ஞாயிறு, 17 நவம்பர், 2019

பெற்றோருக்கு ஒரே குழந்தையாக இருப்பதில் உள்ள சிறந்த மற்றும் மோசமான விஷயங்கள் யாவை?

சுட சுட மட்டன் பிரியாணியை இலையில் வைத்தது போல ஒரு கேள்வி…..

இந்த கேள்விக்கு நான் விடை அளிக்கிறது தான் கரெக்ட் ஆஹ் இருக்கும்னு நெனைக்கிறேன்…. ஏன்னா…?நானெல்லாம் வீட்டுக்கு ஒரே புள்ளை….நோ அண்ணன் ,நோ அக்கா ,நோ தம்பி, நோ தங்கச்சி….

நானே ராஜா நானே மந்திரி…

சிறந்த பதில் …


நீங்க கேட்டது எல்லாம் கிடைக்கும்…(ட்ரெஸ், உணவு, ஸ்கூல் ,காலேஜ்)

எந்த தொல்லையும் இருக்காது(அண்ணா, அக்கா,தம்பி,தங்கச்சி)

சுதந்திரமாக இருக்கலாம்

என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.

பணிவிடை எல்லாம் கேட்காமலே வரும்…

உடம்பு சரி இல்லை என்றால் பிளாட்டினம் தட்டில் வைத்து தங்குவார்கள்…

ஒரே புள்ளை என்பதால் எல்லாத்துலையும் அக்கறை கொஞ்சம் அதிகமா இருக்கும்…

மோசமான விடயம்

படிக்கவில்லை என்றால் திட்டு அடி உண்டு…சரியாக சாப்பிடவில்லை என்றாலும் திட்டு உண்டு

2 பேரும்(அப்பா அம்மா)கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி கொண்டு கவனிப்பார்கள்…

தப்பு செய்தால் நிச்சயம் தண்டனை….

வீடுவேலை எல்லாம் செய்யணும்
ஸ்ட்ரிக்ட் ஆஹ் இருப்பாங்க….

எங்க போனாலும் வந்தாலும் சொல்லிட்டு போகணும்…

அவர்கள் வேலைக்கு போய்ட்டாங்கனா ,பேச்சு துணைக்கு கூட ஆள் இருக்காது..

ரொம்ப நேரம் tv, cell, எல்லாம் பார்க்கமுடியாது…..

அவ்ளோவ் தான் நெனைக்கிறேன்…..

நன்றியுடன்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக