வியாழன், 9 ஏப்ரல், 2020

கேள்வி :..எப்படிப்பட்ட எண்ணங்கள் நம் வாழ்க்கையையே தொலைத்துவிடும்?

என் பதில் :...

*நல்ல வாழ்கை துணை (மனைவி அல்லது கணவன்)அமையாத போது திருந்தி விடுவார்கள் திருந்தி விடுவார்கள் என்று காலத்தை கடத்தும் எண்ணங்கள் நம் வாழ்கையை மட்டுமின்றி குடும்பத்திலுள்ளவர்களின் வாழ்க்கையையும் தொலைத்துவிடும்.உதாரணமாக விவசாயிகளுக்கு மழையில்லையேல் அவ்வருடங்கள் மட்டுமே இழப்பு.ஆனால் நல்ல வாழ்கை துணை அமையவில்லையென்றால் வாழ்நாள் முழுவதுமே இழப்பு.அதனால் நல்ல வாழ்கை துணை அமையவில்லையென்றாலும் அந்த அமைந்த வாழ்கை துணையை சரி செய்து நல் வாழ்கை வாழ்வது நம் கையில் உள்ளது என நான் நினைக்கின்றேன்.

*தற்பெருமை மற்றும் தான் என்ற கர்வம் கொண்ட எண்ணங்களால் வாழ்கையை தொலைத்து விட நேரிடும்.


*பிறரை அழிக்க நினைக்கும் எண்ணங்கள் தன்னுடைய வாழ்கையை மட்டுமல்ல தன் வம்சங்களின் வாழ்கையையும் தொலைத்துவிட நேரிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக