வியாழன், 23 ஏப்ரல், 2020

புவி தினம்....சிவக்கனி


புவி ஆளப்பிறந்தாயடா என்று கூறிவளர்த்ததாலோ என்னவோ புவியை மட்டுமே ஆண்டு கொண்டுள்ளோம்......
மாண்டவர் மீண்டெழுவது கதைகளில் மட்டுமே சாத்தியம்.‌.....
ஆலகால விஷத்தை விழுங்கிய ஆண்டவனைக் கொண்டாடும் நாம்...ஆழமறியா நஞ்சை விழுங்கிய நம் பூமித்தாயை எண்ணுவதில்லை.....   
நம் நாவிற்கு இனிய சுவை பானத்தைக் கொண்டாடிய நாம்....
பாமர மக்களின் தாகம் தணிக்கும் நிலத்தடி நீரை எண்ணவும் மறந்து விட்டோம்.....
ஆகாய வானில் கோட்டை கட்ட தெரிந்த நாம்
காற்று வெளியின் தூய்மை
காக்க மறந்து விட்டோம்......
நாம் மறந்ததை நமக்கு
நினைவூட்டவே ...
கொரானாவின்  கோர தாண்டவம்......
வல்லரசு என்று
வெற்றியில் புரண்டாலும்....
 வளர்கிறோம் என்று மிதப்பில்  இருந்தாலும்...
தன்னைத்தான் காக்கின்
என்னும் வள்ளுவரின் வாக்கிற்கினங்க...
இயற்கையே இமயமாய்
வெகுண்டெழுந்ததோ.....
விபத்தில்லை...‌.....
மாசில்லை........
கொலையில்லை....
கொள்ளையில்லை.......
ஊரோடு ஒன்று பட்டால்
கூத்தாடிக்குக் கொண்டாட்டமாம் - பழமொழி....
உலகை உலுக்கும் உயிரினை உலுக்கி எடுக்க
ஒன்றினைவோம்.....
மகத்துவம் நிறைந்த மருத்துவத்தால் மனிதம் காக்க ஒன்றினைவோம்......
விழித்திருப்போம்....
விலகியிருப்போம்......
வீட்டிலிருப்போம்........
விவேகமாய் முடிவெடுப்போம்.....
இருண்ட உலகினை மீட்டெடுக்க
இயற்கையை மீட்பதே
முதல் கடமை...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக