கேள்வி :...எளிமையாக இருப்பவர்கள் ஏமாளிகள் அல்லது அறிவில்லாதவர் அனுபவம் இல்லாதவர் என்று எண்ணப்படுகின்றனரா?
என் பதில் :....
என்ன கேட்டீர்கள், எளிமையாக இருப்பவர்கள் ஏமாளிகளாக, அறிவில்லாதவராக, அனுபவம் இல்லாதவராக இருப்பது போல் எண்ணப்படுகிறார்களா?
ஆம், நிச்சயமாக! இந்திய நாட்டில் ஒரு ஐாம்பவான் அப்படி தான் எண்ணப்படுகிறார்.
ஒரு எளிமையான மனிதரின் அறிவுத்திறனையும் அனுபவத்தையும் பகிர ஆசை கொள்கிறேன்.
பொருளாதார அறிவு கொண்டவர், இன்று மத்திய அரசில் ஆளும் கட்சி அறிமுகப்படுத்தும் பெரும்பாலான திட்டங்கள் அவர் காலத்தில் வகுக்கப்பட்டதே, இன்றைய அரசு திட்டத்தின் பெயரை மட்டும் மாற்றி வைத்து கொள்கிறார்கள். ஏனென்றால் அவர்களுக்கு திட்டம் தீட்ட தெரியாது!
ஒரு அரசாங்கமானது மற்றொரு அரசின் செயல்முறைகளை திருடி கொண்டால், அதுவும் ஒரு காலத்திற்கு தான் நீடிக்கும் , அதற்கு பிறகு பாதாளக் குழியில் விழ வேண்டியதுதான்.
அப்படிதான் விழுந்தது தற்போதைய மத்திய அரசு. பல்வேறு காரணங்களை காட்டி அரசின் செலவுக்காக இந்திய ரிசர்வ் வங்கியிடம் இருந்து பணம் பெற்றுக்கொள்ளப்பட்டது முதல் இன்றைக்கு நாம் சந்திக்கும் பொருளாதார இடர்பாடுகள் வரை அனைத்திற்கும் அரசு தனது சுய அறிவை பயன்படுத்தாதது தான் காரணம் என்று நான் நினைக்கிறேன்.
சரி, அவரை பற்றி கூற வேண்டுமென்றால் அடுக்கி கொண்டே போகலாம்.அவரின் அனுபவத்தைப் பற்றி கூற வேண்டுமா?
பொருளாதாரவியல் வல்லுநரான அவர், இந்தியாவின் பொருளாத தாராளமயமாக்கல் கொள்கையின் துவக்கத்தில் பெரும்பங்கு வகித்தார்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில், ஃபர்ஸ்ட் கிளாஸ் ஹானர்ஸ் பட்டம் பெற்றவர்.
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் டிபில் பட்டம் பெற்றவர்.
இந்திய வெளிநாட்டு வர்த்தக அமைச்சகத்தின் பொருளாதார ஆலோசகராக பணியாற்றியவர்.
இந்திய நிதி அமைச்சகத்தில் முதன்மை பொருளாதார ஆலோசகராக பணியாற்றியவர்.
இந்திய தொழில் மேம்பாட்டு வங்கியின் இயக்குனராக பணியாற்றினார்.
இந்திய ரிசர்வ் வங்கியில் இயக்குனராக பணியாற்றினார்.
பிறகு இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக பணியாற்றினார்.
இந்திய நிதி அமைச்சராக இருந்தார்.
அவர் நிதியமைச்சராகும் முன் பின்தங்கிய நிலையில் இருந்த இந்திய பொருளாதாரம், இவரின் கொள்கைகளால் முன்னேறத் துவங்கியது எனக் கருதப்படுகிறது.
இறுதியில் இந்தியாவின் பிரதம மந்திரியாக 2004 இல் இருந்து 2014 வரை பணியாற்றினார்.
இந்த எளிமையானவரை அறிவில்லாதவர், அனுபவம் இல்லாதவர் என்பது போலவே கருதுகிறது தற்போதைய மத்திய அரசு.
ஏனென்றால், மத்திய அரசைச் சாடுவதற்கு முக்கிய காரணம் உள்ளது, மத்திய அரசானது பொருளாதாரம் வீழ்ச்சி அடையும் நிலை வந்தாலும் ஒரு பொருளாதார நிபுணர் என்று அவரின் அறிவுரை கேட்க கூச்சப்படுகிறார்கள்.
காரணம் அவர் காங்கிரஸ் கட்சியின் கையாட்டி பொம்மை என்று எண்ணிக்கொள்கிறார்கள். ஏனென்றால் உதவி என்று எதிர்கட்சியிடம் கேட்டுவிட்டால் ஆளும் கட்சிக்கு மீசையில் மண் ஒட்டிவிடும் பாருங்கள் அதான்!
"தங்க முட்டை இடும் வாத்தை, தகர டப்பா என்று எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்"
காங்கிரஸில் அவரின் செயல்பாட்டை குறித்து பேசுவதில் எனக்கு உடன்பாடு இல்லை, ஆனால் ஒரு பொருளாதார முனைவராக, வல்லுனரான அவரின் அத்தனை பங்களிப்பும் நாட்டின் மேம்பாட்டிற்கு உதவியது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
அந்த வகையில் அவர் நாட்டிற்கு ஆற்றிய முக்கிய பங்களிப்பை எண்ணிப் பெருமை கொள்கிறேன்.
நன்றி…!
என் பதில் :....
என்ன கேட்டீர்கள், எளிமையாக இருப்பவர்கள் ஏமாளிகளாக, அறிவில்லாதவராக, அனுபவம் இல்லாதவராக இருப்பது போல் எண்ணப்படுகிறார்களா?
ஆம், நிச்சயமாக! இந்திய நாட்டில் ஒரு ஐாம்பவான் அப்படி தான் எண்ணப்படுகிறார்.
ஒரு எளிமையான மனிதரின் அறிவுத்திறனையும் அனுபவத்தையும் பகிர ஆசை கொள்கிறேன்.
பொருளாதார அறிவு கொண்டவர், இன்று மத்திய அரசில் ஆளும் கட்சி அறிமுகப்படுத்தும் பெரும்பாலான திட்டங்கள் அவர் காலத்தில் வகுக்கப்பட்டதே, இன்றைய அரசு திட்டத்தின் பெயரை மட்டும் மாற்றி வைத்து கொள்கிறார்கள். ஏனென்றால் அவர்களுக்கு திட்டம் தீட்ட தெரியாது!
ஒரு அரசாங்கமானது மற்றொரு அரசின் செயல்முறைகளை திருடி கொண்டால், அதுவும் ஒரு காலத்திற்கு தான் நீடிக்கும் , அதற்கு பிறகு பாதாளக் குழியில் விழ வேண்டியதுதான்.
அப்படிதான் விழுந்தது தற்போதைய மத்திய அரசு. பல்வேறு காரணங்களை காட்டி அரசின் செலவுக்காக இந்திய ரிசர்வ் வங்கியிடம் இருந்து பணம் பெற்றுக்கொள்ளப்பட்டது முதல் இன்றைக்கு நாம் சந்திக்கும் பொருளாதார இடர்பாடுகள் வரை அனைத்திற்கும் அரசு தனது சுய அறிவை பயன்படுத்தாதது தான் காரணம் என்று நான் நினைக்கிறேன்.
சரி, அவரை பற்றி கூற வேண்டுமென்றால் அடுக்கி கொண்டே போகலாம்.அவரின் அனுபவத்தைப் பற்றி கூற வேண்டுமா?
பொருளாதாரவியல் வல்லுநரான அவர், இந்தியாவின் பொருளாத தாராளமயமாக்கல் கொள்கையின் துவக்கத்தில் பெரும்பங்கு வகித்தார்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில், ஃபர்ஸ்ட் கிளாஸ் ஹானர்ஸ் பட்டம் பெற்றவர்.
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் டிபில் பட்டம் பெற்றவர்.
இந்திய வெளிநாட்டு வர்த்தக அமைச்சகத்தின் பொருளாதார ஆலோசகராக பணியாற்றியவர்.
இந்திய நிதி அமைச்சகத்தில் முதன்மை பொருளாதார ஆலோசகராக பணியாற்றியவர்.
இந்திய தொழில் மேம்பாட்டு வங்கியின் இயக்குனராக பணியாற்றினார்.
இந்திய ரிசர்வ் வங்கியில் இயக்குனராக பணியாற்றினார்.
பிறகு இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக பணியாற்றினார்.
இந்திய நிதி அமைச்சராக இருந்தார்.
அவர் நிதியமைச்சராகும் முன் பின்தங்கிய நிலையில் இருந்த இந்திய பொருளாதாரம், இவரின் கொள்கைகளால் முன்னேறத் துவங்கியது எனக் கருதப்படுகிறது.
இறுதியில் இந்தியாவின் பிரதம மந்திரியாக 2004 இல் இருந்து 2014 வரை பணியாற்றினார்.
இந்த எளிமையானவரை அறிவில்லாதவர், அனுபவம் இல்லாதவர் என்பது போலவே கருதுகிறது தற்போதைய மத்திய அரசு.
ஏனென்றால், மத்திய அரசைச் சாடுவதற்கு முக்கிய காரணம் உள்ளது, மத்திய அரசானது பொருளாதாரம் வீழ்ச்சி அடையும் நிலை வந்தாலும் ஒரு பொருளாதார நிபுணர் என்று அவரின் அறிவுரை கேட்க கூச்சப்படுகிறார்கள்.
காரணம் அவர் காங்கிரஸ் கட்சியின் கையாட்டி பொம்மை என்று எண்ணிக்கொள்கிறார்கள். ஏனென்றால் உதவி என்று எதிர்கட்சியிடம் கேட்டுவிட்டால் ஆளும் கட்சிக்கு மீசையில் மண் ஒட்டிவிடும் பாருங்கள் அதான்!
"தங்க முட்டை இடும் வாத்தை, தகர டப்பா என்று எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்"
காங்கிரஸில் அவரின் செயல்பாட்டை குறித்து பேசுவதில் எனக்கு உடன்பாடு இல்லை, ஆனால் ஒரு பொருளாதார முனைவராக, வல்லுனரான அவரின் அத்தனை பங்களிப்பும் நாட்டின் மேம்பாட்டிற்கு உதவியது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
அந்த வகையில் அவர் நாட்டிற்கு ஆற்றிய முக்கிய பங்களிப்பை எண்ணிப் பெருமை கொள்கிறேன்.
நன்றி…!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக