கேள்வி :.....TLTRO எனப்படும் நீண்ட கால ரெப்போ செயல்பாடுகளை ரிசர்வ் வங்கி எவ்வாறு கையாளுகிறது?
பதில் :....T L T R O ?
ரிசர்வ் வங்கி அடுத்தமுறை TLTRO ஏலம் விடும்போது, அவருக்கு தள்ளுபடி விலையில் ஒரு 1000 கோடி ஒதுக்கீடு கிடைக்கட்டும். ததாஸ்து.
TLTRO ஒரு பல்லு கூசும் சப்ஜெக்ட். மேலோட்டமாக தெரிந்துகொண்டால் நமக்கு போதும். புரியாத இடங்களை, விட்டுவிட்டு, புரிந்ததை படியுங்கள். ப்ராக்கெட்டில் சொன்ன விஷயங்களை சாய்சில் விட்டுவிடலாம்.
முதல் விஷயம். ரிசர்வ் வங்கி, மற்ற வங்கிகளுக்கு பணம் தரவேண்டியிருக்கிறது. அது அதன் கடமை. அதனால்தான் அது வங்கிகளின் தானைத் தலைவன் (Banker to Bankers).
இந்த பணம் தரும் 'முறைசீருக்கு' ரிசர்வ் வங்கி பல ஆயுதங்களை வைத்திருக்கிறது. அது தனது ஆயுதக்கிடங்கில் புதிதாக சேர்த்த ரபேல் தான் TLTRO.
ரிசர்வ் வங்கி, மற்ற வங்கிகள் சீர் கேட்டால், (சீர் கெட்டால் அல்ல), இது போல் ரெப்போ (repo), திறந்த சந்தை செயல்பாடுகள் (open market operations) என்று பல வழிகளில் பணம் கொடுக்கும்.
இப்போது TLTRO !
TLTRO என்றால் என்ன என்பதை தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் LTRO (long-term repo operations) என்றால் என்று தெரிந்து கொண்டால் போதும். சின்ன மேட்டர் தான், வாருங்கள் பார்த்து விடலாம்.
LTRO ?
LTRO-வின் கீழ் ரிசர்வ் வங்கி, மற்ற வங்கிகளுக்கு, ஒரு ஆண்டு முதல் மூன்று ஆண்டு வரை (ரெப்போ விகிதத்தில்) பணம் வழங்குகிறது. இதற்கு ஈடாக வங்கிகள் அரசாங்கப் பத்திரங்களை (Goverment Securities) பிணையமாக தர வேண்டும்.
வங்கிகள் இந்த பணத்தை வாங்கி என்ன செய்யும்? நனறாக கேட்டீர்கள், போங்கள்.
கொரோனா இந்தியாவை தாக்கினால், நாமெல்லாம் வங்கியில் வாங்கிய பைக் கடனுக்கு, 3 மாசம் கழித்து EMI பணம் கட்டினால் போதும் என்று சந்தோசப்பட்டோம் அல்லவா?
இது போல, மற்ற பல சமயங்களில் வங்கிகளுக்கு பண தட்டுப்பாடு, நெருக்கடி ஏற்படும். அப்போதெல்லாம் வங்கிகள் ரிசர்வ் வங்கியிடமிருந்து பணம் புரட்டி சமாளிக்கின்றன.
அப்படியென்றால் TLTRO?
TLTRO (targeted long-term repo operations) என்பது முன்பே சொன்னது போல குறி வைத்து தாக்கும் ரபேல். இந்த முறையில் வங்கிகள் வாங்கும் பணத்தை குறிப்பிட்ட சில விஷயங்களில் தான் முதலீடு செய்ய முடியும்.
கொரோனா சமயத்தில் (வங்கிகள் மட்டுமில்லாமல்) பல வங்கி அல்லாத நிதி நிறுவனங்களும் (NBFC) பாதிப்புள்ளாகிவிட்டன. ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட், பஜாஜ் பைனான்ஸ், முத்தூட் போன்றவை. இவற்றையும் காப்பாற்ற வேண்டும்.
இப்படி காலத்தில் உதவி செய்யாததால், டிஹெச்எப் எல் DHFL), ஐஎல்எப்எஸ் (IL&FS), ரிலையன்ஸ் கேப்பிடல் (Reliance Capital) போன்ற நிதி நிறுவனங்கள் கடையை சாத்திவிட்டன.
இப்படியாகப்பட்ட வங்கி அல்லாத நிதி நிறுவனங்களை காப்பாறும் நோக்கில், குறி வைத்து கொடுக்கப்பட்ட நீண்ட கால சீர் வரிசைதான் TLTRO - Targeted Long-Term Repo Operations!
இந்த சீரை வாங்கி, மற்ற வங்கிகள் NBFC க்கள் வெளியிடும் பல பத்திரங்களில் முதலீடு செய்கின்றன (Commercial Paper and Non-Convertible Debentures). அந்த NBFC -களும் பணத்தை பெற்று கொஞ்சம் ஆசுவாசம் வாங்கிக்கொள்ளும்.
இவ்வளவுதான் விஷயம்.
நாமெல்லாம் பாத்திரத்தை அடகு வைத்து, பணம் புரட்டினால், வங்கிகள் பத்திரங்களை அடகு வைத்து பணம் புரட்டிக்கொள்கின்றன.
அடகுக் கடைக்காரருக்கு பத்து ரூபாய் ஸ்டாம்ப் பேப்பர் என்றால், ரிசர்வ் வங்கிக்கு TLTRO !
RBI-யிடம் அடகு வைத்து, வங்கிகள் பணம் புரட்டுகின்றன.
வங்கிகளிடம் அடகு வைத்து, முத்தூட்காரர்கள் பணம் புரட்டுகிறார்கள்.
அவர்களிடம் அடகு வைத்து மக்கள் பணம் புரட்டுகிறார்கள்.
மொத்தத்தில் உலகமே ஏதாவது ஒரு அடகுக்கடையில் தான் இருக்கிறது.
போன மாசம் கடைசி வெள்ளியன்று (27.03.2020) ரிசர்வ் வங்கி, TLTRO முறையை அறிமுகப்படுத்த போவதாகவும், இந்த திட்டத்தின் கீழ் இந்திய வங்கிகள் மூலமாக இந்திய பொருளாதாரத்துக்குள், ஆக்ஸிஜன் பாய்ச்சப் போவதாகவும் சொன்னது.
இந்த பதிவை எழுதிக்கொண்டு இருக்கும்போதே டிவியில் பரபரப்பு! ரிசர்வ் வங்கி கவர்னர் திரு. சக்தி காந்த தாஸ் சில முக்கிய அறிவிப்புகளை செய்துகொண்டு இருக்கிறார். அதில் ஒன்று TLTRO பற்றியது.
கவனியுங்கள்: அறிவிப்பின் போது போகிற போக்கில் “ TLTRO மூலம் வங்கிகள் திரட்டும் பணத்தில் 50% நிதியை சிறிய NBFC க்கள், MFI - க்கள் வழங்கிய பத்திரங்களில்தான் வங்கிகள் முதலீடு வேண்டும் என்று திட்டவட்டமாக அறிவித்தார்.
நுண் நிதி நிறுவனங்கள்தான் (Micro Finance institutions) இந்திய முறை சாரா தொழில் துறைக்கு ஆணிவேர். வருடம் 4.3 கோடி பேர்களுக்கு கடன் வழங்குகின்றன.
நம்ம தெருக்கோடியில் டீக்கடை வைத்திருக்கும் ரகுபதி, இந்த MFI -யில்தான் கடன் வாங்கியிருப்பார்.
ஊரடங்கில் கடையை மூட சொல்லிவிட்டோம். கடன் கட்டமுடியாமல் கலங்கி போய் நிலை குலைந்திருப்பார்.
நேற்றைய இந்த ஒரு அறிவிப்பால் இந்த துறைக்கு ரூ. 12,500 கோடி மூச்சு காற்று கிடைக்கும்.
நேற்று தாஸ் தூக்கிவிட்ட கை இந்த ரகுபதியுடையது !
“பொர்ர்றுருமையா பல்லை கடிச்சிட்டு இரு கண்ணு. சீக்கிரம் கடைய திறக்கிறோம். டீய ஆத்துறோம். கடனை அடைக்கிறோம்.
சரியப்பு, கேட்ட கேள்விக்கு பதில் என்ன?
TLTRO செயல்பாடுகளை ரிசர்வ் வங்கி எவ்வாறு கையாளுகிறது?
ஏல முறையில்!
சரி, ரிசர்வ் வங்கி ஏன் இந்த சீர்வரிசையை ஏலங்கள் மூலம் வங்கிகளிடம் தருகிறது?
இது ஒரு சுவாரசியமான விஷயம். இந்த மாதிரி ஏலத்திற்கென்று ரிசர்வ் வங்கியிடம் ஒரு விண்ணப்பப் முறை இருக்கிறது.
வங்கிகள் தங்களுக்கு இத்தனை கோடி ஒதுக்கீடு செய்யுங்கள் என்று விண்ணப்பிக்க வேண்டும். ஏல தேதி அன்று, ரிசர்வ் வங்கி விண்ணப்பங்களை எண்ணி, மொத்த விண்ணப்ப தொகைக்கு ப்ரோரேட்டா (Prorata) முறையில் ஒதுக்கீடு செய்யும்.
போன மாதக் கடைசியில் போட்ட முதல் TLTRO ஏலத்தில், ரிசர்வ் வங்கி தன் மேஜை மேல் வைத்த தொகை 25000 கோடி. வங்கிகள் போட்டி போட்டு விண்ணப்பித்த தொகை 60,500 கோடி.
ரிசர்வ் வங்கி வரு்கிற 23.04.2020 அன்று, மேலும் ஒரு 25000 கோடிக்கு ஏலம் நடத்தப் போகிறது. விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.
அது சரி. எல்லா நாடுகளின் மத்திய ரிசர்வ் வங்கிகள் நடத்தும் இந்த மாதிரி ஏலத்தில் யாரும் கலந்து கொள்ளாமல் போய் விட்டால்? உன் சீர்வரிசை வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள் என்றால் என்ன அர்த்தம்?
கேள்வி வந்தது மதுரையிலிருந்து. பதிலையும் ஒரு மதுரைக்கார பெரியவரிடமே கேட்கலாம். இது நம்ம சாலமன் பாப்பையாவின் 'குரல்'
எதையும் சாதிக்க எண்ணுவோர் முதலில் பணத்தைச் சம்பாதியுங்கள்; பகைவரின் அகங்காரத்தை அறுக்கும் கூரிய ஆயுதம், பணத்தைவிட வேறு இல்லை - குறள் 759
ஒரு நாட்டின் பொருளாதாரம் பலமாக இருந்தால், அதற்கு எந்த ஆயுதமும் தேவையில்லை - ரபேல் உட்பட.
ஏனுங்க ..இது போதுமாங்கா தகவல் ....
பதில் :....T L T R O ?
ரிசர்வ் வங்கி அடுத்தமுறை TLTRO ஏலம் விடும்போது, அவருக்கு தள்ளுபடி விலையில் ஒரு 1000 கோடி ஒதுக்கீடு கிடைக்கட்டும். ததாஸ்து.
TLTRO ஒரு பல்லு கூசும் சப்ஜெக்ட். மேலோட்டமாக தெரிந்துகொண்டால் நமக்கு போதும். புரியாத இடங்களை, விட்டுவிட்டு, புரிந்ததை படியுங்கள். ப்ராக்கெட்டில் சொன்ன விஷயங்களை சாய்சில் விட்டுவிடலாம்.
முதல் விஷயம். ரிசர்வ் வங்கி, மற்ற வங்கிகளுக்கு பணம் தரவேண்டியிருக்கிறது. அது அதன் கடமை. அதனால்தான் அது வங்கிகளின் தானைத் தலைவன் (Banker to Bankers).
இந்த பணம் தரும் 'முறைசீருக்கு' ரிசர்வ் வங்கி பல ஆயுதங்களை வைத்திருக்கிறது. அது தனது ஆயுதக்கிடங்கில் புதிதாக சேர்த்த ரபேல் தான் TLTRO.
ரிசர்வ் வங்கி, மற்ற வங்கிகள் சீர் கேட்டால், (சீர் கெட்டால் அல்ல), இது போல் ரெப்போ (repo), திறந்த சந்தை செயல்பாடுகள் (open market operations) என்று பல வழிகளில் பணம் கொடுக்கும்.
இப்போது TLTRO !
TLTRO என்றால் என்ன என்பதை தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் LTRO (long-term repo operations) என்றால் என்று தெரிந்து கொண்டால் போதும். சின்ன மேட்டர் தான், வாருங்கள் பார்த்து விடலாம்.
LTRO ?
LTRO-வின் கீழ் ரிசர்வ் வங்கி, மற்ற வங்கிகளுக்கு, ஒரு ஆண்டு முதல் மூன்று ஆண்டு வரை (ரெப்போ விகிதத்தில்) பணம் வழங்குகிறது. இதற்கு ஈடாக வங்கிகள் அரசாங்கப் பத்திரங்களை (Goverment Securities) பிணையமாக தர வேண்டும்.
வங்கிகள் இந்த பணத்தை வாங்கி என்ன செய்யும்? நனறாக கேட்டீர்கள், போங்கள்.
கொரோனா இந்தியாவை தாக்கினால், நாமெல்லாம் வங்கியில் வாங்கிய பைக் கடனுக்கு, 3 மாசம் கழித்து EMI பணம் கட்டினால் போதும் என்று சந்தோசப்பட்டோம் அல்லவா?
இது போல, மற்ற பல சமயங்களில் வங்கிகளுக்கு பண தட்டுப்பாடு, நெருக்கடி ஏற்படும். அப்போதெல்லாம் வங்கிகள் ரிசர்வ் வங்கியிடமிருந்து பணம் புரட்டி சமாளிக்கின்றன.
அப்படியென்றால் TLTRO?
TLTRO (targeted long-term repo operations) என்பது முன்பே சொன்னது போல குறி வைத்து தாக்கும் ரபேல். இந்த முறையில் வங்கிகள் வாங்கும் பணத்தை குறிப்பிட்ட சில விஷயங்களில் தான் முதலீடு செய்ய முடியும்.
கொரோனா சமயத்தில் (வங்கிகள் மட்டுமில்லாமல்) பல வங்கி அல்லாத நிதி நிறுவனங்களும் (NBFC) பாதிப்புள்ளாகிவிட்டன. ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட், பஜாஜ் பைனான்ஸ், முத்தூட் போன்றவை. இவற்றையும் காப்பாற்ற வேண்டும்.
இப்படி காலத்தில் உதவி செய்யாததால், டிஹெச்எப் எல் DHFL), ஐஎல்எப்எஸ் (IL&FS), ரிலையன்ஸ் கேப்பிடல் (Reliance Capital) போன்ற நிதி நிறுவனங்கள் கடையை சாத்திவிட்டன.
இப்படியாகப்பட்ட வங்கி அல்லாத நிதி நிறுவனங்களை காப்பாறும் நோக்கில், குறி வைத்து கொடுக்கப்பட்ட நீண்ட கால சீர் வரிசைதான் TLTRO - Targeted Long-Term Repo Operations!
இந்த சீரை வாங்கி, மற்ற வங்கிகள் NBFC க்கள் வெளியிடும் பல பத்திரங்களில் முதலீடு செய்கின்றன (Commercial Paper and Non-Convertible Debentures). அந்த NBFC -களும் பணத்தை பெற்று கொஞ்சம் ஆசுவாசம் வாங்கிக்கொள்ளும்.
இவ்வளவுதான் விஷயம்.
நாமெல்லாம் பாத்திரத்தை அடகு வைத்து, பணம் புரட்டினால், வங்கிகள் பத்திரங்களை அடகு வைத்து பணம் புரட்டிக்கொள்கின்றன.
அடகுக் கடைக்காரருக்கு பத்து ரூபாய் ஸ்டாம்ப் பேப்பர் என்றால், ரிசர்வ் வங்கிக்கு TLTRO !
RBI-யிடம் அடகு வைத்து, வங்கிகள் பணம் புரட்டுகின்றன.
வங்கிகளிடம் அடகு வைத்து, முத்தூட்காரர்கள் பணம் புரட்டுகிறார்கள்.
அவர்களிடம் அடகு வைத்து மக்கள் பணம் புரட்டுகிறார்கள்.
மொத்தத்தில் உலகமே ஏதாவது ஒரு அடகுக்கடையில் தான் இருக்கிறது.
போன மாசம் கடைசி வெள்ளியன்று (27.03.2020) ரிசர்வ் வங்கி, TLTRO முறையை அறிமுகப்படுத்த போவதாகவும், இந்த திட்டத்தின் கீழ் இந்திய வங்கிகள் மூலமாக இந்திய பொருளாதாரத்துக்குள், ஆக்ஸிஜன் பாய்ச்சப் போவதாகவும் சொன்னது.
இந்த பதிவை எழுதிக்கொண்டு இருக்கும்போதே டிவியில் பரபரப்பு! ரிசர்வ் வங்கி கவர்னர் திரு. சக்தி காந்த தாஸ் சில முக்கிய அறிவிப்புகளை செய்துகொண்டு இருக்கிறார். அதில் ஒன்று TLTRO பற்றியது.
கவனியுங்கள்: அறிவிப்பின் போது போகிற போக்கில் “ TLTRO மூலம் வங்கிகள் திரட்டும் பணத்தில் 50% நிதியை சிறிய NBFC க்கள், MFI - க்கள் வழங்கிய பத்திரங்களில்தான் வங்கிகள் முதலீடு வேண்டும் என்று திட்டவட்டமாக அறிவித்தார்.
நுண் நிதி நிறுவனங்கள்தான் (Micro Finance institutions) இந்திய முறை சாரா தொழில் துறைக்கு ஆணிவேர். வருடம் 4.3 கோடி பேர்களுக்கு கடன் வழங்குகின்றன.
நம்ம தெருக்கோடியில் டீக்கடை வைத்திருக்கும் ரகுபதி, இந்த MFI -யில்தான் கடன் வாங்கியிருப்பார்.
ஊரடங்கில் கடையை மூட சொல்லிவிட்டோம். கடன் கட்டமுடியாமல் கலங்கி போய் நிலை குலைந்திருப்பார்.
நேற்றைய இந்த ஒரு அறிவிப்பால் இந்த துறைக்கு ரூ. 12,500 கோடி மூச்சு காற்று கிடைக்கும்.
நேற்று தாஸ் தூக்கிவிட்ட கை இந்த ரகுபதியுடையது !
“பொர்ர்றுருமையா பல்லை கடிச்சிட்டு இரு கண்ணு. சீக்கிரம் கடைய திறக்கிறோம். டீய ஆத்துறோம். கடனை அடைக்கிறோம்.
சரியப்பு, கேட்ட கேள்விக்கு பதில் என்ன?
TLTRO செயல்பாடுகளை ரிசர்வ் வங்கி எவ்வாறு கையாளுகிறது?
ஏல முறையில்!
சரி, ரிசர்வ் வங்கி ஏன் இந்த சீர்வரிசையை ஏலங்கள் மூலம் வங்கிகளிடம் தருகிறது?
இது ஒரு சுவாரசியமான விஷயம். இந்த மாதிரி ஏலத்திற்கென்று ரிசர்வ் வங்கியிடம் ஒரு விண்ணப்பப் முறை இருக்கிறது.
வங்கிகள் தங்களுக்கு இத்தனை கோடி ஒதுக்கீடு செய்யுங்கள் என்று விண்ணப்பிக்க வேண்டும். ஏல தேதி அன்று, ரிசர்வ் வங்கி விண்ணப்பங்களை எண்ணி, மொத்த விண்ணப்ப தொகைக்கு ப்ரோரேட்டா (Prorata) முறையில் ஒதுக்கீடு செய்யும்.
போன மாதக் கடைசியில் போட்ட முதல் TLTRO ஏலத்தில், ரிசர்வ் வங்கி தன் மேஜை மேல் வைத்த தொகை 25000 கோடி. வங்கிகள் போட்டி போட்டு விண்ணப்பித்த தொகை 60,500 கோடி.
ரிசர்வ் வங்கி வரு்கிற 23.04.2020 அன்று, மேலும் ஒரு 25000 கோடிக்கு ஏலம் நடத்தப் போகிறது. விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.
அது சரி. எல்லா நாடுகளின் மத்திய ரிசர்வ் வங்கிகள் நடத்தும் இந்த மாதிரி ஏலத்தில் யாரும் கலந்து கொள்ளாமல் போய் விட்டால்? உன் சீர்வரிசை வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள் என்றால் என்ன அர்த்தம்?
கேள்வி வந்தது மதுரையிலிருந்து. பதிலையும் ஒரு மதுரைக்கார பெரியவரிடமே கேட்கலாம். இது நம்ம சாலமன் பாப்பையாவின் 'குரல்'
எதையும் சாதிக்க எண்ணுவோர் முதலில் பணத்தைச் சம்பாதியுங்கள்; பகைவரின் அகங்காரத்தை அறுக்கும் கூரிய ஆயுதம், பணத்தைவிட வேறு இல்லை - குறள் 759
ஒரு நாட்டின் பொருளாதாரம் பலமாக இருந்தால், அதற்கு எந்த ஆயுதமும் தேவையில்லை - ரபேல் உட்பட.
ஏனுங்க ..இது போதுமாங்கா தகவல் ....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக