Haram
Malayalam
படம் எடுக்க முக்கிய காரணம் நம்ம ஹீரோ ஃப்கத் ஃபாசில் மட்டுமில்லை ..ஹீரோயின் ராதிகா ஆப்தே.
நவீன இளைஞர்களின் காதலும், கல்யாணமும் , டைவர்ஸ் ம் கதை.
விவாகரத்து என்பது எத்தனை எளிதாய், கடினமான ஒன்றாய் இருக்கு.
Inconvincable differences இதான் ரீசன்.
கல்யாணத்திற்கு முன் அழகாக இருக்கும் அனைத்தும் அத்தனை சிக்கலாகி போகிறது பலரது வாழ்வில்..
முன்பெல்லாம் ஆண்தான் விட்டுட்டு போவான் .இப்போல்லாம் அதில் பெண்களும்..
இந்தியாவை பொறுத்த வரை ஆயிரத்தில் ஐந்து கூட டைவர்ஸ் ஆவதில்லை..இன்னும் 99% திருமணம் டைவர்ஸ் ஆவதில்லை..ஆனால் எனக்கு தெரிந்து இதில் சட்டப்படி இல்லாமல் பிரிந்து வாழும் எண்ணிக்கை மட்டும் 10% இருக்கலாம். 20% பிரிந்து வாழும் தகுதி உடையவர்கள்.குடும்பம் .பேமிலி என்று சேர்ந்து வசிக்கலாம். ஒரு இருவது பர்சண்ட் மனமொத்த தம்பதிகள் வேண்டுமானால் பார்க்கலாம். முக்காவாசி பேர் ஒரு நிர்ப்பந்ததில்தான். அதான் பலருக்கு இந்தளவுக்கு மூச்சு முட்டுகிறது.
காதல் தோல்வியில் தற்கொலை எண்ணம் வருகிறது..அதை ஹீரோ சரி செய்கிறான். இங்குதான் தவறு..தன்னை காப்பாற்றும் ஹீரோ என்று அவளுக்கு பிடித்து விடுகிறது. நிஜமாக பிடித்து இருப்பது அவன் கவுன்சலிங்தான் .அவனில்லை..
பலருக்கும் இந்த பிரச்சனை உள்ளது..உதவியின் பேரில் ஏற்படும் ஈர்ப்பை காதல் என்று கற்பிதம் செய்து ..தாங்கள் மெச்சுருட்டியானவர்கள் என்று கருதி திருமணம் வரை செல்வது..பின் உணர்வது.
அவனுக்கு கொஞ்சமே கொஞ்சம்தான் பொசசிவ் உணர்வு வந்தது..நாளானால் இது சரியாகும் உணர்வுதான்..அவளுக்கு தொடர்ந்து நடப்பது போல தோன்ற சண்டை வர..கிளம்பிவிட்டாள்..
இது போன்ற பிரச்சனையில்லா திருமண விவாகரத்து இந்தியாவில் அதிகம் ஆவது உண்மைதான்.
பல காட்சிகள் அழகு..ஒரு பெண் கொலை செய்யப்படும் காட்சி, அதற்கு போராடும் விமன் ரைட்ஸ் அதே சமயம் ஜஸ்ட் விருப்பமின்மையால் கணவரை பிரிதல் எல்லாம் சுழல்கிறது
மகிழ்வு தருகிற எதுவும் வலியும் தருகிறது..இது மட்டுமே நிஜம்.
"You can hate me, you can't hate love " என்கிறான். மனிதன் இல்லாத வாழ்வுண்டு..அன்பின்றி உண்டா? அன்பு என்பது இயற்கை பேராற்றல். அழியாது.
இப்படி..அடிப்படையில் நாயகன் கம்ப்யூனிஸ்ட்..இதெல்லாம் ஏதும் அறியா ஆழமற்ற புரிதல்களின் நாயகிதான் இவள்.
ஆண் தன் உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் காலம் கடந்து பெண் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கிடைக்கும் காலம் வந்துவிட்டது.
இந்த சமயத்தில்தான் மிகுந்த விழிப்புணர்வுடன் நம் உணர்வுகளை கவனிக்க வேண்டும். சுதந்திரம் மிக அவசியம். அதற்கு முன் பெண் என்பதின் பொறுப்புகளை வளர்த்துக்கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது
Haram என்பது பல அர்த்தங்கள் இருப்பினும் முக்கியமாய் தடுக்கப்பட்டது..அல்லது நல்லது அல்லாதவை..முக்கியமாய் தன்னை பாதிக்கும் வலி உருவாக்குவது.
ஹலால் என்றால் வலியின்றி வெட்டுவது..ஹாரம் என்றால் துன்புறுத்தல்..
இருவரும் ஒருவர் ஆவதுதானே காதல். அதில் ஏன் இத்தனை ஹாரம். ஹலால் போல ஒரே வெட்டில் எந்த பிரிவும் நடப்பதில்லை. வலிக்க வலிக்க துடிக்க துடிக்கதான் பிரிவுகள். அதில் கண்ணீர் துன்பம் எல்லாம் உண்டு.
சக மனிதனை நேசிப்பேன் என்ற ஹீரோக்கும் கூட ஹாராம் தான் நடக்கிறது. தன்னுடைய வலியை பழிவாங்கலாய் மாற்ற முடியுமா என்று யோசிக்கிறான். படம் பார்க்கும் நம்மையும்..என்னடா திருமணம் என்பது இவ்ளோதானா? இவ்ளோ எளிதா எல்லாம் என்று நகர்த்தி செல்வது அழகு.
ஆண் பெண் உறவில் இதான் சரி, இப்படி இருந்தால் அன்பு, சண்டையே வராது , ஆதர்சம் எதுவுமில்லை...எது நடந்தாலும் விட்டுக்கொடுக்காத உறவுகளே நிலைக்கும்..மிச்சம் ஹாராம் தான்.
என்னவாய் இருந்தால் என்ன உறவோ, பிரிவோ வலிவோ மகிழ்வோ..சிங்கிளோ, தம்பதியோ ..அன்போ, பகையோ..அந்த பட ஹீரோ சொன்னதுப்போல
Life should go on, must Go on..
அழகிய வாழ்வென்பது வலியிலும் ..வலியை தாண்டியும்
https://youtu.be/1byJZtuaxCg
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக