கேள்வி :..சீனா நாடு தற்போது இந்த வைரஸ் நோயில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்புவது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
பதில் :....
சீன நாடு இயல்பு நிலைக்கு திரும்பியது என்று ஊடகங்களும், சீன அரசும் தான் சொல்லிக் கொண்டிருக்கிறது. ஆனால் உலக பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பாதது வரைக்கும் சீனாவும் கொரோனா பதிப்புகளில் தான் இருக்கும்.
எனது நண்பர் சிங்கப்பூரில் இருந்து செயல்படும் ஒரு மின்னணு உபகரணங்கள் விற்பனை செய்யும் சீன நிறுவனத்தில் வர்த்தக பிரிவில் இருக்கின்றார். சாதாரணமாக அவரின் ஒரு வாடிக்கையாளர் நிறுவனம் ஒரு மாதத்திற்கு 15 லட்சம் அமெரிக்க டாலர் அளவிற்கு இறக்குமதி செய்யும். கொரோனா பாதிப்பு சீனாவில் தீவிரமாக இருக்கும் பொழுது அவரால் வடிக்கையாளர்க்கு ஏற்றுமதி செய்யப்பட்ட அளவு 8 லட்சம் அமெரிக்க டாலர்கள் தான்.
இப்பொழுது அவரின் வாடிக்கையாளர் இருக்கும் நாட்டில் கொரோனா தொற்று ஏற்பட்டு உற்பத்தி முடங்கியதால் வாடிக்கையாளர் இறக்குமதியை நிறுத்திவைத்துவிட்டார். இப்பொழுது எனது நண்பரின் இந்த மாத விற்பனை எதுவும் இல்லை. அடுத்தமாதம் அந்த வாடிக்கையாளர் திரும்பவும் வாங்கிவிடுவார் என்ற நம்பிக்கை கொரோனாவின் ஊரடங்கு உத்தரவை பொறுத்தே அமையும்.
போன மாதமே என் நண்பரின் அலுவலகத்தில் மாதத்திற்கு நான்கு நாட்கள் சம்பளம் இல்லாத விடுப்பு எடுக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள் (இதே போன்று பெங்களூரில் வேலை பார்க்கும் எனது தோழிக்கு 3மூன்று மதம் 50% தான் சம்பளம் என்று சொல்லி வீட்டில் இருந்து வேலைபார்க்க சொல்லிருக்கிறார்கள் )
இப்பொழுது நீங்களே முடிவு செய்யுங்கள், சீனாவில் இயல்பு நிலை திரும்பியதா இல்லையா என்று. உலக பொருளாதாரம் முடங்கியது சீனாவிற்கு சுற்றுலா பயணிகள் வரவில்லை, அவர்களின் இறக்குமதியாளர்களின் நாடுகள் எல்லாம் முடங்கிக்கிடக்கிறது, அப்படி இருக்கும்பொழுது எப்படி உற்பத்தியை தொடங்க முடியும். உற்பத்தி இல்லாமல் சீனாவில் எப்படி இயல்புநிலை திரும்பும்?
கொரோனாவின் தொற்று தாக்குதலில் இருந்து கொஞ்சம் மீண்டிருப்பார்கள் அவ்வளவே, இயல்பு நிலை திரும்பிருக்கிறது என்று சொன்னால் நீங்கள் யாரு என்ன சொன்னாலும் நம்புகிற அளவு அப்பாவியா இருக்கிறீர்கள் என்று அர்த்தம்..
பதில் :....
சீன நாடு இயல்பு நிலைக்கு திரும்பியது என்று ஊடகங்களும், சீன அரசும் தான் சொல்லிக் கொண்டிருக்கிறது. ஆனால் உலக பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பாதது வரைக்கும் சீனாவும் கொரோனா பதிப்புகளில் தான் இருக்கும்.
எனது நண்பர் சிங்கப்பூரில் இருந்து செயல்படும் ஒரு மின்னணு உபகரணங்கள் விற்பனை செய்யும் சீன நிறுவனத்தில் வர்த்தக பிரிவில் இருக்கின்றார். சாதாரணமாக அவரின் ஒரு வாடிக்கையாளர் நிறுவனம் ஒரு மாதத்திற்கு 15 லட்சம் அமெரிக்க டாலர் அளவிற்கு இறக்குமதி செய்யும். கொரோனா பாதிப்பு சீனாவில் தீவிரமாக இருக்கும் பொழுது அவரால் வடிக்கையாளர்க்கு ஏற்றுமதி செய்யப்பட்ட அளவு 8 லட்சம் அமெரிக்க டாலர்கள் தான்.
இப்பொழுது அவரின் வாடிக்கையாளர் இருக்கும் நாட்டில் கொரோனா தொற்று ஏற்பட்டு உற்பத்தி முடங்கியதால் வாடிக்கையாளர் இறக்குமதியை நிறுத்திவைத்துவிட்டார். இப்பொழுது எனது நண்பரின் இந்த மாத விற்பனை எதுவும் இல்லை. அடுத்தமாதம் அந்த வாடிக்கையாளர் திரும்பவும் வாங்கிவிடுவார் என்ற நம்பிக்கை கொரோனாவின் ஊரடங்கு உத்தரவை பொறுத்தே அமையும்.
போன மாதமே என் நண்பரின் அலுவலகத்தில் மாதத்திற்கு நான்கு நாட்கள் சம்பளம் இல்லாத விடுப்பு எடுக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள் (இதே போன்று பெங்களூரில் வேலை பார்க்கும் எனது தோழிக்கு 3மூன்று மதம் 50% தான் சம்பளம் என்று சொல்லி வீட்டில் இருந்து வேலைபார்க்க சொல்லிருக்கிறார்கள் )
இப்பொழுது நீங்களே முடிவு செய்யுங்கள், சீனாவில் இயல்பு நிலை திரும்பியதா இல்லையா என்று. உலக பொருளாதாரம் முடங்கியது சீனாவிற்கு சுற்றுலா பயணிகள் வரவில்லை, அவர்களின் இறக்குமதியாளர்களின் நாடுகள் எல்லாம் முடங்கிக்கிடக்கிறது, அப்படி இருக்கும்பொழுது எப்படி உற்பத்தியை தொடங்க முடியும். உற்பத்தி இல்லாமல் சீனாவில் எப்படி இயல்புநிலை திரும்பும்?
கொரோனாவின் தொற்று தாக்குதலில் இருந்து கொஞ்சம் மீண்டிருப்பார்கள் அவ்வளவே, இயல்பு நிலை திரும்பிருக்கிறது என்று சொன்னால் நீங்கள் யாரு என்ன சொன்னாலும் நம்புகிற அளவு அப்பாவியா இருக்கிறீர்கள் என்று அர்த்தம்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக