கேள்வி :.....மருத்துவரின் வாழ்க்கை எப்படி இருக்கும்?
பதில் :...என் மருத்துவ நண்பர்களும் இருக்கிறார்கள் ..அவர்களுடன் பேசிய பொழுது ...நான் மருத்துவ பரிசோதனைக்கு போகும் பொழுது கொஞ்சம் சுற்றுப்புறமும் கவனிப்பது உண்டு ..மருத்துவர் பாணியிலே ..பகிர்ந்து தான் ..
கொஞ்சம் சுவாரிஸ்யம் ..அவர்களின் கஷ்டங்கள் புரியும் ..என்பதால் ..படியுங்கள் ...
அரசு மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவு:
70 நோயாளிகள் நின்று கொண்டிருக்கும் வரிசை…
ஒரு பெண்மணி: பிரஷர் மாத்திரை வேணும்.
நான்: இந்தாங்க.
பெண்மணி: பிரஷர் சரியா இருக்குதுங்களா?
நான்: சரியா இருக்குங்க.
பெண்மணி: அப்போ நான் ஏன் மாத்திரை சாப்பிடணும்.
நான்: மறுபடியும் ஏறாம இருக்க!
பெண்மணி: முதுகு வலி ஆயின்ட்மெண்ட் வேணுங்க.
நான்: இந்தாங்க.
பெண்மணி: அப்படியே கண்ணு சொட்டு மருந்து..
நான்:இந்தாங்க.
பெண்மணி: திரும்பி இரண்டு அடி வைத்துவிட்டு திரும்பி…ஊசி எழுதிட்டீங்களா???
நான்: பிரஷருக்கு எல்லாம் ஊசி இல்லம்மா.
பெண்மணி: மாசாமாசம் வாங்குற சத்து ஊசி வேணும்.
நான்: ஸ்ஸ்ஸ்…இந்தாங்க.
பெண்மணி: எங்க வீட்டுக்காரருக்கு ஒரு வலி ஆயின்ட்மெண்ட், பக்கத்து வீட்டுக்கார அம்மாவுக்கு எலப்பு மாத்திர!
நான்(சலிப்புடன்): இந்தாங்க! வேற அரிசி, பருப்பு கீது வேணுங்களா???
பெண்மணி: அதெல்லாம் வேணாமுங்க.
நான்: சந்தோசம், போய்ட்டு வாங்க!
அவசர சிகிச்சை பிரிவு:
நான்: அவசரம் இல்ல, ஆனாலும் கைல அடி கொஞ்சம் பெரிசா தெரியுதுங்க.. எலும்பு டாக்டர் பாத்துட்டா நல்லது. அதுக்கு பெரிய ஆஸ்பத்திரிக்கு போகணும்.
நோயாளியின் உறவினர்: 108 ஆம்புலன்ஸ் வேணும்.
நான்: நடக்க முடிஞ்சு, சௌகரியமா உக்கார்ந்து இருக்கிறவங்களுக்கு 108 கிடையாதுங்க. இதுக்கெல்லாம் கூப்பிட்டா அப்புறம் பிரசவம், நெஞ்சு வலி இருக்கரவங்களுக்கு 108 கிடைக்காது.
உறவினர்: நான் கௌன்சிலர் தான். அதெல்லாம் கூப்பிடலாம், கூப்பிடுங்க.
வேறு வழி???
புறநோயாளிகள் பிரிவில் நோயாளிகளை பார்த்துக்கொண்டிருந்த போது அவசர அழைப்பு. எறும்புக் கொல்லி மருந்து உட்கொண்ட ஒருவரை அழைத்து வந்துள்ளதாக…
நான்: ஐயா, சொல்லுங்க என்ன ஆச்சு?
அவர்: எறும்பு மருந்து சாப்பிட்டேன்.
நான்: சாக் பீஸா இல்ல பவுடரா?
அவர்: பவுடர்.
நற்உடற் காரணிகளை(vitals) பரிசோதனை செய்து பார்த்து விட்டு எல்லாம் நன்றாய் இருப்பதை உறுதி செய்து விட்டு,
நான்: தெரியாம எடுத்து குடிச்சிடீங்களா?
அவர்: தெரிஞ்சேதான் எடுத்து குடிச்சேன்.
நான்: ஏங்க! கொரோனா பயத்துல அவனவன் வீட்டுல முடங்கி கெடக்குறான். நீங்க மருந்து குடிச்சிட்டேன்னு சாதாரணமா சொல்றீங்க?
அவர்: அது, எம்பொண்டாட்டிக்கும் எனக்கும் சண்டையா, அவ எங்கோட 3 நாள் பேசலையா, அவள பயமுறுத்துறதுக்காக குடிச்சிட்டேன்…(முகத்தில் ஒரு நமட்டுசிரிப்பு)
நான்: (கடுப்பை மறைத்துக்கொண்டு) உங்களுக்கு இதெல்லாம் விளையாட்டா இருக்கா? இது நரம்பை பாதிக்கும் தெரியுமா? சரி, மூக்குல டூப் போட்டு வயிறு சுத்தம் பண்ணனும், பெட்டுல ரெண்டு நாள் இருந்து பாக்கணும்.
குறைவான அளவு என்றாலும் விஷம் சிலருக்கு சில பல நேரங்கள் கழித்து இம்சை தரலாம். ஆகவே ஒரு observation க்காக சொன்னேன்.
அவர்: அதெல்லாம் வேணாம். ஒரு குளுக்கோஸ் போடுங்க, இடுப்புல ரெண்டு ஊசி போடுங்க, மாத்திர கொடுங்க, அது போதும்.
நான்: பேசாம நீங்க போய் பேஷண்ட் பாருங்க, நான் குளுக்கோஸ் போட்டுக்கிறேன்.
எனது கிளினிக்கில் ஒரு கல்லூரி இளைஞி,
நான்: வாங்க, உக்காருங்க. சொல்லுங்க என்ன பிரோப்ளேம்?
அவர்: காதுல எறும்பு பூந்துரிச்சு.
நான்: அப்படீங்களா, எத்தன நாளாச்சுங்க?
அவர்: டூ டேஸ்.
நான்: வலி ஏதாச்சும் இருக்குங்களா?
அவர்: ஆமா.
காதுக்கு வெளியில் வெளிச்சம் அடித்து பார்த்து விட்டு
நான்: வெளியிலிருந்து பாக்குறப்போ ஒன்னும் தெரியலிங்க, சின்ன சுள்ளெறும்பா இருந்தா உள்ள லைட் விட்டு பாக்கணுங்க.
அவர்: அதெல்லாம் வேணாம். வெளிய இருந்து பாத்து சொன்னா போதும்.
நான்: நான் சோடா புட்டிங்க! என்னால உள்ள லைட் விட்டு பாத்து தான் இருக்கா இல்ல சொல்ல முடியும்.
அவர்: தேவையில்ல. நான் பாத்துக்கிறேன்.
நான் பார்த்த வரையில், நாம் எவ்வளவு மரியாதையாக பேசினாலும் நவநாகரீக இளைஞ இளைஞிகள் சிலர் மட்டும் தவறியும் கூட "டாக்டர்" என்ற மரியாதை வார்த்தையையும் "ங்க" என்ற இங்கித வார்த்தையையும் உபயோகப்படுத்துவதில்லை. அப்படி பேசினால் குறைந்து போய் விடுவார்களோ என்னவோ!
இன்னொரு முறை கிளினிக்கில்,
நான்: செக் அப் செஞ்சு பாத்ததுல உங்களுக்கு அல்லர்ஜி இருக்கும்மா.
பெண்மணி: அது எதுனால வருது டாக்டர்?
நான்:காத்துல இருக்கும் தூசுங்க! சில பேருக்கு உணவுனாலையும்.
பெண்மணி: தூசா? எங்க வீட்டுல எப்பவுமே டஸ்டே இருக்காது, எப்பவுமே நீட்டா தான் இருக்கும். பின்ன எப்படி எனக்கு தூசு அல்லர்ஜின்னு சொல்றீங்க?
நான்: ஓ…அப்போ உங்க வீட்ட பெருக்கவே மாட்டீங்களா?
பெண்மணி: பெருக்குவோம்.
நான்: பெருக்கும்போது ஒண்ணு பறக்குமே, அதுக்கு பேர் என்னங்க?
பெண்மணி: (புரிந்து கொண்டவராய்) தூசு தாங்க…ஹி..ஹி..
காது வலியுடன் வந்த இளைஞர் ஒருவர்,
நான்: வாங்க, உக்காருங்க.
அவர் சிரித்துக்கொண்டே உட்கார எத்தனிக்கிறார்…
முக கவசம் அணிவதற்காக மறுபக்கம் திரும்பி எடுத்து அணிந்து கொண்டிருக்கிறேன்…டர்..ர்..ர்..என்று ஒரு சத்தம். விடுக்கேன முகத்தை திரும்பினால், என் முகத்துக்கு மிக அருகில் அவர் முகம் இப்படி,
கூடவே நாற்காலியை என் பக்கத்தில் தீவிரமாக இழுத்ததில் floor mat உரிந்து வந்திருந்தது.
முக்கியமான விஷயத்தை பேச போகிறாராம்!
நான்: முத்தம் கித்தம் கொடுக்க போறீங்களா?
(களுக்கென்று சிரித்து விட்டு)அவர்: சாரி டாக்டர்.
நான்: நோய்க்குள்ளயே இருக்கறவன் நான். பக்கத்துல வந்து ஒட்டிக்காதீங்க.
நன்றி .டாக்டர் நண்பர்களுக்கு ....
பதில் :...என் மருத்துவ நண்பர்களும் இருக்கிறார்கள் ..அவர்களுடன் பேசிய பொழுது ...நான் மருத்துவ பரிசோதனைக்கு போகும் பொழுது கொஞ்சம் சுற்றுப்புறமும் கவனிப்பது உண்டு ..மருத்துவர் பாணியிலே ..பகிர்ந்து தான் ..
கொஞ்சம் சுவாரிஸ்யம் ..அவர்களின் கஷ்டங்கள் புரியும் ..என்பதால் ..படியுங்கள் ...
அரசு மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவு:
70 நோயாளிகள் நின்று கொண்டிருக்கும் வரிசை…
ஒரு பெண்மணி: பிரஷர் மாத்திரை வேணும்.
நான்: இந்தாங்க.
பெண்மணி: பிரஷர் சரியா இருக்குதுங்களா?
நான்: சரியா இருக்குங்க.
பெண்மணி: அப்போ நான் ஏன் மாத்திரை சாப்பிடணும்.
நான்: மறுபடியும் ஏறாம இருக்க!
பெண்மணி: முதுகு வலி ஆயின்ட்மெண்ட் வேணுங்க.
நான்: இந்தாங்க.
பெண்மணி: அப்படியே கண்ணு சொட்டு மருந்து..
நான்:இந்தாங்க.
பெண்மணி: திரும்பி இரண்டு அடி வைத்துவிட்டு திரும்பி…ஊசி எழுதிட்டீங்களா???
நான்: பிரஷருக்கு எல்லாம் ஊசி இல்லம்மா.
பெண்மணி: மாசாமாசம் வாங்குற சத்து ஊசி வேணும்.
நான்: ஸ்ஸ்ஸ்…இந்தாங்க.
பெண்மணி: எங்க வீட்டுக்காரருக்கு ஒரு வலி ஆயின்ட்மெண்ட், பக்கத்து வீட்டுக்கார அம்மாவுக்கு எலப்பு மாத்திர!
நான்(சலிப்புடன்): இந்தாங்க! வேற அரிசி, பருப்பு கீது வேணுங்களா???
பெண்மணி: அதெல்லாம் வேணாமுங்க.
நான்: சந்தோசம், போய்ட்டு வாங்க!
அவசர சிகிச்சை பிரிவு:
நான்: அவசரம் இல்ல, ஆனாலும் கைல அடி கொஞ்சம் பெரிசா தெரியுதுங்க.. எலும்பு டாக்டர் பாத்துட்டா நல்லது. அதுக்கு பெரிய ஆஸ்பத்திரிக்கு போகணும்.
நோயாளியின் உறவினர்: 108 ஆம்புலன்ஸ் வேணும்.
நான்: நடக்க முடிஞ்சு, சௌகரியமா உக்கார்ந்து இருக்கிறவங்களுக்கு 108 கிடையாதுங்க. இதுக்கெல்லாம் கூப்பிட்டா அப்புறம் பிரசவம், நெஞ்சு வலி இருக்கரவங்களுக்கு 108 கிடைக்காது.
உறவினர்: நான் கௌன்சிலர் தான். அதெல்லாம் கூப்பிடலாம், கூப்பிடுங்க.
வேறு வழி???
புறநோயாளிகள் பிரிவில் நோயாளிகளை பார்த்துக்கொண்டிருந்த போது அவசர அழைப்பு. எறும்புக் கொல்லி மருந்து உட்கொண்ட ஒருவரை அழைத்து வந்துள்ளதாக…
நான்: ஐயா, சொல்லுங்க என்ன ஆச்சு?
அவர்: எறும்பு மருந்து சாப்பிட்டேன்.
நான்: சாக் பீஸா இல்ல பவுடரா?
அவர்: பவுடர்.
நற்உடற் காரணிகளை(vitals) பரிசோதனை செய்து பார்த்து விட்டு எல்லாம் நன்றாய் இருப்பதை உறுதி செய்து விட்டு,
நான்: தெரியாம எடுத்து குடிச்சிடீங்களா?
அவர்: தெரிஞ்சேதான் எடுத்து குடிச்சேன்.
நான்: ஏங்க! கொரோனா பயத்துல அவனவன் வீட்டுல முடங்கி கெடக்குறான். நீங்க மருந்து குடிச்சிட்டேன்னு சாதாரணமா சொல்றீங்க?
அவர்: அது, எம்பொண்டாட்டிக்கும் எனக்கும் சண்டையா, அவ எங்கோட 3 நாள் பேசலையா, அவள பயமுறுத்துறதுக்காக குடிச்சிட்டேன்…(முகத்தில் ஒரு நமட்டுசிரிப்பு)
நான்: (கடுப்பை மறைத்துக்கொண்டு) உங்களுக்கு இதெல்லாம் விளையாட்டா இருக்கா? இது நரம்பை பாதிக்கும் தெரியுமா? சரி, மூக்குல டூப் போட்டு வயிறு சுத்தம் பண்ணனும், பெட்டுல ரெண்டு நாள் இருந்து பாக்கணும்.
குறைவான அளவு என்றாலும் விஷம் சிலருக்கு சில பல நேரங்கள் கழித்து இம்சை தரலாம். ஆகவே ஒரு observation க்காக சொன்னேன்.
அவர்: அதெல்லாம் வேணாம். ஒரு குளுக்கோஸ் போடுங்க, இடுப்புல ரெண்டு ஊசி போடுங்க, மாத்திர கொடுங்க, அது போதும்.
நான்: பேசாம நீங்க போய் பேஷண்ட் பாருங்க, நான் குளுக்கோஸ் போட்டுக்கிறேன்.
எனது கிளினிக்கில் ஒரு கல்லூரி இளைஞி,
நான்: வாங்க, உக்காருங்க. சொல்லுங்க என்ன பிரோப்ளேம்?
அவர்: காதுல எறும்பு பூந்துரிச்சு.
நான்: அப்படீங்களா, எத்தன நாளாச்சுங்க?
அவர்: டூ டேஸ்.
நான்: வலி ஏதாச்சும் இருக்குங்களா?
அவர்: ஆமா.
காதுக்கு வெளியில் வெளிச்சம் அடித்து பார்த்து விட்டு
நான்: வெளியிலிருந்து பாக்குறப்போ ஒன்னும் தெரியலிங்க, சின்ன சுள்ளெறும்பா இருந்தா உள்ள லைட் விட்டு பாக்கணுங்க.
அவர்: அதெல்லாம் வேணாம். வெளிய இருந்து பாத்து சொன்னா போதும்.
நான்: நான் சோடா புட்டிங்க! என்னால உள்ள லைட் விட்டு பாத்து தான் இருக்கா இல்ல சொல்ல முடியும்.
அவர்: தேவையில்ல. நான் பாத்துக்கிறேன்.
நான் பார்த்த வரையில், நாம் எவ்வளவு மரியாதையாக பேசினாலும் நவநாகரீக இளைஞ இளைஞிகள் சிலர் மட்டும் தவறியும் கூட "டாக்டர்" என்ற மரியாதை வார்த்தையையும் "ங்க" என்ற இங்கித வார்த்தையையும் உபயோகப்படுத்துவதில்லை. அப்படி பேசினால் குறைந்து போய் விடுவார்களோ என்னவோ!
இன்னொரு முறை கிளினிக்கில்,
நான்: செக் அப் செஞ்சு பாத்ததுல உங்களுக்கு அல்லர்ஜி இருக்கும்மா.
பெண்மணி: அது எதுனால வருது டாக்டர்?
நான்:காத்துல இருக்கும் தூசுங்க! சில பேருக்கு உணவுனாலையும்.
பெண்மணி: தூசா? எங்க வீட்டுல எப்பவுமே டஸ்டே இருக்காது, எப்பவுமே நீட்டா தான் இருக்கும். பின்ன எப்படி எனக்கு தூசு அல்லர்ஜின்னு சொல்றீங்க?
நான்: ஓ…அப்போ உங்க வீட்ட பெருக்கவே மாட்டீங்களா?
பெண்மணி: பெருக்குவோம்.
நான்: பெருக்கும்போது ஒண்ணு பறக்குமே, அதுக்கு பேர் என்னங்க?
பெண்மணி: (புரிந்து கொண்டவராய்) தூசு தாங்க…ஹி..ஹி..
காது வலியுடன் வந்த இளைஞர் ஒருவர்,
நான்: வாங்க, உக்காருங்க.
அவர் சிரித்துக்கொண்டே உட்கார எத்தனிக்கிறார்…
முக கவசம் அணிவதற்காக மறுபக்கம் திரும்பி எடுத்து அணிந்து கொண்டிருக்கிறேன்…டர்..ர்..ர்..என்று ஒரு சத்தம். விடுக்கேன முகத்தை திரும்பினால், என் முகத்துக்கு மிக அருகில் அவர் முகம் இப்படி,
கூடவே நாற்காலியை என் பக்கத்தில் தீவிரமாக இழுத்ததில் floor mat உரிந்து வந்திருந்தது.
முக்கியமான விஷயத்தை பேச போகிறாராம்!
நான்: முத்தம் கித்தம் கொடுக்க போறீங்களா?
(களுக்கென்று சிரித்து விட்டு)அவர்: சாரி டாக்டர்.
நான்: நோய்க்குள்ளயே இருக்கறவன் நான். பக்கத்துல வந்து ஒட்டிக்காதீங்க.
நன்றி .டாக்டர் நண்பர்களுக்கு ....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக