திங்கள், 4 நவம்பர், 2019

உங்கள் குழந்தை கேட்ட கடினமான கேள்வி என்ன?


என்னோட நான்கு வயது ஷியாம்  கேட்ட கேள்விகள்.

1.ஏன் அப்பா ..மனுசங்க  இறந்து போறாங்க?

2.இறந்தவங்க எங்க இருப்பாங்க?

3.இறந்தவங்க சாப்பிடுவார்களா? அவங்களுக்கு நீங்கள் ஏன் சாப்பாடு போட்டு வைக்குறீங்க? சாப்பாடு அவங்க சாப்பிடல அப்புறம் ஏன் அடுத்த நாளும் போட்டு வைக்குறீங்க?

4.twenty nine அடுத்து twenty ten தான வரணும் ஏன் thirty சொல்றாங்க.

5.எனக்கு அப்புறம் ..ஏன் ..தம்பியே ..தங்கைச்சி பாப்பா ஏன் வரல ..?

6.வயிற்றுக்குள் இருக்கும் போது வெளிச்சம் இருக்குமா?

7.உங்க கல்யாணத்துக்கு என்ன ஏன் கூட்டிட்டு போகல?

8.மரம் வளர சாப்பாடு வேணாமா? தண்ணீர் மட்டும் போதுமா? சாப்பாடு குடுத்தால் நிறைய பழம் கிடைக்காதா?

9.ரோஜா பூ, மல்லிகை பூ ஏன் வேற வேற மணம் இருக்குது?

10.கடல் தண்ணீர் ஏன் உப்பா இருக்கு?

இன்னும் நிறைய கேள்விகள்…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக