காரணமாக கேட்கிறார்கள் என்று பல நேரம் சிறு சிரிப்போடு கடந்துவிடுவதுண்டு. ஆனால் சில நேரம் அப்படி முடியாது, 'நீங்கள் ஏன் திருமணம் செய்து கொண்டீர்கள்' என்று திருப்பி கேட்டுவிடுவது. அதற்கு பெரும்பான்மை பதில் 'செய்து வைத்தார்கள் செய்து கொண்டேன்' என்பது தான்.
இரத்தக்கண்ணீர் படத்தில் எம்.ஆர்.ராதா சொல்வது தான் நினைவுக்கு வரும், 'இந்தியாவுல எதுக்கு கல்யாணம் பன்றோம்னே பல பயலுகளுக்கு தெரியாது'.
அலுவலகத்தில் என்னை விட பத்து வயது மூத்தவர் எனக்கு சொன்ன அறிவுரை, அப்போது எனக்கு 28 வயது. 23 - 24ல் திருமணம் செய்து கொண்டால் தான் 25 - 26ல் பிள்ளை பெற்றுக்கொள்ளலாம். அடுத்து பணி ஓய்வு நேரம் வரும் பொழுது நம் பிள்ளை வேலைக்கு போய் சம்பாதிக்க ஆரம்பித்திருக்கும் எந்த சங்கடமும் இருக்காது என்றார்.
இது ஏதோ முதலீடு பற்றியோ, ரீட்டையர்மென்ட் பெனிபிட் பற்றியோ பேசுவது போல இருந்தது. ஆனால் இதுவும் ஒரு திட்டமிடலே, வாழ்க்கையை இப்படி திட்டமிட்டு வாழ்பவர்கள் தான் பெரும்பான்மை. ஆனால் எனக்கு அதில் உடன்பாடு இல்லை, இந்த வாழ்க்கை பயணத்தில் என்னோடு பயணிக்கும் நபரை தேடுகிறேன், ஏதோ ஒரு நபரோடு பயணிப்பதை விட பிடித்த நபரோடு, கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் அவளுக்காக நானும், எனக்காக அவளும் விட்டுக்கொடுத்து போகும் ஒரு பயணத்தை தான் விரும்புகிறேன்.
இங்கு பலர் திருமண வாழ்க்கை பணி ஓய்வு திட்டம் போல தான் நடத்துகிறார்கள். அதை விடுத்தது வேறு கோணத்தில் அணுகுபவரை விநோதமாகவும், தோற்றவன் போலவும் தான் பார்க்கிறோம்.
தனிப்பட்ட ஒருவரின் விருப்பு வெறுப்பு பற்றி எந்த கவலையும் இல்லாமல் இன்ன வயதில் இதை நான் செய்துவிட்டேன் நீ ஏன் இன்னமும் அதை செய்யவில்லை என்று ஒரு மரம் போல வாழ்பவர்கள் கேள்விகளுக்கு அதிகம் செவி கொடுப்பதில் எந்த பயனும் இல்லை. அதற்கு தரும் பதில், 'என் வாழ்வுக்கான திட்டம் என்னிடம் இருக்கிறது, அது மிகவும் அழகானது, அது பெரும்பனை மக்கள் வாழும் வாழ்க்கை போல இல்லை, அதனால் கூட எனக்கு அது அழகாக தெரியலாம். அதை வாழ்கிறேன்.' இது அவர்களுக்கு புரியப்போவதும் இல்லை.
நான் சென்னைக்கு வந்து 13 ஆண்டுகள் ஓடிவிட்டது, இதில் 2013ல் இருந்து தனியாகவே வசித்து வருகிறேன். இந்த ஊரடங்கு சமயத்தில் என்னோடு பேசும் பலர் 'பாவம் நீ வேற தனியா இருக்கே' எண்ணும்போது, தனியாக இருக்கிறேன் ஆனால் பாவமாக இல்லை என்பேன். இந்த தனிமையை பார்க்காதவர்கள், குடும்பம் என்ற சூழலில் இருப்பவர்கள் அது தான் சௌகர்யம் என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கு அவர்கள் போல் அல்லாதவர்கள் எல்லோருமே பாவம் தான்.
இந்த சமூகம் ஒரு கோட்டில் இயங்க ஆரம்பித்து சில நூற்றாண்டுகள் ஆகி விட்டது. அதனை விட்டு வெளியே செல்வோரை ஒன்று கடவுள் போலவும் இல்லை முட்டாள் போலவுமே பார்க்கிறது. உண்மையில் அந்த கோட்டை விட்டு வெளியே வருவோர் இவர்களின் பார்வைகளை பற்றி கண்டுகொள்வதில்லை, பயணித்துக்கொண்டே இருக்கிறார்கள்.
சிலர் தானாக அந்த கோட்டை விட்டு வெளியே வாராமல் வேறு சில வெளி காரத்திற்காக வந்து, ஏக்கத்தோடு அந்த கோட்டை பார்கிறார்கள். அவர்களை இரக்கப்பட்டே நோகடித்து விடுவார்கள். இரக்கம் காட்டுங்கள், அதை உதவியின் மூலம் மட்டுமே காட்டுங்கள், வார்த்தைகளால் இரக்கம் காட்டுவது போல ஒரு குரூரம் இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக