இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ...
கொங்கு மண்ணின் அறிவியல் விஞ்ஞானி மயில் சாமி அண்ணாதுரை அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ...
விண்வெளி ஆய்வு வித்தகர்
டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை
பிறந்த நாள் இன்று ஜூலை 2(1958)
,,,,,,,,,,,,,,,,,,
1.தமிழ்நாட்டைச் சேர்ந்த விண்வெளி
ஆய்வுப்பொறியியலாளர்.
2.இவரே முதன்முதல்நிலாவுக்கு
ஆய்வுக்கலம் அனுப்பிய சந்திரயான்-1
திட்டத்தின் செயல்திட்ட இயக்குனர்.
3.இவர் கோயம்புத்தூர்அரசு பொறியியல்
கல்லூரியில்தனது பொறியியல்
இளங்கலைக் கல்வியைக்கற்றார்.
4.கோயம்புத்தூர் பூ.சா. கோ. தொழில்நுட்பக்
கல்லூரியில்பொறியியலில் முதுநிலைப்
பட்டம் பெற்றார்.
5அண்ணாதுரை இதுவரை ஐந்துமுனைவர்
பட்டங்களைப்பெற்றுள்ளார்.
6.அண்ணாதுரை தனது விடுமுறை நாட்களில்
பள்ளி மற்றும்கல்லூரி மாணவர்களுடன்
செலவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
7.மாணவர்களும்அவரது பேச்சை மிகவும்
ஆவலுடன் கேட்கின்றனர்.
8.அதனால் இவர் "இளைய கலாம்"என்று
அன்புடன்அழைக்கப்படுகிறார்.
9.தற்போதையஇளைஞர்களுக்கு வழிகாட்டும்
வகையில்,"கையருகே நிலா" என்னும்
தலைப்பில் தமது தொடக்கநாட்கள், சந்திரயான்
பணி ஆகியவை அடங்குவதான நூல்ஒன்றை எழுதியுள்ளார்.
10.இந்தியாவின் முதல்செவ்வாய்ப் பயணம்
பற்றியதொடர்கட்டுரை ஒன்றைத்
தமிழ்நாளிதழான தினத் தந்தியில்,"கையருகே செவ்வாய் " என்றதலைப்பில் வாரந்தோறும்
ஞாயிறன்று எழுதி அது புத்தகமாகவும்
வெளிவந்து மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
11.தமிழகப் பள்ளிக்கல்வியின்பத்தாம் வகுப்பு அறிவியல்பாடப் புத்தகத்தில்மயில்சாமி
அண்ணாதுரை அவர்களின் வாழ்க்கைக்
குறிப்பு இடம்பெற்றுள்ளது ஒரு சிறப்பாகும்.
பிறப்பும் கல்வியும்...
12. 1958ஆம்ஆண்டு ஜூலைத்திங்கள்
இரண்டாம்நாள் கோவை மாவட்டம்
பொள்ளாச்சித்தாலுகா கோதாவடி கிராமத்தில்
திரு.மயில்சாமி செங்குந்தர் திருமதி.பாலசரசுவதி
அம்மையார் இணையருக்கு மகனாய்ப்
பிறந்தார்.
13.பதினோராம்வகுப்பு வரையானதனது
அடிப்படைக்கல்வியைத் தாய்மொழியாம்
தமிழில் அரசாங்கப்பள்ளிகளிலேயே படித்தவர்.
14.புகுமுகவகுப்பை பொள்ளாச்சி நல்லமுத்துக்
கவுண்டர் மகாலிங்கம் கல்லூரியிலும்,
15.பொறியியல் இளநிலையைப்பட்டப்
படிப்பை அரசு தொழில்நுட்பக்கல்லூரியிலும்
பொறியியல் முது நிலைப்பட்டப் படிப்பை
கோவை பூ.சா.கோ.தொழில் நுட்பக்கல்லூரியிலும்
முடித்தார்.
16.பொறியியல் முனைவர்பட்டத்தை அண்ணா
தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பெற்று,
முழுக்க முழுக்கத்தமிழகத்திலேயே தனது
கல்வியைப் படித்தவர் இன்றைய இந்த
நிலவுத் தமிழர்.
17.விண்வெளித் தொழில்நுட்ப ஆய்வுக்
கழகத்தில்1982ஆம் ஆண்டு இந்திய அறிவியல்
ஆய்வராச் சேர்ந்து,தனது தளராத உழைப்பாலும்
பற்பல கண்டுபிடிப்புகளாலும் படிப்படியாக
உயர்ந்தார்.
18.இந்திய விண்வெளி ஆய்வின் ஒரு முக்கிய அறிவியலாளராகத்தனது பெயரைப்
பதித்துள்ளார்.
19.எட்டு இந்தியதேசிய செயற்கைக்கோள்களின்
செயல் திட்டஇயக்குனராகச் சிறப்பாகப்
பணி புரிந்தபின்2004இல் இந்தியாவின் முதல் நிலவுக்கலத்திட்டத்தின்இயக்குனராக உயர்ந்தார்.
20. கிட்டத்தட்ட 3000 இந்திய மற்றும் சர்வதேச
அறிவியலாளர்களைத்தலைமை தாங்கி நிலவில்
நீர்கண்டு பிடித்தது ஒரு வரலாற்று நிகழ்வு.
21.சந்திரயான்-1 திட்டத்தின்வெற்றிக்குப் பின்,
இந்தியாவின் முதல் நுண்ணலைத் தொலையுணர்வு
செயற்கைக் கோள் உட்படஅனைத்துத் தொலையுணர்வு
செயற்கைக் கோள்கள்,
22.இந்தியாவின்முதல்செவ்வாய்ப்பயணச்
செயற்கைக்கோள்,
23.இந்தியாவின் இரண்டாவது நிலவுப் பயணம்
போன்ற அறிவியல் செயற்கைக் கோள்களுடன்
இந்தியக் கல்லூரி மாணவர்களின் செயற்கைக் கோள்கள் எனப்பெரிய செயற்கைக்கோள்ப்
பட்டாளத்தின்தலைமைத் திட்டஇயக்குனராக
உயர்ந்தார் முனைவர் திரு.மயில்சாமி அண்ணாதுரை.
24.இன்னும் பத்து ஆண்டுகள்இவரது செயல்முறை ஆய்வுப்பணிகள்தொடர வாய்ப்புக்கள் இருப்பது இன்னும்ஒரு சிறப்பு.
தமிழ்ப்பணி,,,,,,,,.
25. தனது அறிவியல்பணிக்கு வெளியில்
தாய்த்தமிழ் மீது பற்றும் தணியாத தாகமும்
கொண்டவர் திரு.மயில்சாமி அண்ணாதுரை.
26. 'வளரும் அறிவியல்' என்று தமிழில்
வெளிவரும் அறிவியல் மாதஇதழின்
கௌரவ ஆசிரியர்.
27.தமிழிலும் ஆங்கிலத்திலும் மிகுந்த புலமை
கொண்ட சிறந்தபேச்சாளர், கவிஞர்,
கட்டுரையாளர். மனிதநேயம்கொண்ட
சிறந்த மனிதர்.
28.சனி,ஞாயிறுகளில் பள்ளி மற்றும்
கல்லூரி மாணவர்களிடையேபேசுவதை
வழக்கமாகக்கொண்டிருக்கிறார்.
29.ஓய்வு நேரங்களில்முகநூலின் மூலம் இளைய
சமுதாயத்திடம்தொடர்பு கொண்டு கணிணி
வாயிலாய், அறிவியல்பார்வை மற்றும் சமூகப்
பணியுடன்தமிழார்வத்தையும்ஊட்டி வருகிறார்.
30.இந்திய நகரங்களின் பலதமிழ்ச்சங்கங்களிலும்,
அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர்த் தமிழ்அமைப்புகளிலும்
அறிவியல் தமிழில் சிறப்புரை ஆற்றியுள்ளார்.
31.கோவைச்செம்மொழி மாநாட்டில்முப்பது அறிவியலாளர்களைக்கொண்டு தலைலை
தாங்கி நடத்திய “அறிவியல் தமிழ்.ஆய்வரங்கம்” எல்லோராலும்tபேசப்பட்ட ஒன்று.
32.இவரது இளமை,கல்வி மற்றும் விண்வெளி
ஆய்வு அனுபவங்களடங்கிய“கையருகே நிலா”
என்றபுத்தகமும், “அரசுப்பள்ளி பாழல்ல
அன்னைத்தமிழும் பாழல்ல”என்ற இவரது
கவிதையும் ,தமிழகப் பள்ளி மாணவர்களால்
அதிகம் படிக்கப்படுகிறது.
33.தமிழகப்பள்ளி இறுதி வகுப்பு அறிவியல்
புத்தகத்தில்இவரது வாழ்க்கைக்குறிப்பும்
அறிவியல்பணியும் குறிப்பிடப்பட்டிருப்பது
ஒரு சிறப்பாகும்.
பெற்ற பட்டங்களும்சிறப்புக்களும்,,,,,,,,
34.மயில்சாமி அண்ணாதுரை இது வரை
ஐம்பதுக்கும்மேற்பட்ட பரிசுகளைப்பெற்றுள்ளார்.
35.அவற்றில் சில
பரிசுகளும் பட்டங்களும்,,,,,,,
- கர்மவீரர் காமராசர்நினைவு விருது
- நான்கு இந்தியவிண்வெளி ஆய்வு
விருதுகள்.
- ஐந்து முனைவர் பட்டங்கள்.
- சந்திரயான்-1திட்டத்திற்காகமூன்று சர்வதேச விருதுகள்.
- ஆஸ்திரேலியா-இந்தியா இன்ஷ்டட்ியூட்டின்
மேல்னிலை விருது.
- சர்.சிவி.இராமன் நினைவு அறிவியல்
விருது.
- ஹரி ஒம் ஆஷ்ரம் ப்ரடிட்விகரம் சாராபாய்
அறிவியல் ஆய்வு விருது.
- கர்நாடக மாநிலஅரசின்அறிவியலுக்கான விருது.
- எச்.கே..ப்ரோடிய தேசியஅறிவியல் விருது.
- தேசிய ஏரோநாட்டிகல்அறிவியல் தொழில் நுட்ப
விருது.
- ஸ்ரீசந்திரசேகரேந்திரசரஸ்வதி தேசிய அறிவியல்
விருது.
- அமர பாரதி தேசியஅறிவியல் விருது.
- தேசிய தரமையத்தின் பஜாஃஜ் நினைவு விருது.
- கொங்குச் சாதனையாளர்விருது.
- தமிழ் மாமணி விருது ., திருப்பூர்தமிழ்ச்சங்கம்.
- அறிவியல் அண்ணா விருது ,கர்நாடகா
தமிழ்பேரவை,ஹுப்ளி.
-டாக்டர் இரஜா சர்முத்தையா செட்டியார்
பிறந்த நாள் நினைவுப்பரிசு 2012.
- தமிழ்நாடு செங்குந்தர் மகாஜன சங்கம் சார்பில் கௌரவிக்கப்பட்டார்.
36. . தற்போது தமிழ்நாடு அறிவியல் தொழில்
நுட்ப அமைப்பின் (கவுன்சிலின் TNSCST) துணைத்
தலைவர் பதவி வகிக்கிறார்.
அவர் எல்லா நலன்களும் பெற்று இந்திய
அறிவியல் , விண்வெளித் துறையில்
மேலும் பல சாதனை புரிய வேண்டும் என்று
வாழ்த்தி மகிழ்வோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக