கேள்வி :...பெண்கள் ஆண்களிடம் கூறக் கூடாது என நீங்கள் எண்ணுவது என்னென்ன?
பதில் ...
ஆண்கள் இயல்பாகவே மனைவி மீது மிகுந்த பொசெசிவ். தன் முன்னாள் காதலன் பற்றி சொல்ல கூடாது அல்லது காதல் வாழ்க்கை பற்றி சொல்ல கூடாது. ஆணுக்கு ஆண் இது வேறு படும்....அப்படி தெரிந்து கூட ரொம்ப மெடூரெட்(Matured) மன சாந்தி மனோ உன்னதம் உள்ள ஆண்கள் அதை சரியான வழியில் எடுத்து கொள்வார்கள். ஆனால்...என்றாவது நினைவில் இருக்கும் ......10 வருஷம் ஆனாலும் ஒரு நாள் சொல்லலாம். ஆகையால் கணவனாக போகும் ஆண்களிடம் மறைத்து விடு, என்றும் சொல்லவில்லை நான் ஏனனில் நடுத்தர வர்க்கத்தில் வளர்ந்த நாம் எப்போதும் சுய கட்டுப்பாடு, அப்பாவின் மானம் மரியாதையோடு தான் மட்டுமே வளர்த்து இருப்போம் ஆகையால் இதை மிக பெரிய விஷயமா வீட்டுக்காரரிடம் சொல்ல தேவை இல்லை.
அவருடைய நண்பர் அல்லது உறவினர் இவரை விட அதிக சம்பளம் வாங்குகிறார்....இப்படி சொல்லவே வேண்டாம். ஆணின் ஹார்மோன் என்னிக்குமே போட்டி சுபாவம் தான் எப்போதும் ...இது அவர்களுக்கு கொடிய வலி, கோபம், விரக்தி கொடுக்கும். அவர்கள் எப்படி நினைப்பார்கள் என்றால் தன் இனம் ஒரு சிங்கம் எல்லை வைத்து இருக்கும். அதன் இணை குழந்தைகள் தன்னை பெரியதாக நினைக்க எதிர் பார்க்கும்....ஆனால் தன் பெண் சிங்கம் அடுத்த எல்லையை பார்த்துவிட்டால் எவ்வளவு அசிங்கம் ?
உங்களுக்கு எவ்வளவு மூளை, அறிவு அதிகம் இருந்தாலும் பெண்களே....கணவனிடம் கொஞ்சமாவது மக்காக நடியுங்கள். அடக்கி வாசியுங்கள். இது மிக மிக முக்கியம். ஆண் தன்னைவிட மிக தீவிர அறிவு உடைய பெண்களை தலைவியாக பார்ப்பார்கள்....மனைவியாக கொஞ்சம் ..கஷ்டமே. அடிப்படை போட்டி ஹோர்மோன் ....மற்றும் இதுவும் ரொம்ப மெடூரெட் மன உணர்வு நிலையில் நல்ல முதிர்ச்சி பெற்ற ஆண் மட்டும் கொஞ்சம் விதிவிலக்கு
பிறந்த வீட்டிலிருந்து வரும் அழைப்புகள், பிரச்சனைகளை முடிந்த வரையில் கணவன் காதுக்கு எடுத்து செல்ல தேவையே இல்லை! இது அவர்களுக்கு "ஆரம்பிச்சுட்டாங்க பா மியூசிக் ....பிறந்த இடம் பெருமையா ? இன்னும் என்ன வேண்டி இருக்கு....." இது தோன்ற வாய்ப்புகள் மிக அதிகம்....
நம் அப்பா நம்மை தானம் அல்லது தாரை வார்த்து கொடுத்து விட்டார்கள்....அதாவது....தானம் சென்ற மாடு, முதல் வேலை எஜமானை தான் பார்க்கணும்.....இது கஷ்டம் தான்! ஆனால் இந்த ஒண்ணு புரிந்தால் பல பல பிரச்சனை வராது..
ஆண்கள் 5 வயதில் அம்மாவை இழந்திருந்தால் கூட...இல்லை 70 வயது வரை அம்மா கூட இருந்தாலும்....எந்த நிலையிலும் அவர்கள் அம்மா மீது தீவிர அன்பு, பக்தி, தியானம் எல்லாம் உள்ளவர்கள். உங்களுக்காக அம்மா பத்தி தப்பு சொன்னால் கூட கொஞ்சம் கேட்டுக்கலாம்...."சரி பாவம் புதுசு பழகட்டும் / இல்லை விதி / இல்லை எதுக்கு சண்டை " ஆனால் மிக பெரிய உண்மைகளில் ஒன்று அவர்கள் அம்மாவே அவர்களுக்கு முதல் தெய்வம்! இந்த பந்தத்தை மட்டும் புரிந்து கொண்டால்...."நான் பெருசா அம்மா பெருசா? டவுட் வரவே வராது பெண்களுக்கு....!!"
நமக்கு நம் அப்பா பிடிக்குது இல்ல? பிராய்டு ஜுங் எல்லா உளவியல் மேதை சொன்னதையும் ஓட்டி பாப்போம்....ஆண்களுக்கு தாய் மிக முக்கியம்...
ஓர் ஆண் வீட்டுக்கு வந்த உடனும் அல்லது வெளியில் செல்வதுக்கு முன், உங்கள் குற்றம் குறையை கம்பிளைன்ட் இதனை அந்த அரை மணி நேரம் தயவு செய்து அடுக்காதீங்க....
"ஏன் டா வரோம் ...இந்த எண்ணமே....அவர்களுக்கு இன்னொருத்தியை தேட தூண்டும்!!!"
அளவுக்கு மீறின கோபம் / பொறாமை / எரிச்சல் / தனதாக்கி கொண்டு உரிமை (போஸ்சஸிவ்) இப்படி கசக்காதீங்கள் அது காதலனோ கணவனோ....கொஞ்சம் வருஷம் வேணா உண்மையா இருப்பாரு....ஆனால் தொடர்ந்தால் அவர்கள் இன்னொருத்தி அல்லது பிரிவினைக்கு போய்டுவாங்க இல்லையா? மது ...போன்ற அனைத்து அடிக்ஷன் தேடி போக வாய்ப்பு மிக மிக அதிகம். பெண் அதாவது மனைவி அல்லது காதலி தான் அவங்க உலகம் என்று இல்லை....அவர்கள் உலகத்தில் நிச்சயம் பெரிய இடம் உண்டு ஆனால் அவர்கள் உலகமும் மிக பெரிது....அந்த space கொடுக்க வேண்டும்
பொதுவாக ஆண் கோபமாக இருக்கும் நேரத்தில் "ஏங்க ஏன் கோபம் ..." இதுவா ? அதுவா? இதுவா?இப்படியே நச்சரித்தால் கோபம் 108 டிகிரியை தாண்டும்!" பொளிச்சுனு அரை விடுவாங்க....இல்லேன்னா தன்னையே காயப்படுத்திப்பாங்க.....கோபமாக மூட் அவுட் இருந்தால்.....தானாக சொல்லும் வரை நச்சரிக்க வேண்டாம்....இது மிக பெரிய ஆண்கள் பற்றிய உளவியல் விஷயம்.....அல்லது சொல்லவே இல்லையா? விட்டு விடுங்கள்....
பதில் ...
ஆண்கள் இயல்பாகவே மனைவி மீது மிகுந்த பொசெசிவ். தன் முன்னாள் காதலன் பற்றி சொல்ல கூடாது அல்லது காதல் வாழ்க்கை பற்றி சொல்ல கூடாது. ஆணுக்கு ஆண் இது வேறு படும்....அப்படி தெரிந்து கூட ரொம்ப மெடூரெட்(Matured) மன சாந்தி மனோ உன்னதம் உள்ள ஆண்கள் அதை சரியான வழியில் எடுத்து கொள்வார்கள். ஆனால்...என்றாவது நினைவில் இருக்கும் ......10 வருஷம் ஆனாலும் ஒரு நாள் சொல்லலாம். ஆகையால் கணவனாக போகும் ஆண்களிடம் மறைத்து விடு, என்றும் சொல்லவில்லை நான் ஏனனில் நடுத்தர வர்க்கத்தில் வளர்ந்த நாம் எப்போதும் சுய கட்டுப்பாடு, அப்பாவின் மானம் மரியாதையோடு தான் மட்டுமே வளர்த்து இருப்போம் ஆகையால் இதை மிக பெரிய விஷயமா வீட்டுக்காரரிடம் சொல்ல தேவை இல்லை.
அவருடைய நண்பர் அல்லது உறவினர் இவரை விட அதிக சம்பளம் வாங்குகிறார்....இப்படி சொல்லவே வேண்டாம். ஆணின் ஹார்மோன் என்னிக்குமே போட்டி சுபாவம் தான் எப்போதும் ...இது அவர்களுக்கு கொடிய வலி, கோபம், விரக்தி கொடுக்கும். அவர்கள் எப்படி நினைப்பார்கள் என்றால் தன் இனம் ஒரு சிங்கம் எல்லை வைத்து இருக்கும். அதன் இணை குழந்தைகள் தன்னை பெரியதாக நினைக்க எதிர் பார்க்கும்....ஆனால் தன் பெண் சிங்கம் அடுத்த எல்லையை பார்த்துவிட்டால் எவ்வளவு அசிங்கம் ?
உங்களுக்கு எவ்வளவு மூளை, அறிவு அதிகம் இருந்தாலும் பெண்களே....கணவனிடம் கொஞ்சமாவது மக்காக நடியுங்கள். அடக்கி வாசியுங்கள். இது மிக மிக முக்கியம். ஆண் தன்னைவிட மிக தீவிர அறிவு உடைய பெண்களை தலைவியாக பார்ப்பார்கள்....மனைவியாக கொஞ்சம் ..கஷ்டமே. அடிப்படை போட்டி ஹோர்மோன் ....மற்றும் இதுவும் ரொம்ப மெடூரெட் மன உணர்வு நிலையில் நல்ல முதிர்ச்சி பெற்ற ஆண் மட்டும் கொஞ்சம் விதிவிலக்கு
பிறந்த வீட்டிலிருந்து வரும் அழைப்புகள், பிரச்சனைகளை முடிந்த வரையில் கணவன் காதுக்கு எடுத்து செல்ல தேவையே இல்லை! இது அவர்களுக்கு "ஆரம்பிச்சுட்டாங்க பா மியூசிக் ....பிறந்த இடம் பெருமையா ? இன்னும் என்ன வேண்டி இருக்கு....." இது தோன்ற வாய்ப்புகள் மிக அதிகம்....
நம் அப்பா நம்மை தானம் அல்லது தாரை வார்த்து கொடுத்து விட்டார்கள்....அதாவது....தானம் சென்ற மாடு, முதல் வேலை எஜமானை தான் பார்க்கணும்.....இது கஷ்டம் தான்! ஆனால் இந்த ஒண்ணு புரிந்தால் பல பல பிரச்சனை வராது..
ஆண்கள் 5 வயதில் அம்மாவை இழந்திருந்தால் கூட...இல்லை 70 வயது வரை அம்மா கூட இருந்தாலும்....எந்த நிலையிலும் அவர்கள் அம்மா மீது தீவிர அன்பு, பக்தி, தியானம் எல்லாம் உள்ளவர்கள். உங்களுக்காக அம்மா பத்தி தப்பு சொன்னால் கூட கொஞ்சம் கேட்டுக்கலாம்...."சரி பாவம் புதுசு பழகட்டும் / இல்லை விதி / இல்லை எதுக்கு சண்டை " ஆனால் மிக பெரிய உண்மைகளில் ஒன்று அவர்கள் அம்மாவே அவர்களுக்கு முதல் தெய்வம்! இந்த பந்தத்தை மட்டும் புரிந்து கொண்டால்...."நான் பெருசா அம்மா பெருசா? டவுட் வரவே வராது பெண்களுக்கு....!!"
நமக்கு நம் அப்பா பிடிக்குது இல்ல? பிராய்டு ஜுங் எல்லா உளவியல் மேதை சொன்னதையும் ஓட்டி பாப்போம்....ஆண்களுக்கு தாய் மிக முக்கியம்...
ஓர் ஆண் வீட்டுக்கு வந்த உடனும் அல்லது வெளியில் செல்வதுக்கு முன், உங்கள் குற்றம் குறையை கம்பிளைன்ட் இதனை அந்த அரை மணி நேரம் தயவு செய்து அடுக்காதீங்க....
"ஏன் டா வரோம் ...இந்த எண்ணமே....அவர்களுக்கு இன்னொருத்தியை தேட தூண்டும்!!!"
அளவுக்கு மீறின கோபம் / பொறாமை / எரிச்சல் / தனதாக்கி கொண்டு உரிமை (போஸ்சஸிவ்) இப்படி கசக்காதீங்கள் அது காதலனோ கணவனோ....கொஞ்சம் வருஷம் வேணா உண்மையா இருப்பாரு....ஆனால் தொடர்ந்தால் அவர்கள் இன்னொருத்தி அல்லது பிரிவினைக்கு போய்டுவாங்க இல்லையா? மது ...போன்ற அனைத்து அடிக்ஷன் தேடி போக வாய்ப்பு மிக மிக அதிகம். பெண் அதாவது மனைவி அல்லது காதலி தான் அவங்க உலகம் என்று இல்லை....அவர்கள் உலகத்தில் நிச்சயம் பெரிய இடம் உண்டு ஆனால் அவர்கள் உலகமும் மிக பெரிது....அந்த space கொடுக்க வேண்டும்
பொதுவாக ஆண் கோபமாக இருக்கும் நேரத்தில் "ஏங்க ஏன் கோபம் ..." இதுவா ? அதுவா? இதுவா?இப்படியே நச்சரித்தால் கோபம் 108 டிகிரியை தாண்டும்!" பொளிச்சுனு அரை விடுவாங்க....இல்லேன்னா தன்னையே காயப்படுத்திப்பாங்க.....கோபமாக மூட் அவுட் இருந்தால்.....தானாக சொல்லும் வரை நச்சரிக்க வேண்டாம்....இது மிக பெரிய ஆண்கள் பற்றிய உளவியல் விஷயம்.....அல்லது சொல்லவே இல்லையா? விட்டு விடுங்கள்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக