கேள்வி : வாழ்க்கையை பற்றி இன்று நீங்கள் புதிதாக என்ன தெரிந்து கொண்டீர்கள்?
என் பதில் :
நம்ம மைன்டை கடவுள் கிறுக்குத்தனமாக டிஸைன் பண்ணியிருக்கிறார்ன்னு நினைக்குறேன்.
நிறைய சந்தர்ப்பங்களில் நம்ம மைன்ட் யோசிக்கும். என்னடா வாழ்க்கை வாழறோம். நிம்மதியில்லை, சந்தோஷம் இல்லை. யார் யாரோ நல்லாயிருக்காங்க. எதுக்கு இந்த வாழ்க்கையை வாழ்ந்துட்டு, இறந்துட்டா நிம்மதியாயிருக்கும். இப்படி யாராவது பேசி நாம கேட்டிருப்போம். சில சமயத்துல நமக்கே இப்படியொரு யோசனை வரும்.
நமக்கு லைப்ல சின்ன சின்ன பிராப்ளம் வரும் போது அதை கையாள முடியாமல் இப்படி மைன்ட் நம்மை நெகட்டிவ்வாக யோசிக்க வைக்கும்.
ஆனா உண்மையிலேயே உயிர் போற சிச்சுவேஷன் நமக்கு வரும் போது நம்ம மைன்ட் பாசிட்டிவ்வாக யோசிக்கும். அதான் வேடிக்கை.
நான் வாழனும். வாழ்க்கையில் யாருக்கு தான் பிரச்சனையில்லை. என்னை விட எத்தனையோ பேர் மோசமான நிலையில் இருக்காங்க அவங்களாம் வாழ்க்கையில் போராடுறாங்க. எனக்கு என்ன குறைச்சல். இப்படி பாசிட்டிவ் எண்ணங்கள் ஓட ஆரம்பிக்கும்.
நம்ம வாழ்க்கையே முடிய போகுதோன்னு ஒரு நிலை வரும் போது தான் வாழுற வாழ்க்கையோட வேல்யூ தெரியும். இவ்வளவு நாள் எவ்வளவு அலட்சியமாக வாழ்க்கையை எடுத்துக்கிட்டோம்னு நினைச்சு வருத்தப்படுவோம். இன்னும் வாழ்க்கையை முழுமையாக வாழனும்னு தோணும்.
அதனால ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் இது தான் வாழ்க்கையின் கடைசி நொடின்னு நினைச்சி வாழ்ந்தால், வாழ்க்கையை பாசிட்டிவாகவும், முழுமையாகவும் வாழலாம்.
நன்றி ...
https://youtu.be/W6zSO7kQZNI
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக