அப்பாவின் நினைவுதினம் ..மலரும் நினைவுகளுடன் (23.04.2019)
கிருஷ்ணசாமி என்கிற வேலுச்சாமி
தன் சிறு வயதிலே நடந்தே சென்று பள்ளிப் படிப்பை முடித்து
பின்பு ஏதோ ஒரு வேலையில் சேர்ந்து மேலும் படிப்பை தொடர்ந்து
நல்ல வேலையில் தன்னை உயர்த்திக்கொண்டு....தன் வாழ்நாளில்
முதல் சன்மானத்தை அவர் அப்பாவிடம் கொடுத்த போது "வேண்டாம் உனக்கே
செலவு இருக்கும் உனக்கு வேண்டியதை வாங்கி கொள் என்பாராம்"
பின்பு தனக்கென ஒரு வாழ்க்கை அமைத்து தர.....
அப்பா செலவு செய்ய தொடங்குகிறார்....
கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து தனக்கு தேவையான பொருளை வாங்கி வைக்கிறார்.
தனக்கு ஒரு மகளோ/மகனோ பிறந்த பிறகு
ஒளி வீசத்தொடங்கியதாக ஓர் உணர்வு...
மகிழ்ச்சியோடு அப்பா பிள்ளையின் மீது அலாதியான பாசம் வைக்க தொடங்கிறார்.
அவர்கள் படிப்பதற்கு செலவு செய்கிறார்
பின்பு பார்த்து பார்த்து தன் குழந்தைகளுக்கு செய்யும் அப்பா தனக்காக ஒரு செலவையும்
செய்வதில்லை..ஏனோ!!!
வளர்ந்தவுடன் மேற்படிப்புக்கு செலவு செய்யும் அப்பா.. (வெளிக்காட்டாத கஷ்டம் தன்னுள் பூட்டி வைத்துக்கொள்ளும் ரகசியம்)
மகனோ /மகளோ வேலைக்கு செல்வது /கல்யாணம் செய்து வைப்பது என மீண்டும் செலவு
செய்யும் அப்பா......
பின்பு அவர்களின் குழந்தை , பெயர் வைப்பது என....எல்லாச் செலவையும் தனியாளாக
சமாளித்து கொண்டும் சந்தோஷமாக சிரித்து கொண்டும் வாழும் அப்பா...
பேரனோ.... பேத்தியோ.....
வருகிறார்கள் என்றால் அவர்களுக்கு பிடித்ததை வாங்கி வைத்துக்கொண்டு
இன்னும் வரவில்லை என்று காத்து கொண்டிருக்கும் அப்பா.... தாத்தாவாக,,,
(அம்மாவிடம் போய் கேட்பார் பால் இருக்கிறதா? வாங்கி கொண்டு வரவா?
பேரன் பேத்தி எதாச்சம் செய்து வைத்து இருக்கிறாயா....)
இது தான் எல்லார் வாழ்க்கையிலும் நடக்கிறதே...என்று நினைக்கிறீர்களா.....
அப்பாவின் செலவுக்கு எல்லையில்லை போல.....
இப்படியே பார்த்து பார்த்து செய்யும் அப்பாவின் அருமை அவரின் வெளிக்காட்டாத கஷ்டம்...
அவருடைய கோபத்தை வெளிக்காட்டுவது அம்மாவிடம் மட்டுமே... (ஏனென்றால் அவரின் பாதி)
சமாளிக்கும் திறமை...
தனக்கென வாழாதவர்....
இப்படி பலவற்றில் அப்பா என்றுமே உயர்ந்து தான் நிற்கிறார்...
மகன் கொடுக்கும் போதும்.. அவர் அப்பா சொல்வதை போல் "வேண்டாம் உனக்கே
செலவு இருக்கும் உனக்கு வேண்டியதை வாங்கி கொள் என்பாராம்"
அப்பா ஓர் அனுபவத்தின் பொக்கிஷம்...
அக்கறை காட்டுவதில் அப்பாவிற்கு நிகர் எவருமில்லை....
அப்பா வேலையிலிருந்து ஓய்வு பெற்றாலும்
இறைமையில் தன் பணி செய்து என்றுமே சுறுசுறுப்பாய் அப்பா....தாத்தாவாக பரிணமிக்கும் போதும்
மாறாத அந்த தேடல்....நடந்தே...இன்றும் நடைப்பயிற்சி என்று .....அனைவரையும் புரிந்து தான் வைத்திருப்பார் அப்பா....அப்பா மறைந்து ..வருடங்கள் இரண்டு ஆனாலும் ...அவரின்நினைவுகளுடன் ..அவர் கூடவே இருப்பது போன்றே இருக்கிறது ...
அப்பாவின் அருமை அன்பிலே...
அதை நாம் புரிதலே....
இத்திரியிலே.....
அப்பாவின் பாதம் வணங்குவோம்
என்றும் அவரை போற்றுவோம்.
பின்பு ஏதோ ஒரு வேலையில் சேர்ந்து மேலும் படிப்பை தொடர்ந்து
நல்ல வேலையில் தன்னை உயர்த்திக்கொண்டு....தன் வாழ்நாளில்
முதல் சன்மானத்தை அவர் அப்பாவிடம் கொடுத்த போது "வேண்டாம் உனக்கே
செலவு இருக்கும் உனக்கு வேண்டியதை வாங்கி கொள் என்பாராம்"
பின்பு தனக்கென ஒரு வாழ்க்கை அமைத்து தர.....
அப்பா செலவு செய்ய தொடங்குகிறார்....
கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து தனக்கு தேவையான பொருளை வாங்கி வைக்கிறார்.
தனக்கு ஒரு மகளோ/மகனோ பிறந்த பிறகு
ஒளி வீசத்தொடங்கியதாக ஓர் உணர்வு...
மகிழ்ச்சியோடு அப்பா பிள்ளையின் மீது அலாதியான பாசம் வைக்க தொடங்கிறார்.
அவர்கள் படிப்பதற்கு செலவு செய்கிறார்
பின்பு பார்த்து பார்த்து தன் குழந்தைகளுக்கு செய்யும் அப்பா தனக்காக ஒரு செலவையும்
செய்வதில்லை..ஏனோ!!!
வளர்ந்தவுடன் மேற்படிப்புக்கு செலவு செய்யும் அப்பா.. (வெளிக்காட்டாத கஷ்டம் தன்னுள் பூட்டி வைத்துக்கொள்ளும் ரகசியம்)
மகனோ /மகளோ வேலைக்கு செல்வது /கல்யாணம் செய்து வைப்பது என மீண்டும் செலவு
செய்யும் அப்பா......
பின்பு அவர்களின் குழந்தை , பெயர் வைப்பது என....எல்லாச் செலவையும் தனியாளாக
சமாளித்து கொண்டும் சந்தோஷமாக சிரித்து கொண்டும் வாழும் அப்பா...
பேரனோ.... பேத்தியோ.....
வருகிறார்கள் என்றால் அவர்களுக்கு பிடித்ததை வாங்கி வைத்துக்கொண்டு
இன்னும் வரவில்லை என்று காத்து கொண்டிருக்கும் அப்பா.... தாத்தாவாக,,,
(அம்மாவிடம் போய் கேட்பார் பால் இருக்கிறதா? வாங்கி கொண்டு வரவா?
பேரன் பேத்தி எதாச்சம் செய்து வைத்து இருக்கிறாயா....)
இது தான் எல்லார் வாழ்க்கையிலும் நடக்கிறதே...என்று நினைக்கிறீர்களா.....
அப்பாவின் செலவுக்கு எல்லையில்லை போல.....
இப்படியே பார்த்து பார்த்து செய்யும் அப்பாவின் அருமை அவரின் வெளிக்காட்டாத கஷ்டம்...
அவருடைய கோபத்தை வெளிக்காட்டுவது அம்மாவிடம் மட்டுமே... (ஏனென்றால் அவரின் பாதி)
சமாளிக்கும் திறமை...
தனக்கென வாழாதவர்....
இப்படி பலவற்றில் அப்பா என்றுமே உயர்ந்து தான் நிற்கிறார்...
மகன் கொடுக்கும் போதும்.. அவர் அப்பா சொல்வதை போல் "வேண்டாம் உனக்கே
செலவு இருக்கும் உனக்கு வேண்டியதை வாங்கி கொள் என்பாராம்"
அப்பா ஓர் அனுபவத்தின் பொக்கிஷம்...
அக்கறை காட்டுவதில் அப்பாவிற்கு நிகர் எவருமில்லை....
அப்பா வேலையிலிருந்து ஓய்வு பெற்றாலும்
இறைமையில் தன் பணி செய்து என்றுமே சுறுசுறுப்பாய் அப்பா....தாத்தாவாக பரிணமிக்கும் போதும்
மாறாத அந்த தேடல்....நடந்தே...இன்றும் நடைப்பயிற்சி என்று .....அனைவரையும் புரிந்து தான் வைத்திருப்பார் அப்பா....அப்பா மறைந்து ..வருடங்கள் இரண்டு ஆனாலும் ...அவரின்நினைவுகளுடன் ..அவர் கூடவே இருப்பது போன்றே இருக்கிறது ...
அப்பாவின் அருமை அன்பிலே...
அதை நாம் புரிதலே....
இத்திரியிலே.....
அப்பாவின் பாதம் வணங்குவோம்
என்றும் அவரை போற்றுவோம்.
அப்பாவின் ..பொறுமை ..சகிப்புத்தன்மை ..எந்த பிரதிபலன் பாராது பணிகள்
உதவி என்று கேட்டால் தன்னாலான பணிகளை செய்துகொடுக்கும் பாங்கு ..இவரிடம் இருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் ..உலக புத்தக தினம் ...என் அப்பாவின் நினைவு தினமும் இதே நாளில் தான் ...நான் பிறந்தது முதல் பள்ளிப்படிப்பு ...வாழ்க்கை கல்வி ...என்று தினம் தோறும் ..45 வருடங்களாக சொல்லித்தந்த நடமாடிய புத்தகம் ...அவர் கற்றுக்கொடுத்த வாழ்க்கை கல்வியுடன் என்றும் மறவாது இருப்பது ..
உடுமலையில் இருக்கும் கச்சேரி வீதி பள்ளியில் படிக்கும் போதே ..நூலகத்தை காட்டி ...விடுமுறை நாட்கள் ..பள்ளியின் மதிய உணவு நேரம் கொஞ்சம் கிடைத்தாலும் ...படிக்க வழிகாட்டிய தந்தை ...எந்த சூழ்நிலையிலும் ...மனம் கோணாமல் புன்னைகையுடன் ..பணியாற்ற வேண்டிய கற்றுக்கொடுத்த புத்தகம் ...உலகம் முழுவதும் ஏப்ரல் 23ம் நாள் உலகப் புத்தக தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. 1995ம் ஆண்டு முதல் இது தொடர்ந்து நடைபெற்று வரும் நிகழ்வாக இருந்து வருகிறது. உலகளாவிய அளவில் பல இலக்கியவாதிகள் இந்த நாளில் பிறந்தோ அல்லது இறந்தோ இருக்கிறார்கள். ஐரோப்பாவில் வாழ்ந்த தலை சிறந்த இலக்கியவாதியும், நாடக மேதையாகக் கருதப்படுகிறவருமான வில்லியம் ஷேக்ஸ்பியர் பிறந்ததும் இறந்ததும் இந்நாளில் தான் என்பதும்,...
உலக புத்தக தினம் ..என் தந்தையின் நினைவுதினம் ...வாழ்வில் மறவாது ..என்றும் உணர்வுடன் கூடவே இருக்கும் தந்தையின் நினைவுகள் ..
என்றும் நீங்கா நினைவுகளுடன் ..வணங்குகின்றேன்
அன்புடன் உடுமலை சிவக்குமார்
9944066681....


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக