வெள்ளி, 16 ஜூலை, 2021

அச்சுத்தொழில்துறையில் பெண்கள் ....


அச்சுத்தொழில்துறையில் பெண்கள் ....

நமது இந்தியாவை பாளையப்பட்டு மன்னர்கள் ஆட்சி செய்து வந்த கால கட்டத்தில் செய்திகளும் கடிதங்களும் இலைமற்றும் ஓலைகளில் எழுதி அனுப்பப்ட்டு வந்தது.
அல்லது வரலாற்று நிகழ்வுகளை கல்வெட்டுகளில் செதுக்கி வைத்தனர் அந்த காலகட்டத்தில் அச்சு தொழில்நுட்பத்தின் (Printing Technology) அதிகபட்ச வளர்ச்சியாக அது தான் இருந்து வந்தது.
பின்பு சற்று முன்னேரி தட்டச்சு(Type Writer) மூலமாக செய்திகளும் வரலாறுகளும் பதிவு செய்யப்பட்டுபாதுகாக்கப்பட்டது.
இன்று அனைத்து துறையும் கணிணி மயமாக்கப்பட்டதால் அனைத்து செய்திகளும் பிரிண்டர்கள் மூலம்அச்சு பிரதியாக எடுத்து பாதுகாக்கப்பட்டு வருகின்றது.
காலப் போக்கில் இந்த அச்சு தொழில் நுட்பம் அனைத்து நிறுவனங்களிலும் இன்றியமையாத ஒன்றாகமாறிவிட்டது.
ஒரு காலத்தில் தட்டச்சு மூலம் மட்டும் உருவாக்கப்பட்டு வந்த அச்சு பிரதிகள் இந்த வளர்ச்சியின் காரணமாக பல விதமான பிரிண்டர்கள் மூலமாக பல விதமான தரத்தில் வெளிவந்து கொண்டு இருகின்றது.
முன்பு ஒரு காலத்தில் விளம்பரங்கள் ஒரு காகிதத்தில் எழுதப்பட்டு சுவற்றில் ஒட்டப்பட்டு மக்களுக்கு தெரியப்படுத்தப்பட்டு வந்தன அல்லது சுவற்றில் எழுதப்பட்டுவந்தன..
அனால் இன்று இந்த விளம்பரங்கள் அச்சு தொழில் நுட்பத்தின் வளர்ச்சியால் பரிணாம வளர்ச்சி பெற்று திரும்பும் இடமெல்லாம் பேனர்களாக காட்சி அளிக்கின்றது.
இப்படி நாளுக்கு நாள் அச்சிடுவது என்பது இன்றியமையாத ஒரு விஷயமாக மாறியதன் காரணமாக அச்சிட உபயோகப்படும் பிரிண்டர்களின் எண்ணிக்கையும் அதனை கையாள மனித வளமும் அந்த தொழில் நுட்பத்தை பற்றி அராய்ச்சி செய்ய ஆராய்ச்சியாளர்களும் அதிகம் அதிகம் தேவைபடுகின்றனர்.இந்த அச்சு பணியில் தற்பொழுது பெண்களும் பணியாற்ற அடியெடுத்து வைத்து சத்தமில்லாமல் பணியாற்றி கொண்டு இருக்கிறார் ..பொள்ளச்சியில் சசி பிரின்டிங்  சசி வர்மா அவர்களின் தந்தை காலத்தில் ஆரம்பித்து அதன் பின் அவரின் புதல்வர்  சசி வர்மா அவர்களுக்கு உதவியாக அவரின் மனைவி மணிமேகலை சசி வர்மா அவர்களும் தற்பொழுது உறுதுணையாக இருந்து வரும் காலங்களில் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு தகந்த மாதிரி புதுமையான தொழில் நுட்பங்களின் மூலம் வெற்றிகரமாக பணியாற்றி வருவது மிக்க மகிழ்ச்சி ...வாழ்த்துக்கள் பணி சிறக்க ...

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக