ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

கேள்வி :...ஒருவர் நம்மை அவமதிக்கும் போது யாருக்கும் பாதிப்பு இல்லாமல் அதை எப்படி கடந்து செல்லலாம்?

என் பதில் :...

ஒருவர் நம்மை அவமதிக்கும் போது யாருக்கும் பாதிப்பு இல்லாமல் அதை எப்படி கடந்து செல்வது என்பது எனது பாணியில் ஒரு திரைப்பட காட்சியின் மூலம் விளக்குகிறேன்.

2007 -ல் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த "குரு" படத்தின் ஒரு காட்சியில் வரும் வசனமிது.

நாயகன் இன்னொருவரால் அவமதிக்க பட அதற்கு நாயகனின் நண்பன் எதிர்வினை ஆற்ற, இந்த செயலால் கோபப்படும் நாயகன் கோவத்தோடு நண்பனிடம் பேசும் அந்த காட்சியில் உள்ள வசனத்தை சிறிது மாற்றி இந்த கேள்விக்கு பதிலாக எழுதியுள்ளேன்.

நண்பன்: அவனுங்க உன்ன அவமானப்படுத்திட்டே இருக்காங்கப்பா.

நாயகன்: அதனால?(கோவமாக )

நண்பன்: சும்மா பயமுறுத்தினேன்.அவ்வளவுதான்.அவுங்களுக்கு பாடம் கத்து குடுக்க வேண்டாமா?

நாயகன்: நீ செஞ்ச காரியத்துக்கு உன்ன தொலைச்சு கட்டியிருப்பேன்.

நண்பன்: யாரவது நம்மள பார்த்து கல் வீசுனா ஒன்னும் பேசிடவும் கூடாது ஒன்னும் செஞ்சிடவும் கூடாது .பேசாம சும்மா இருக்கணும் அப்படி தான?

நாயகன்:சும்மா இருக்க வேணாம் முன்னேறி போ.

அப்படி நம்மள அவமானப்படுத்துறவன் படுத்தட்டும்,திட்டுறவன் திட்டட்டும்,கல் எரியுறவன் கல் எரியட்டும்.

நேத்து நடந்ததை பேசிகிட்டு இருப்பானுக.நம்ம நாளைய காரியத்தை நோக்கி முன்னேறி போய்கிட்டே இருப்போம்.

பிறந்ததில் இருந்து நம்ம பார்க்காத தடையா?

ஒருத்தன் நம்மள அவமதிப்பதால் நம்ம வாழ்க்கை அதோட நின்னு போயிடாது...

இந்த மாதிரி வர தடைகளை கடந்து புறந்தள்ளி போய்ட்டேயிருக்கணும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக