வியாழன், 8 ஜூலை, 2021

 கரிசல் மண்ணிலிருந்து ....பருத்தி ஆடை நகரத்து வாழ்வு ...


என்னடா சுயசரிதயான்னு நினைப்பீங்க.....
But this is a message ....
1991 ல அப்பா குடுத்த 125/- ரூபாயோட திருப்பூர் வந்தேன். Bsc degree படிச்சிருந்தாலும்..Office boy cumclerk கா, அப்பாவினுடைய நன்பர் ராதாகிருஷ்ணண் மூலியமா நூல் Depot வில , எங்க வாடகை வீட்டு Owner மூலியமா வேலைக்கு சேர்ந்தேன். பல வேலையில் பயனித்தேன்.
அப்பா கஷ்டம் எனக்கு மட்டும் தெரிஞ்சது ..நபர் 6 பேர வச்சு குடும்பம் நடத்திரது எவ்வவளவு கஷ்டம்னு!
வேலைக்கு வந்துட்டேன். அப்பாவுக்கு எப்படியாவது பணம் அனுப்பனும்...மீதமிருக்கிற சகோதரங்ள வளர்கிறதுக்கு, படிக்கிறதுக்கு நம்மளால முடிஞ்ச உதவிய பண்ணணும்னு ஆத்திரம்!
அனுப்புனேன் மாதம் Dd 200 , 250 , 300 இப்படி அப்போ! எப்படீன்னு கேட்கலாம்...நூல் மூட்டை 50 , 60 கிலோ மூட்டை தூக்கினேன்! என் சக நன்பர்களுக்கு தெரியும்! பார்ப்பாங்க! அதனாலதான் முடி என் மூன்று சகோதரர்களுக்கு இருந்தாலும், எனக்கில்லை!
அப்பாவே பாராட்டிய கடிதம் ஒரு தடவை 2000/- அனுப்பும்போது நெகிழ்ந்துபோனேன்! அப்பவே ஜெயிச்சதா உணர்ந்தேன்!
எனக்கு பெருசா ஆசபட தெரிஞ்சமாதிரி எங்கப்பா வளர்க்கல. இது கிடைச்சா போதும்னுதான் வளர்ந்தேன்! கடன் இல்லாம, வாழ்ந்தாள் போதும் என்ற என் அப்பாவின் வாழ்க்கைதான்....என்னை பெரியளவிற்கு, இல்லை என்றாலும், நிம்மதியான வாழ்க்கையை தேடவைத்தது!
பெரிய சம்பாத்தியம் என்றுமே 100%.... முறையான சம்பாத்தியத்தில் வராது!
நிம்மதியான வாழ்க்கை... அளவான தேவைக்கு போதும் என்ற மனப்பாங்கு வரும்போது கிடைத்துவிடும்! உடல் ஆரோக்கியமும் துனை நிற்க்கும்!

ஜெகவீரபாண்டியன் ......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக