கேள்வி :...அமெரிக்காவின் ஹெல்த் சிஸ்டத்துக்கும் நம் நாட்டு ஹெல்த் சிஸ்டத்துக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
என் பதில் :....
USA(அமெரிக்கா ) என்பது கிட்டத்தட்ட ஒரு முழுமையான முதலாளித்துவ நாடு. ஆனால் இந்தியா ஒரு அரைகுறை சோசலிஸ்ட் , அரைகுறை முதலாளித்துவ ( மற்றும் ஒரு "வளரும் நாடு" ) நாடு. அமெரிக்காவின் மருத்துவ வசதி மற்றும் கட்டணங்களை இந்தியாவுடன் ஒப்பிடுவது என்பது சற்று வித்தியாசமானது தான். ஏனெனில் இந்தியாவில் இலவச மருத்துவமும் உண்டு, விலை உயர்ந்த சாதாரண மக்களால் எண்ணிப்பார்க்கமுடியாத மருத்துவமும் உண்டு. என்னால் முடிந்தவரை எளிமை படுத்துகிறேன் .
1. நோயை கண்டறிதல்
இந்தியாவில் பெரும்பாலும் அறிகுறிகளை (மருத்துவரின் அனுபவத்தையும் பொறுத்து) வைத்து உடனடியாக இந்த நோயாக இருக்குமோ என கருதி , மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. ஆனால் அமெரிக்காவில் முழுவதுமாக பரிசோதனைகள் செய்து பரிசோதனை முடிவுகள் என்ன நோய் என தீர்வு சொல்கின்றனவோ அதை வைத்து மருந்து/சிகிச்சை முடிவுசெய்ய படுகின்றது. இந்தியாவிலும் சில பெரிய மருத்துவமனைகள் இம்முறையை பின்பற்றுகின்றன
2. சுய மருத்துவம்
சுக்கு காபியில் ஆரம்பித்து , ஆண்டி-பையோட்டிக் எனக்கூறப்படும் மருந்துகள் வரை நமக்கு நாமே எடுத்துக்கொள்ளும் இயல்பு இந்தியாவில் உள்ளது. ஆனால் அமெரிக்காவில் மருந்துக்கடைகளில் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்து தரமாட்டார்கள், ஏனெனில் DEA எனும் மருந்து மற்றும் போதை பொருட்களை கண்காணிக்கும் அரசு நிறுவனம் வெகு சிறப்பாக செயல்பட்டு இதுபோன்ற செயல்களை கட்டுப்பாட்டில் வைத்து மீறுவோர் மீது கடும் நடவடிக்கையெடுக்கும் . எனவே அங்கு சுயமருத்துவம் குறைவு தான்.
3. கட்டமைப்பு
இந்தியாவில் மாவட்டத்திற்கு ஒரு பெரிய மருத்துவமனை கூட இருப்பதில்லை(வட நாட்டையும் சேர்த்து சொல்கிறேன்), அவ்வாறு இருப்பினும் அவைகளில் அவசர காலங்களில் உயிரை காப்பாற்ற உதவும் வெண்டிலேட்டர் போன்ற கருவிகள் மிகக்குறைந்த அளவே உள்ளன. ஆனால் அமெரிக்க-மருத்துவமனைகளில் இதுபோன்ற கட்டமைப்பு பிரச்சனைகள் இருப்பதில்லை , ஏனெனில் அவர்களின் சட்டம் கடுமையானது. யாரேனும் பாதிக்கப்பட்டுவிட்டால் நீதிமன்றத்துக்கு இழுத்து பெரிய தொகை ஒன்றை நஷ்ட ஈடாக கேட்பார்கள், எனவே மருத்துவமனைகள் எப்போதும் போதிய வசதிகளுடன் தான் இருக்கும்.
4. மருந்துகள்
காப்புரிமை பெற்ற மருந்துகள் முதலில் அமெரிக்காவிலேயே வெளியிடப்படுகின்றன.பொதுவாக இம்மருந்துகள் விலை மிக அதிகமாக இருக்கும்(சில லட்சம் இந்திய ரூபாய்கள் வரை) . இவை இந்தியாவில் கிடைக்க வெகுகாலமெடுக்கும் ஏனெனில் இந்தியாவில் மருந்துகளின் விலைகள் National Pharmaceutical Pricing Authority (NPPA) எனும் மத்திய அரசு மையம் மூலமாக தீர்மானிக்கப்பட்டு கட்டுப்பாட்டில் வைக்கப்படும். இதுமட்டுமின்றி வந்து சில வருடங்களுக்குள் இம்மருந்துகளுக்கான நிகரான ஜெனிரிக்-மருந்துகள் தயாரிக்க ஏனைய நிறுவனங்களுக்கு உரிமையளிக்கப்பட்டுவிடும். உதாரணமாக Pomalidomide எனும் புற்று நோய் மருந்து இந்தியாவிற்கு வர 5வருடங்கள் ஆகியது, மேலும் இதுபோன்ற சில மருந்துகள் இந்தியாவிற்கு இன்னும் வரவில்லை.
ஆனால் சாதாரண மருந்துகள் இந்தியாவில் மிகமலிவாகவும் , அமெரிக்காவில் ஜெனிரிக்-மருந்துகள் இருந்தாலுமே விலை அதிகமாகவுமே காணப்படும்.
5. கட்டணம்
அமெரிக்காவில் ஓரளவு அனைவரும் மருத்துவக்காப்பீடு மூலமாக மருத்துவம் பெறுவர். சொந்தச்செலவில் மருத்துவம் பார்த்தால் அங்கே கோடிக்கணக்கில் காசு செலவாகும் (இந்தியமதிப்பில் ). இதனால் பலர் காப்பீடு இல்லையெனில் நோய் வந்தாலும் மருத்துவமனைக்கு செல்லாமலிருப்பதாக சில செய்திகளும் உண்டு. இதற்கு மாற்றுவழியாக சில அமெரிக்கர்கள் இந்தியாவிற்கு(மருத்துவ சுற்றுலா) வந்து இங்குள்ள பெரிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று செல்வது இப்போது வழக்கமாகி உள்ளது. இவ்வாறு செய்தால் மருத்துவ செலவு அமெரிக்காவில் ஆவதைவிட பத்தில் ஒரு பங்கை விட குறைவாகவே ஆகும்.
இந்தியாவில் ஏழைகளுக்கு அரசு மருத்துவமனைகளும் , சிறிய தனியார்மருத்துவமனைகளும் பல சிகிச்சைகள் அளித்து உயிரை காக்கின்றன. அதுமட்டுமின்றி பெரிய மருத்துவமனைகளை அணுக முதலமைச்சர்/பிரதமர் காப்பீடுகளும் உள்ளன. இந்தியாவை பொறுத்தவரை குறைந்த செலவில் மருத்துவம் கிடைப்பது சற்று எளிதாகவே பெரும்பாலும் உள்ளது. ஆனால் கிராமங்களிலும் இவ்வசதிகள் வரவேண்டும் என்பது என் கருத்து..
குறிப்பு :.நானும் என் நண்பர்களிடம் .சொந்தங்களிடமும் ..ஒரு மருத்துவ காப்பீடு எடுத்து வைத்துக்கொள்ளுங்கள் ..பார்க்கும்பொழுது சொல்வேன் ..அதற்கான விழிப்புணர்வு வரவில்லை ..மருத்துமனைகளில் கையில் இருக்கும் தொகையெல்லாம் செலவழித்து ..காப்பீடு அருமை தெரியவரும்போது ...சொந்தங்களை இழந்து இருப்பார்கள் ..காப்பீட்டின் அருமை தெரிவதில்லை ...
என் பதில் :....
USA(அமெரிக்கா ) என்பது கிட்டத்தட்ட ஒரு முழுமையான முதலாளித்துவ நாடு. ஆனால் இந்தியா ஒரு அரைகுறை சோசலிஸ்ட் , அரைகுறை முதலாளித்துவ ( மற்றும் ஒரு "வளரும் நாடு" ) நாடு. அமெரிக்காவின் மருத்துவ வசதி மற்றும் கட்டணங்களை இந்தியாவுடன் ஒப்பிடுவது என்பது சற்று வித்தியாசமானது தான். ஏனெனில் இந்தியாவில் இலவச மருத்துவமும் உண்டு, விலை உயர்ந்த சாதாரண மக்களால் எண்ணிப்பார்க்கமுடியாத மருத்துவமும் உண்டு. என்னால் முடிந்தவரை எளிமை படுத்துகிறேன் .
1. நோயை கண்டறிதல்
இந்தியாவில் பெரும்பாலும் அறிகுறிகளை (மருத்துவரின் அனுபவத்தையும் பொறுத்து) வைத்து உடனடியாக இந்த நோயாக இருக்குமோ என கருதி , மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. ஆனால் அமெரிக்காவில் முழுவதுமாக பரிசோதனைகள் செய்து பரிசோதனை முடிவுகள் என்ன நோய் என தீர்வு சொல்கின்றனவோ அதை வைத்து மருந்து/சிகிச்சை முடிவுசெய்ய படுகின்றது. இந்தியாவிலும் சில பெரிய மருத்துவமனைகள் இம்முறையை பின்பற்றுகின்றன
2. சுய மருத்துவம்
சுக்கு காபியில் ஆரம்பித்து , ஆண்டி-பையோட்டிக் எனக்கூறப்படும் மருந்துகள் வரை நமக்கு நாமே எடுத்துக்கொள்ளும் இயல்பு இந்தியாவில் உள்ளது. ஆனால் அமெரிக்காவில் மருந்துக்கடைகளில் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்து தரமாட்டார்கள், ஏனெனில் DEA எனும் மருந்து மற்றும் போதை பொருட்களை கண்காணிக்கும் அரசு நிறுவனம் வெகு சிறப்பாக செயல்பட்டு இதுபோன்ற செயல்களை கட்டுப்பாட்டில் வைத்து மீறுவோர் மீது கடும் நடவடிக்கையெடுக்கும் . எனவே அங்கு சுயமருத்துவம் குறைவு தான்.
3. கட்டமைப்பு
இந்தியாவில் மாவட்டத்திற்கு ஒரு பெரிய மருத்துவமனை கூட இருப்பதில்லை(வட நாட்டையும் சேர்த்து சொல்கிறேன்), அவ்வாறு இருப்பினும் அவைகளில் அவசர காலங்களில் உயிரை காப்பாற்ற உதவும் வெண்டிலேட்டர் போன்ற கருவிகள் மிகக்குறைந்த அளவே உள்ளன. ஆனால் அமெரிக்க-மருத்துவமனைகளில் இதுபோன்ற கட்டமைப்பு பிரச்சனைகள் இருப்பதில்லை , ஏனெனில் அவர்களின் சட்டம் கடுமையானது. யாரேனும் பாதிக்கப்பட்டுவிட்டால் நீதிமன்றத்துக்கு இழுத்து பெரிய தொகை ஒன்றை நஷ்ட ஈடாக கேட்பார்கள், எனவே மருத்துவமனைகள் எப்போதும் போதிய வசதிகளுடன் தான் இருக்கும்.
4. மருந்துகள்
காப்புரிமை பெற்ற மருந்துகள் முதலில் அமெரிக்காவிலேயே வெளியிடப்படுகின்றன.பொதுவாக இம்மருந்துகள் விலை மிக அதிகமாக இருக்கும்(சில லட்சம் இந்திய ரூபாய்கள் வரை) . இவை இந்தியாவில் கிடைக்க வெகுகாலமெடுக்கும் ஏனெனில் இந்தியாவில் மருந்துகளின் விலைகள் National Pharmaceutical Pricing Authority (NPPA) எனும் மத்திய அரசு மையம் மூலமாக தீர்மானிக்கப்பட்டு கட்டுப்பாட்டில் வைக்கப்படும். இதுமட்டுமின்றி வந்து சில வருடங்களுக்குள் இம்மருந்துகளுக்கான நிகரான ஜெனிரிக்-மருந்துகள் தயாரிக்க ஏனைய நிறுவனங்களுக்கு உரிமையளிக்கப்பட்டுவிடும். உதாரணமாக Pomalidomide எனும் புற்று நோய் மருந்து இந்தியாவிற்கு வர 5வருடங்கள் ஆகியது, மேலும் இதுபோன்ற சில மருந்துகள் இந்தியாவிற்கு இன்னும் வரவில்லை.
ஆனால் சாதாரண மருந்துகள் இந்தியாவில் மிகமலிவாகவும் , அமெரிக்காவில் ஜெனிரிக்-மருந்துகள் இருந்தாலுமே விலை அதிகமாகவுமே காணப்படும்.
5. கட்டணம்
அமெரிக்காவில் ஓரளவு அனைவரும் மருத்துவக்காப்பீடு மூலமாக மருத்துவம் பெறுவர். சொந்தச்செலவில் மருத்துவம் பார்த்தால் அங்கே கோடிக்கணக்கில் காசு செலவாகும் (இந்தியமதிப்பில் ). இதனால் பலர் காப்பீடு இல்லையெனில் நோய் வந்தாலும் மருத்துவமனைக்கு செல்லாமலிருப்பதாக சில செய்திகளும் உண்டு. இதற்கு மாற்றுவழியாக சில அமெரிக்கர்கள் இந்தியாவிற்கு(மருத்துவ சுற்றுலா) வந்து இங்குள்ள பெரிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று செல்வது இப்போது வழக்கமாகி உள்ளது. இவ்வாறு செய்தால் மருத்துவ செலவு அமெரிக்காவில் ஆவதைவிட பத்தில் ஒரு பங்கை விட குறைவாகவே ஆகும்.
இந்தியாவில் ஏழைகளுக்கு அரசு மருத்துவமனைகளும் , சிறிய தனியார்மருத்துவமனைகளும் பல சிகிச்சைகள் அளித்து உயிரை காக்கின்றன. அதுமட்டுமின்றி பெரிய மருத்துவமனைகளை அணுக முதலமைச்சர்/பிரதமர் காப்பீடுகளும் உள்ளன. இந்தியாவை பொறுத்தவரை குறைந்த செலவில் மருத்துவம் கிடைப்பது சற்று எளிதாகவே பெரும்பாலும் உள்ளது. ஆனால் கிராமங்களிலும் இவ்வசதிகள் வரவேண்டும் என்பது என் கருத்து..
குறிப்பு :.நானும் என் நண்பர்களிடம் .சொந்தங்களிடமும் ..ஒரு மருத்துவ காப்பீடு எடுத்து வைத்துக்கொள்ளுங்கள் ..பார்க்கும்பொழுது சொல்வேன் ..அதற்கான விழிப்புணர்வு வரவில்லை ..மருத்துமனைகளில் கையில் இருக்கும் தொகையெல்லாம் செலவழித்து ..காப்பீடு அருமை தெரியவரும்போது ...சொந்தங்களை இழந்து இருப்பார்கள் ..காப்பீட்டின் அருமை தெரிவதில்லை ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக